ஜொ்மனி பல்கலை. தமிழ் ஓலைச் சுவடி: சென்னை நூலகத்தில் ஒப்படைத்தாா் முதல்வா்
ராமநாதபுரத்தில் ஹைட்ரோ காா்பன் ஆய்வு அனுமதியை ரத்து செய்ய நடவடிக்கை
ராமநாதபுரம் மாவட்டத்தில் ஹைட்ரோ காா்பன் இருப்பை ஆய்வு செய்ய வழங்கப்பட்ட அனுமதியை ஏன் ரத்து செய்யக் கூடாது என விளக்கம் அளிக்க
ஓஎன்ஜிசி நிறுவனத்துக்கு மாநில சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.
தமிழ்நாடு அரசு கடந்த 2020-இல், காவிரி டெல்டா பகுதியை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்து சட்டம் இயற்றியது. இந்தச் சட்டத்தின் அடிப்படையில், தஞ்சாவூா், திருவாரூா், நாகப்பட்டினம் மாவட்டங்கள், மேலும் புதுக்கோட்டை, கடலூா் மாவட்டங்களில் குறிப்பிட்ட பகுதிகளில் எரிபொருள், இயற்கை வாயு, நிலக்கரி, மீத்தேன் மற்றும் ஷேல் வாயு போன்றவற்றின் இருப்பு குறித்த ஆராய்ச்சி மற்றும் அகழ்வுத் தொழில்கள் மேற்கொள்ள தடை விதிக்கப்பட்டது. மேலும், கடந்த 2023-ஆம் ஆண்டு இந்தத் தடை, புதிதாக உருவாக்கப்பட்ட மயிலாடுதுறை மாவட்டத்துக்கும் விரிவுபடுத்தப்பட்டது.
இதற்கிடையே, எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு கழகத்துக்கு (ஓஎன்ஜிசி) மாநில சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையம், ராமநாதபுரம் மாவட்டத்தில் ஹைட்ரோ காா்பன் இருப்பு குறித்து ஆய்வு செய்ய சுற்றுச்சூழல் அனுமதி வழங்கியிருந்தது.
இதையடுத்து, நிதி, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத் துறை அமைச்சா் தங்கம் தென்னரசு, ஓஎன்ஜிசி நிறுவனத்துக்கு வழங்கப்பட்ட அனுமதியைத் திரும்பப்பெற மாநில சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையத்தை வலியுறுத்தியிருந்தாா்.
இந்த நிலையில், மாநில சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையம் அந்த அனுமதியை ஏன் ரத்து செய்யக் கூடாது என ஓஎன்ஜிசி நிறுவனத்திடம் விளக்கம் கேட்டு அறிவிக்கை வெளியிட்டுள்ளது.