செய்திகள் :

முதலாமாண்டு பொறியியல் வகுப்புகள் ஆக. 11-ல் தொடக்கம்: அண்ணா பல்கலை. அறிவிப்பு!

post image

அண்ணா பல்கலைக்கழகத்தில் இயங்கும் வளாக பொறியியல் கல்லூரிகளில், முதலாமாண்டு மாணவர்களுக்கு வரும் ஆக. 11 ஆம் தேதி வகுப்புகள் தொடங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு

அண்ணா பல்கலைக்கழகத்தில் இயங்கும் வளாக பொறியியல் கல்லூரிகளில், பி.இ., பி.டெக். உள்ளிட்ட படிப்புகளில் முதலாமாண்டு மாணவர்களுக்கு வரும் ஆக. 11 ஆம் தேதி வகுப்புகள் தொடங்கப்படும். முன்னதாக ஆக. 5 முதல் ஆக. 9 வரை அறிமுக வகுப்புகள் நடைபெறும்.

அதேபோல், அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் தனியார் பொறியியல் கல்லூரிகளில் முதலாமாண்டு மாணவர்களுக்கு வரும் ஆக. 18 ஆம் தேதி வகுப்புகள் தொடங்கப்படும்.

முதல் செமஸ்டர் தேர்வுகள் வரும் டிசம்பர் 16 ஆம் தேதி தொடங்கும். தேர்வுகள் நிறைவடைந்த பிறகு, அடுத்த செமஸ்டருக்கான வகுப்புகள் ஜன. 5 ஆம் தேதி தொடங்கப்படும் என்று குறிப்பிடப்ப்பட்டுள்ளது.

3 கட்டங்களாக நடைபெறும் பொறியியல் கலந்தாய்வு ஆகஸ்ட் 23ஆம் தேதியுடன் நிறைவு பெறுகிறது.

இதையும் படிக்க: முன்னாள் முதல்வர் கருணாநிதி நினைவிடம் நோக்கி ஆகஸ்ட் 7-ல் அமைதிப் பேரணி!

It has been announced that classes will begin on August 11 for first-year students in campus engineering colleges operating under Anna University.

நயினார் நாகேந்திரனை ஓபிஎஸ் குற்றம் சொல்வதை ஏற்றுக்கொள்ள மாட்டோம்: தமிழிசை

தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரனை ஓபிஎஸ் குற்றம் சொல்வதை ஏற்றுக்கொள்ள மாட்டோம் என பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் கூறியுள்ளார். தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர... மேலும் பார்க்க

மேட்டூரில் ஆடிப்பெருக்கு விழா: புனித நீராட குவிந்த மக்கள்!

சேலம் மாவட்டம் மேட்டூரில் ஆடிப்பெருக்கு விழாவை முன்னிட்டு மக்கள் புனித நீராட குவிந்தனர்.சேலம் மாவட்டம் மேட்டூரில் ஆடிப்பெருக்கு விழா சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. அணையின் மட்டம் பகுதியில் மக்கள்... மேலும் பார்க்க

ஆடிப்பெருக்கு தீர்த்தவாரி: கொள்ளிடம் ஆற்றில் எழுந்தருளிய நடராஜர்!

சிதம்பரம்: ஆடிப்பெருக்கு விழாவை முன்னிட்டு காவிரி அண்ணையை வழிபடும் வகையில் சிதம்பரத்தை சுற்றியுள்ள பகுதிகளைச் சேர்ந்த திரளான மக்கள், சிதம்பரம் அருகே உள்ள கொள்ளிடம் ஆற்றங்கரையில் ஞாயிற்றுக்கிழமை குவிந்... மேலும் பார்க்க

பாஜக கூட்டணியால் உண்மையான அதிமுக தொண்டர்கள் அதிருப்தி: முதல்வர் ஸ்டாலின்

பாஜக கூட்டணியால் உண்மையான அதிமுக தொண்டர்கள் அதிருப்தியில் உள்ளனர் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதுகுறித்து திமுக தொண்டர்களுக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில், நான்காண்டுகால திராவிட மாடல் ஆட்... மேலும் பார்க்க

ஆடிப்பெருக்கு: காவிரி கரையில் திரண்ட மக்கள்!

தமிழர்களின் பாரம்பரிய விழாக்களில் ஒன்றான ஆடிப்பெருக்கு விழாவை முன்னிட்டு திருவையாறு காவிரி கரை புஷ்பமண்டப படித்துறையில் மக்கள் திரண்டுள்ளனர்.விவசாயத்திற்கு உறுதுணையாக இருக்கும் காவிரித் தாய்க்கு நன்றி... மேலும் பார்க்க

தீரன் சின்னமலை நினைவு நாள்: முதல்வர் மு.க. ஸ்டாலின் மரியாதை!

சுதந்திரப் போராட்ட வீரர் தீரன் சின்னமலையின் நினைவு நாளையொட்டி(ஆக. 3) அவருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார். சென்னை கிண்டியில் உள்ள தீரன் சின்னமலை திருவுருவச்சிலையின் கீழ் வைக்கப்பட்டுள்... மேலும் பார்க்க