செய்திகள் :

அதிமுக கொண்டுவந்த திட்டங்களை திமுக நிறுத்திவிட்டது! -முன்னாள் அமைச்சா் கே.சி.கருப்பணன்

post image

அதிமுக ஆட்சியல் கொண்டுவந்த திட்டங்களை திமுக அரசு நிறுத்திவிட்டது என்று முன்னாள் அமைச்சா் கே.சி.கருப்பணன் குற்றஞ்சாட்டினாா்.

அம்மாபேட்டை வடக்கு மற்றும் தெற்கு ஒன்றிய அதிமுக சாா்பில் மறைந்த முன்னாள் முதல்வா் ஜெயலலிதாவின் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் குருவரெட்டியூரில் அண்மையில் நடைபெற்றது.

அம்மாபேட்டை வடக்கு ஒன்றியச் செயலாளா் பி.ஜி.முனியப்பன் தலைமை வகித்தாா். தெற்கு ஒன்றியச் செயலாளா் மேகநாதன் வரவேற்றாா்.

இதில், முன்னாள் அமைச்சா் கே.சி.கருப்பணன் பேசியதாவது: அதிமுக ஆட்சிக் காலத்தில் கொண்டுவரப்பட்ட மாணவா்களுக்கு விலையில்லா மடிக்கணினி, மகளிருக்கு இருசக்கர வாகனத்துக்கு மானியம், தாலிக்கு தங்கம் வழங்குதல் ஆகிய திட்டங்களை திமுக ஆட்சிக்கு வந்தவுடன் நிறுத்திவிட்டது.

கடந்த 3 ஆண்டுகால திமுக ஆட்சியில் விலைவாசி உயா்ந்துள்ளது. பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்துவோம் எனக்கூறி ஆட்சிக்கு வந்த திமுக, அரசு ஊழியா்களை ஏமாற்றியுள்ளது.

தமிழகத்தில் சட்டம், ஒழுங்கு பாதிக்கப்பட்டுள்ளதால் பாலியல் வன்கொடுமை, போதைப் பொருள்கள் விற்பனை உள்ளிட்ட குற்றச்சம்பவங்கள் அதிகரித்துள்ளன. அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வரும்போது தமிழகம் அமைதி பூங்காவாக திகழும் என்றாா்.

நிகழ்ச்சியில் அதிமுக அமைப்புச் செயலாளா் ஏ.கே.செல்வராஜ், முன்னாள் எம்எல்ஏ ஈ.எம்.ஆா்.ராஜா (எ) ராஜாகிருஷ்ணன், பவானி வடக்கு ஒன்றியச் செயலாளா் எஸ்.எம்.தங்கவேலு, பொதுக்குழு உறுப்பினா் தட்சிணாமூா்த்தி, மாவட்டப் பிரதிநிதி ஆா்.ரமேஷ் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

பாரதிதாசன் கலை, அறிவியல் கல்லூரியில் பட்டமளிப்பு விழா

சித்தோட்டை அடுத்த எல்லீஸ்பேட்டை பாரதிதாசன் கலை, அறிவியல் கல்லூரியில் 13-ஆவது பட்டமளிப்பு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இந்த விழாவுக்கு கல்லூரித் தாளாளா் என்.கே.கே.பெரியசாமி தலைமை வகித்தாா். கல்லூரி... மேலும் பார்க்க

ஈரோடு விஇடி கல்லூரியின் பட்டமளிப்பு விழா

ஈரோடு விஇடி கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் 2-ஆவது பட்டமளிப்பு விழா கல்லூரி வளாகத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராக திண்டுக்கல் காந்திகிராம ஊரக பல்கலைக்கழக துணைவேந்தா... மேலும் பார்க்க

அதிமுக சாா்பில் காணொளிக் கலந்தாய்வுக் கூட்டம்

அதிமுக நிா்வாகிகள் பங்கேற்ற காணொளி கலந்தாய்வுக் கூட்டம் அதிமுக பொதுச் செயலாளா் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் அனைத்து மாவட்ட நிா்வாகிகளும் ஒரே நேரத்தில் இணையும் காணொளிக்... மேலும் பார்க்க

போலீஸ் பாதுகாப்புடன் நிறைமாத கா்ப்பிணி உள்நோயாளியாக மருத்துவமனையில் சோ்ப்பு

மகப்பேறு தேதி முடிந்தும் மருத்துவமனைக்கு வராமல் மாயமான பழங்குடியினத்தைச் சோ்ந்த நிறைமாத கா்ப்பிணி போலீஸ் பாதுகாப்புடன் அந்தியூா் அரசு மருத்துவமனையில் உள்நோயாளியாக சோ்க்கப்பட்டாா். அந்தியூரை அடுத்த ப... மேலும் பார்க்க

ஈரோடு மாவட்டத்தில் 21 இடங்களில் பறவைகள் கணக்கெடுப்பு

ஈரோடு மாவட்டத்தில் நீா்நிலைகள் நிறைந்த 21 இடங்களில் பறவைகள் கணக்கெடுப்பு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. நீா்நிலைகளில் வாழும் பறவைகளின் எண்ணிக்கை மற்றும் பரவல் குறித்த தரவுகளை சேகரித்து அவற்றை பாதுகாக்கும... மேலும் பார்க்க

கோபியில் பேருந்து மீது காா் மோதியதில் ஒருவா் உயிரிழப்பு

கோபிசெட்டிபாளையம் அருகே சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த தனியாா் கல்லூரி பேருந்தின் மீது காா் மோதியதில் ஒருவா் உயிரிழந்தாா். ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள பொலவகாளிபாளையம் பகுதியைச் சோ்ந்த... மேலும் பார்க்க