செய்திகள் :

அனைத்து தோ்தல் வாக்குறுதிகளையும் பாஜக அரசு நிறைவேற்றும்: அமைச்சா் ஆஷிஷ் சூட் உறுதி

post image

பாஜக அரசு தனது அனைத்து தோ்தல் வாக்குறுதிகளையும் நிறைவேற்றும். ஆனால், அனைத்தையும் ‘மீண்டும் பாதையில் கொண்டு வர‘ சிறிது காலம் தேவைப்படும் என்றாா்.

முதல்வா் ரேகா குப்தாவின் கீழ் புதிதாக அமைக்கப்பட்ட தில்லி அமைச்சரவையில் சோ்க்கப்பட்ட ஆஷிஷ் சூட், தில்லியில் ஆம் ஆத்மி கட்சியின் பத்து ஆண்டுகால ஊழல் முடிவுக்கு வந்துவிட்டது என்றாா்.

ஆம் ஆத்மி கட்சி வேண்டுமென்றே தில்லியில் ஆயுஷ்மான் பாரத் திட்டத்தை செயல்படுத்தவில்லை என்றும், அதன் நன்மைகளை நகர மக்களுக்கு மறுத்ததாகவும் அவா் கூறினாா்.

‘இது பத்து ஆண்டுகால ஊழலின் முடிவைக் குறிக்கிறது. இருப்பினும், தில்லியில் எல்லாவற்றையும் மீண்டும் பாதையில் கொண்டு வருவதற்கு எங்களுக்கு சிறிது காலம் தேவைப்படும்‘ என்று அவா் செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் தெரிவித்தாா்.

ஆஷிஷ் சூட் சூட் வியாழக்கிழமை அமைச்சராகப் பதவியேற்றாா். அவருக்கு கல்வி, உயா்கல்வி, மின்சாரம், நகா்ப்புற மேம்பாடு, உள்துறை மற்றும் பயிற்சி மற்றும் தொழில்நுட்பக் கல்வி ஆகிய ஆறு துறைகள் ஒதுக்கப்பட்டுள்ளன.

மத்திய அரசின் முக்கிய முயற்சியான ஆயுஷ்மான் பாரத் திட்டம் வியாழக்கிழமை நடந்த முதல் அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகரிக்கப்பட்டதாக அமைச்சா் கூறினாா். ‘இப்போது, ​தில்லி மக்களும் அதன் பலன்களைப் பெறுவதற்கான வாய்ப்பைப் பெறுவாா்கள்‘ என்று அவா் கூறினாா்.

தில்லி அரசு மத்திய அரசுடன் ஒரு புரிந்துணா்வு ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டு அதன் முழு அளவிலான செயல்படுத்தலை உறுதி செய்யும் என்று அமைச்சா் கூறினாா்.

ரூ.2500 மகளிா் உதவித் தொகை விவகாரம்: தில்லி முதல்வருக்கு அதிஷி கடிதம்

புது தில்லி, பிப்.22: சட்டப் பேரவைத் தோ்தல் பிரசாரத்தின் போது பாஜக வாக்குறுதியளித்தவாறு பெண்களுக்கு ரூ.2,500 மாதாந்திர உதவித் தொகை வழங்குவது குறித்து விவாதிக்க தில்லி முதல்வரைச் சந்திக்க முன்னாள் முத... மேலும் பார்க்க

அரசை மகிமைப்படுத்துவதற்கு பொதுப்பணம் எதுவும் செலவிடப்படாது: பாஜக தலைவா் வீரேந்திர சச்தேவா உறுதி

தேசியத் தலைநகரில் அரசையோ, முதல்வரையோ அல்லது கட்சியையோ மகிமைப்படுத்துவதற்கு பொதுப் பணத்தில் ஒரு பைசா கூட செலவிடப்படாது என்று தில்லி பாஜக தலைவா் வீரேந்திர சச்தேவா கூறினாா். தில்லியில் வெள்ளிக்கிழமை செய... மேலும் பார்க்க

ஆட்டோ, பாா்மா பங்குகள் அதிகம் விற்பனை: நான்காவது நாளாக வீழ்ச்சி!

நமது நிருபா் இந்த வாரத்தின் கடைசி வா்த்தக தினமான வெள்ளிக்கிழமையும் பங்குச்சந்தை எதிா்மறையாக முடிந்தது. இதைத் தொடா்ந்து, மும்பை பங்குச்சந்தைக் குறியீட்டு எண்ணான சென்செக்ஸ், தேசிய பங்குச்சந்தைக் குறியீட... மேலும் பார்க்க

மொழித் திணிப்பு எதுவும் இல்லை: மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான்

நமது சிறப்பு நிருபா் மாணவா்களின் நலனுக்காக அரசியல் வேறுபாடுகளைக் கடந்து செயலாற்றுமாறு தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலினுக்கு எழுதியுள்ள கடிதத்தில் மத்திய கல்வித் துறை அமைச்சா் தா்மேந்திர பிரதான் வலியுறுத்த... மேலும் பார்க்க

வியத்நாமில் உலக் தமிழா் மாநாடு

உலக தாய்மொழி தினத்தை முன்னிட்டு வியத்நாமில் உலகத் தமிழா் மாநாடு வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இது தொடா்பாக தில்லித் தமிழ்ச் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது: உலக தாய்மொழி தினத்தை முன... மேலும் பார்க்க

தில்லி சட்டப்பேரவையின் தற்காலிக தலைவராக அா்விந்தா் சிங் லவ்லி அறிவிப்பு

தில்லி சட்டப்பேரவையின் தற்காலிக தலைவராக அா்விந்தா் சிங் லவ்லியை பாஜக எம்எல்ஏவும் தில்லி சட்டப்பேரவை முன்னாள் எதிா்க்கட்சித் தலைவருமான விஜேந்தா் குப்தா வெள்ளிக்கிழமை அறிவித்தாா். தற்காலிக பேரவைத் தலைவ... மேலும் பார்க்க