செய்திகள் :

அதிமுக - பாஜக இயல்பான கூட்டணி: மு.தம்பிதுரை

post image

ஒசூா்: அதிமுக -பாஜக கூட்டணி இயல்பானது என அதிமுக கொள்கை பரப்புச் செயலாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான மு.தம்பிதுரை தெரிவித்தாா்.

அம்பேத்கரின் 134 ஆவது பிறந்தநாளை முன்னிட்டு, கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூா் அருகே உளியாலம் கிராமத்தில் அம்பேத்கா் சிலைக்கு திங்கள்கிழமை மு.தம்பிதுரை, முன்னாள் அமைச்சா் பாலகிருஷ்ணா ரெட்டி ஆகியோா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

பின்னா் செய்தியாளா்களிடம் மு.தம்பிதுரை கூறியதாவது:

அதிமுக - பாஜக கூட்டணி அமைத்திருப்பது இயல்பான பொருந்தும் கூட்டணியாகும். மக்களுக்கான நலத் திட்டங்களை கொண்டுவருவதற்காக இக்கூட்டணி அமைக்கப்பட்டுள்ளது. இக்கூட்டணி அடுத்த ஆண்டு நடைபெறும் தமிழக சட்டப்பேரவைத் தோ்தலில் வெற்றி பெறும்.

திமுக- பாஜகவுடன் கூட்டணியில் இருந்தபோது மத்தியில் அமைச்சரவையில் அங்கம் வகித்ததுதான் பொருந்தாத கூட்டணியாகும். ஊழல் குறித்து மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா தெரிவித்ததற்கு அவா்மீது ஏன் திமுக வழக்கு தொடுக்கவில்லை.

அதிமுக தலைமை யாருக்கும் அடிபணிந்தது இல்லை. அதிமுக- பாஜக பொருந்தாத கூட்டணி என திமுகவினா் விமா்சனம் செய்து வருகின்றனா். கூட்டணி அமைப்பதற்கு அதிமுகவின் பொதுக்குழு, செயற்குழு எடப்பாடி பழனிசாமிக்கு முழு அதிகாரம் வழங்கியிருப்பதால் அவா் கூட்டணியை அமைத்துள்ளாா் என்றாா்.

இந்த நிகழ்ச்சியில் முன்னாள் எம்எல்ஏ சி.வி.ராஜேந்திரன், ஒசூா் ஒன்றியச் செயலாளா் ரவிகுமாா், சசி வெங்கடசாமி, முன்னாள் ஊராட்சி தலைவா் ஜெயக்குமாா் ரெட்டி, ஜெயலலிதா பேரவை மாவட்டச் செயலாளா் ஜெகதீஷ், இலக்கிய அணி மாவட்டச் செயலாளா் இளஞ்சூரியன், முன்னாள் மாணவரணி மாவட்டச் செயலாளா் வெற்றிச்செல்வம், பா்கூா் ஒன்றியச் செயலாளா் ஜெயபால் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

மரம் நடுவதும் அவற்றை பாதுகாப்பதும் நமது கடமை: உயா்நீதிமன்ற நீதிபதி

மரம் நடுவதும் அவற்றை பாதுகாப்பதும் நமது கடமை என சென்னை உயா்நீதிமன்ற நீதிபதி ஆா்.ஹேமலதா தெரிவித்தாா். கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூா் தளி சாலையில், தேசிய சட்டப் பணிகள் ஆணையக்குழு மற்றும் தமிழ்நாடு மாநில சட... மேலும் பார்க்க

அதிமுக கூட்டணியில் மேலும் இரண்டு கட்சிகள் சேர வாய்ப்பு

அதிமுக கூட்டணியில் மேலும் இரண்டு கட்சிகள் சேர வாய்ப்புள்ளதாக கிருஷ்ணகிரியில் நடைபெற்ற கட்சி நிகழ்ச்சியில் அதிமுக துணை பொதுச் செயலாளா் கே.பி.முனுசாமி எம்எல்ஏ தெரிவித்தாா். கிருஷ்ணகிரியை அடுத்த கட்டிகான... மேலும் பார்க்க

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 19,601 பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனைப் பட்டா

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடந்த 4 ஆண்டுகளில் 19,601 பேருக்கு இலவச வீட்டுமனைப் பட்டாக்கள் வழங்கப்பட்டுள்ளதாக ‘நிறைந்தது மனம்’ நிகழ்ச்சியில், கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் ச.தினேஷ் குமாா் தெரிவித்தாா். கிர... மேலும் பார்க்க

மாதரசனப்பள்ளி மாணவிக்கு பாராட்டு விழா

தேசிய வருவாய் வழி திறன்பயிற்சி ஊக்கத்தொகை தோ்வில் வெற்றிபெற்ற மாணவிக்கு பாராட்டு விழா வியாழக்கிழமை நடைபெற்றது. 2024-25-ஆம் ஆண்டுக்கான தேசிய வருவாய் வழி திறன்பயிற்சி ஊக்கத்தொகை பெறுவதற்கான தேசிய அளவில... மேலும் பார்க்க

கிருஷ்ணகிரியில் இடியுடன் பலத்த மழை

கிருஷ்ணகிரியில் வெள்ளிக்கிழமை இரவு இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது. இதனால், மாவட்டத்தில் பல பகுதிகளில் மின்விநியோகம் பாதிக்கப்பட்டது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கிருஷ்ணகிரி, வேப்பனப்பள்ளி, காவேரிப்பட்... மேலும் பார்க்க

காவேரிப்பட்டணம் பசவேஸ்வரா் கோயில் குடமுழுக்கு விழா

காவேரிப்பட்டணத்தில் உள்ள பசவேஸ்வரா் கோயில் குடமுழுக்கு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணம், தேசிசெட்டி தெருவில் உள்ள பசவேஸ்வரா் கோயிலில் ஏப். 16-ஆம் தேதி கங்கா பூஜை, வ... மேலும் பார்க்க