செய்திகள் :

"அது நடக்கவில்லையென்றால் மோடி இன்று பிரதமரே அல்ல" - ஆதாரங்களை வெளியிடுவதாக ராகுல் உறுதி

post image

மக்களவைத் தேர்தல் கடந்த ஆண்டு முடிந்த பிறகு நடத்தப்பட்ட மகாராஷ்டிரா சட்டமன்றத் தேர்தலில் வாக்காளர் பட்டியலில் முறைகேடு நடந்திருப்பதாகத் தேர்தல் ஆணையத்தின் மீது ராகுல் காந்தி தொடர்ச்சியாகக் குற்றச்சாட்டுகளை முன்வைத்து வந்தார்.

தற்போது, பீகாரில் சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் முழுமையாக ஐந்து மாதங்கள் கூட இல்லாத சூழலில் எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியில் வெறும் 30 நாள்களில் SIR எனும் சிறப்பு தீவிர வாக்காளர் திருத்தப்பணியை செய்து முடித்திருக்கிறது தேர்தல் ஆணையம்.

 ராகுல் காந்தி
ராகுல் காந்தி

தேர்தல் ஆணையத்தின் இந்த அவசர நடவடிக்கைக்குப் பின்னால் பீகாரில் இந்தியா கூட்டணியை வீழ்த்த பா.ஜ.க-வின் திட்டம் இருப்பதாக ராகுல் காந்தி குற்றம்சாட்டி வருகிறார்.

எதிர்க்கட்சிகளும் தேர்தல் ஆணையத்தின் SIR நடவடிக்கைக்கு எதிராக நாடாளுமன்றத்தில் குரலெழுப்பி வருகின்றன.

மேலும், கர்நாடகாவிலும் தேர்தல் முறைகேடு நடந்திருப்பது தொடர்பான ஆதாரங்கள் தன்னிடம் இருப்பதாக ராகுல் காந்தி கூறிவருகிறார்.

மறுபக்கம் தேர்தல் ஆணையம், ஆதாரம் இருந்தால் வெளியிடுங்கள் என்று ராகுலின் குற்றச்சாட்டுகளை மறுத்து வருகிறது.

இந்த நிலையில், மக்களவைத் தேர்தலில் 15 இடங்களில் மோசடி நடக்காமல் இருந்திருந்தால் மோடி தற்போது பிரதமர் இல்லை என்றும், மோசடி நடந்ததற்கான ஆதாரங்களை விரைவில் வெளியிடப்போவதாகவும் ராகுல் காந்தி உறுதியாகக் கூறியிருக்கிறார்.

 ராகுல் காந்தி
ராகுல் காந்தி

டெல்லியில் இன்று நடைபெற்ற காங்கிரஸ் கமிட்டி கூட்டத்தில் பேசிய ராகுல் காந்தி, "துளியும் சந்தேகம் வேண்டாம், மக்களவைத் தேர்தலில் மோசடி நடந்திருக்கிறது.

எப்படியெனில், ஒவ்வொரு 6.5 லட்சம் வாக்குகளில் 1.5 லட்சம் வாக்குகள் போலியானவை எனக் கண்டறிந்திருக்கிறோம். அவற்றை ஆவணப்படுத்தி வைத்திருக்கிறோம்.

தேர்தல் ஆணையத்திடம் வாக்காளர் பட்டியலைப் பெற்று, ஒவ்வொரு பெயர் வாரியாக சோதனை செய்திருக்கிறோம்.

இந்தத் தரவுகளை நாங்கள் வெளியிடும்போது தேர்தல் சிஸ்டம் எவ்வாறு செயல்பட்டிருக்கிறது என்று அதிர்ச்சியடைவீர்கள்.

உண்மையில் இது அணுகுண்டு போன்றது. இந்தியாவில் தேர்தல் சிஸ்டம் இறந்துபோய் விட்டது.

நினைவில் கொள்ளுங்கள், மிகக் குறைந்த பெரும்பான்மையுடன்தான் பதவியில் இருக்கிறார் பிரதமர்.

ஆனால், 70 முதல் 100 இடங்களில் மோசடி நடந்திருப்பதாக நாங்கள் சந்தேகிக்கிறோம்.

வெறும் 15 இடங்களில் மோசடி நடந்திருக்காவிட்டால், மோடி பிரதமராகியிருக்க மாட்டார்.

லோக் சபா தேர்தலில் எவ்வாறு மோசடி நடந்திருக்கும், எவ்வாறு மோசடி நடந்திருக்கிறது என்பதை அடுத்த சில நாள்களில் நாங்கள் நிரூபிக்கப்போகிறோம்" என்று கூறினார்.

நெல்லை ஆணவக் கொலை: ``ராஜஸ்தான் தனிச்சட்டம் இயற்றும்போது தமிழ்நாட்டில் செய்ய என்ன தயக்கம்?" - சீமான்

தூத்துக்குடி ஆணவக் கொலை விவகாரம் தமிழ்நாட்டை அதிர்ச்சியடையச் செய்திருக்கிறது. இந்த ஆணவக் கொலைக்கு எதிராகப் பல்வேறு அரசியல் தலைவகள் காட்டமான கண்டனங்களைத் தெரிவித்துவருகின்றனர். ஆணவப்படுகொலைக்கு எதிராக ... மேலும் பார்க்க

திருவில்லிபுதூர் தொகுதி நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் யார்? பொதுக்கூட்ட மேடையில் அறிவித்த சீமான்

தேனி பங்களா மேட்டில் தேவேந்திர குல வேளாளர்களை பட்டியல் பிரிவிலிருந்து நீக்கக் கோரி நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில் பொதுக்கூட்டம் நடைபெற்றது.இதழ் கலந்து கொண்ட சீமான் பேசியதாவது,... மேலும் பார்க்க

Russia VS America: `Dead Hand; தயார் நிலையில் நீர்மூழ்கி கப்பல்கள்’ - கடலில் யாருக்கு பலம் அதிகம்?

அமெரிக்கா தலைமையிலானா நேட்டோ அமைப்பில் உக்ரைன் இணைவதற்கு எதிர்ப்பு தெரித்த ரஷ்யா, 2022 பிப்ரவரி 24 அன்று 'உக்ரைனுக்கு எதிராக இராணுவ நடவடிக்கை' என அறிவித்தது. அது அப்படியே உக்ரைன் ரஷ்யா போராக உருமாறி இ... மேலும் பார்க்க

'லாக் போடும் Modi,தாண்டி அரசியல் செய்யும் EPS,கூட்டணி ட்விஸ்ட்! | Elangovan Explains

ஓபிஎஸ் திமுக பக்கம் நெருக்கம் காட்டுவதால் உச்சகட்ட கோபத்தில் இருக்கும் மோடி.' எடப்பாடி அணுகுமுறையால் தான் இத்தனை சிக்கல்கள்' என செக்கு வைக்கும் அமித்ஷா. இதை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தும் ஸ்டாலின். ... மேலும் பார்க்க

'இது மோசமான சாதிய சமூகம்’ - Suba Veerapandian Interview | Kavin murder case | Vikatan

நெல்லை கவின் ஆணவக் கொலை தமிழ் சமூகம் என்னவாக மாறியிருக்கிறது என்பது குறித்த கேள்விகளுக்கு விடையளிக்கிறார் திராவிட இயக்க தமிழர் பேரவையின் தலைவர் சுப.வீரபாண்டியன் மேலும் பார்க்க