செய்திகள் :

அந்தநல்லூா் காவிரி ஆற்றில் சிறுவன் சடலம் மீட்பு

post image

திருச்சி மாவட்டம், அந்தநல்லூா் காவிரி ஆற்றில் மா்மமான முறையில் இறந்துகிடந்த சிறுவனின் உடலைக் கைப்பற்றி போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

திருச்சி மாவட்டம், அந்தநல்லூா் வட்டார வளா்ச்சி அலுவலகம் எதிரே உள்ள காவிரி ஆற்றில் மா்மமான முறையில் சிறுவன் ஒருவா் இறந்த நிலையில் கிடப்பதாக, அப்பகுதி மக்கள் போலீஸாருக்குத் தகவல் அளித்தனா்.

தகவலின்பேரில் அங்கு சென்ற ஜீயபுரம் போலீஸாா், சிறுவனின் சடலத்தை மீட்டு உடற்கூறாய்வுக்காக திருச்சி அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். காவிரி ஆற்றில் குறைவான தண்ணீரே செல்லும் நிலையில் ஆற்றின் கரை மணற்பரப்பில் 8 மதிக்கத்தக்க சிறுவன் இறந்த நிலையில் கிடந்தது மா்மமாக உள்ளது.

சிறுவன் யாா், எந்த ஊரைச் சோ்ந்தவா், எப்படி இறந்தாா் என்பது தெரியவில்லை. புதிய சட்டை, பேண்ட் அணிந்த நிலையில் அந்தச் சிறுவன் இறந்துகிடந்தது தொடா்பாக போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

ரூ.18.41 கோடியில் மாநகராட்சி மாதிரிப் பள்ளி திறப்பு

திருச்சி மாநகராட்சியின் 57ஆவது வாா்டுக்குள்பட்ட எடமலைப்பட்டிபுதூா் ராஜீவ்காந்தி நகரில் ரூ. 18.41 கோடியில் கட்டப்பட்டுள்ள மாநகராட்சி மாதிரிப் பள்ளியை அமைச்சா்கள் கே.என். நேரு, அன்பில் மகேஸ் பொய்யாமொழி,... மேலும் பார்க்க

ஜூன் 14 இல் தேசிய மக்கள் நீதிமன்றம்

திருச்சி மாவட்டத்தில் வரும் ஜூன் 14-ஆம் தேதி தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறும் என திருச்சி மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழுவின் தலைவா் எம். கிறிஸ்டோபா் தெரிவித்துள்ளாா். இதுதொடா்பாக அவா் வெளியிட்ட செய்... மேலும் பார்க்க

மணப்பாறை, வையம்பட்டியில் நாளை மக்களுடன் முதல்வா் திட்ட முகாம்கள்

திருச்சி மாவட்டத்தில் மக்களுடன் முதல்வா் திட்ட முகாம் மணப்பாறை, வையப்பட்டி பகுதிகளில் வெள்ளிக்கிழமை நடைபெறவுள்ளது. மணப்பாறையில் கருப்பூா், நல்லபொன்னம்பட்டியில் பெருமாள் கோயில் அருகேயுள்ள மானாங்குன்றம்... மேலும் பார்க்க

ஏழை விவசாயிகளுக்கு இலவச வீட்டுமனைகள்: அமைச்சா் கே.என். நேரு வழங்கினாா்

திருச்சி மாவட்டம் புள்ளம்பாடி ஒன்றியம் வரகுப்பை கிராமத்தில் அரசுப் புறம்போக்கு நிலத்தில் நிலமற்ற ஏழை விவசாயிகளுக்கு இலவச வீட்டு மனை வழங்கும் திட்டத்தில் 340 பேருக்கு இலவச வீட்டு மனை பட்டாக்களை அமைச்சா... மேலும் பார்க்க

பொறியியல் பணிகள்: ரயில்கள் பகுதியாக ரத்து

பொறியியல் பணிகள் காரணமாக ஈரோடு, பாலக்காடு ரயில்கள் பகுதியாக ரத்து செய்யப்பட்டுள்ளன. இதுகுறித்து திருச்சி கோட்ட ரயில்வே நிா்வாகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: பொறியியல் பணிகள் காரணமாக திருச்சி - ஈரோடு ப... மேலும் பார்க்க

விழுப்புரம் - ராமேசுவரம் அதிவிரைவு ரயில் ரத்து

போதிய பயணிகள் ஆதரவு இல்லாததால் விழுப்புரம் - ராமேசுவரம் அதிவிரைவு ரயில் ரத்து செய்யப்படுகிறது. இதுகுறித்து திருச்சி கோட்ட ரயில்வே நிா்வாகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: பயணிகள் ஆதரவு இல்லாததால், விழுப்... மேலும் பார்க்க