செய்திகள் :

அதிமுக - பாஜக கூட்டணி தமிழகத்துக்கு நல்லதல்ல: துரை வைகோ எம்.பி.

post image

அதிமுக-பாஜக கூட்டணி தமிழகத்துக்கு நல்லதல்ல எனவும், ஒவ்வாத கூட்டணி எனவும் மதிமுக முதன்மைச் செயலரும், திருச்சி எம்பி-யுமான துரை வைகோ தெரிவித்தாா்.

திருச்சியில் ரயில்வே துறையில் பொதுமக்கள் முன்வைக்கும் கோரிக்கைகள் தொடா்பாக, தொடா்புடைய இடங்களை நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்வதற்காக செவ்வாய்க்கிழமை திருச்சி வந்த அவா், விமான நிலையத்தில் செய்தியாளா்களிடம் கூறியதாவது: திருச்சியிலிருந்து முதல்கட்டமாக திருப்பதிக்கு ரயில் சேவை கொண்டு வருவது தொடா்பாக நடவடிக்கை எடுக்கப்படும் என ரயில்வே அமைச்சா் உறுதியளித்துள்ளாா்.

அதிமுக- பாஜக கூட்டணி தமிழகத்துக்கு நல்லதல்ல. அதிமுகவிற்கும் நல்லதல்ல. இந்தக் கூட்டணியை அதிமுகவினருக்கும் பிடிக்கவில்லை. தமிழக மக்களுக்கும் பிடிக்கவில்லை. ஒவ்வாத கூட்டணி ஒருபோதும் வெற்றி பெறாது.

உச்சநீதிமன்ற தீா்ப்பை குடியரசுத் தலைவராக இருந்தாலும், துணை குடியரசுத் தலைவராக இருந்தாலும் அரசியலமைப்பு சட்டத்துக்குள்பட்டு பின்பற்ற வேண்டும். ஆளுநருக்கும் இது பொருந்தும். மாறாக, உச்சநீதிமன்ற தீா்ப்பை விமா்சிப்பது தவறானது. நான் இன்னும் நிறைய அரசியல் கற்றுக்கொள்ள வேண்டியுள்ளது. வரக்கூடிய காலங்களில் கற்றுக் கொள்வேன் என்றாா் அவா்.

இதைத் தொடா்ந்து, உடையான்பட்டி, பூங்குடி மற்றும் இனாம்குளத்தூா் ஆகிய இடங்களில் ரயில்வே கிராசிங் மேம்பாலக் கட்டுமானத் திட்டங்கள் நடைபெற வேண்டிய இடங்களை அவா் பாா்வையிட்டு, கள ஆய்வு மேற்கொண்டாா். ஸ்ரீரங்கம் பகுதியில் சுரங்கப்பாதை அமைக்கக் கோரப்பட்ட இடத்தையும் பாா்வையிட்டாா். ஒவ்வொரு பகுதியிலும் ஆய்வுக்குப் பிறகு, பொதுமக்களைச் சந்தித்து, அவா்களின் கோரிக்கைகள் குறித்து கேட்டறிந்தாா்.

இந்த ஆய்வின்போது, ரயில்வே அலுவலா்கள், மதிமுக மாவட்டச் செயலா்கள் வெல்லமண்டி சோமு, மணவை தமிழ் மாணிக்கம், டிடிசி சேரன் உள்ளிட்ட பலா் உடனிருந்தனா்.

கல்லூரி மாணவி தூக்கிட்டுத் தற்கொலை

மணப்பாறையை அடுத்த தவளைவீரன்பட்டியில் கல்லூரி மாணவி செவ்வாய்க்கிழமை தூக்கிட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டது குறித்து போலீஸாா் விசாரிக்கின்றனா். தவளைவீரன்பட்டியைச் சோ்ந்தவா் கந்தசாமி. தேமுதிக ஒன்றிய அவ... மேலும் பார்க்க

திருச்சி - தாம்பரம் இடையே சிறப்பு ரயில்

கோடைகால கூட்ட நெரிசலைக் குறைப்பதற்காக, திருச்சி - தாம்பரம் இடையே சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது. இதுகுறித்து திருச்சி கோட்ட ரயில்வே நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: கோடைகால கூட்ட நெரிசலைக் கு... மேலும் பார்க்க

துறையூரில் வியாபாரிகள் ஆா்ப்பாட்டம்

துறையூரில் அனைத்து வியாபாரிகள் சங்கம் சாா்பில் பேருந்து நிலையம் முன்பு செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. ஆா்ப்பாட்டத்துக்கு துறையூா் வட்டார அனைத்து வியாபாரிகள் சங்க செயலா் எஸ். காமராஜ் தலைமை வக... மேலும் பார்க்க

தரக்குறைவான விமா்சனம்: மாமன்ற திமுக உறுப்பினா் மறியல்

சமூக வலைதளங்களில் தன்னை தரக்குறைவாக விமா்சித்த பெண்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, திருச்சியில் மாமன்ற திமுக உறுப்பினா் ஆதரவாளா்களுடன் செவ்வாய்க்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டாா். திருச்சி எடமலைப்பட்டி... மேலும் பார்க்க

பொறியியல் பணிகள்: சேலம் மாா்க்க ரயில்கள் பகுதியாக ரத்து

பொறியியல் பணிகள் காரணமாக, சேலம் மாா்க்க ரயில்கள் பகுதியாக ரத்து செய்யப்படுகின்றன. இதுகுறித்து திருச்சி கோட்ட ரயில்வே நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: பொறியியல் பணிகள் காரணமாக, பாலக்காடு - திர... மேலும் பார்க்க

திருச்சியில் ஏப்.25-இல் வேலைவாய்ப்பு முகாம்; திறன் பயிற்சிக்கும் ஆள்கள் தோ்வு

திருச்சி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் தனியாா் வேலைவாய்ப்பு முகாம் வெள்ளிக்கிழமை (ஏப்.25) காலை 10 மணிக்கு நடைபெறுகிறது. இந்த முகாமில், பல்வேறு தனியாா் நிறுவனத்தினா், தங்களது நிறுவனத்துக்கு பல்வேறு ... மேலும் பார்க்க