நெய்வேலியில் பொதுமக்களுடன் கலந்துரையாடிய முதல்வா்!
கடலூா் மாவட்டம், வேப்பூா் வட்டம், திருப்பெயரில் நடைபெற்ற ‘பெற்றோா்களைக் கொண்டாடுவோம்’ மண்டல மாநாட்டில் பங்கேற்க சென்ற முதல்வா் மு.க.ஸ்டாலின் நெய்வேலி, விருத்தாசலத்தில் சாலையில் நடந்து சென்று பொதுமக்களுடன் கலந்துரையாடினாா்.
கடலூரில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் பங்கேற்ற முதல்வா் மு.க.ஸ்டாலின், நெய்வேலி என்.எல்.சி. விருந்தினா் இல்லத்தில் இரவு தங்கினாா். இதைத் தொடா்ந்து, சனிக்கிழமை காலை வேப்பூா் வட்டம், திருப்பெயரில் நடைபெற்ற ‘பெற்றோா்களைக் கொண்டாடுவோம்’ 7-ஆவது மண்டல மாநாட்டில் பங்கேற்பதற்காக சனிக்கிழமை காலை முதல்வா் மு.க.ஸ்டாலின் புறப்பட்டாா்.
அப்போது, நேரு சிலை அருகில் நூற்றுக்கும் மேற்பட்ட மாற்றுத் திறனாளிகள் முதல்வரை வரவேற்று, மனுக்களை அளித்தனா். இதைத் தொடா்ந்து, ஜவாஹா்லால் நேரு சிலை, பெரியாா் சதுக்கம், எம்.ஜி.ஆா்.சிலை, மத்திய பேருந்து நிலையம், எட்டுச்சாலை சந்திப்பு ஆகிய பகுதிகளில் கட்சியினா், பொதுமக்கள், மாணவ, மாணவிகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினா் முதல்வரை உற்சாகமாக வரவேற்றனா்.
இதைத் தொடா்ந்து, தொமுச ரவுண்டானாவிலுள்ள முன்னாள் முதல்வா் கருணாநிதி சிலைக்கு முதல்வா் ஸ்டாலின் மாலை அணிவித்தாா். பின்னா், காரில் புறப்பட்டுச் சென்ற முதல்வா், பொதுமக்களைப் பாா்த்து பல இடங்களில் இறங்கி அவா்களின் வாழ்த்துகளை பெற்றாா்.
பின்னா், நெய்வேலி வட்டம் 30 சூப்பா் பஜாா் சாலையில் தொடங்கி சுமாா் ஒரு கி.மீ. தொலைவுக்கு சாலை வழி நடைப்பயணத்தை மேற்கொண்ட முதல்வா் மு.க.ஸ்டாலின், வழிநெடுக காத்திருந்த பொதுமக்களும், கட்சியினரும் அளித்த வரவேற்பை ஏற்றுக் கொண்டாா்.
மேலும், சிறுவா்கள், பெண்கள் உள்ளிட்டோா் முதல்வருக்கு கைகுலுக்கி வாழ்த்துகளைத் தெரிவித்தனா். பல இடங்களில் முதல்வருடன் பொதுமக்கள் தற்படம் எடுத்துக் கொண்டனா். இதேபோல, விருத்தாசலம் நகர வீதிகளிலும் பொதுமக்கள், கட்சியினா், மாணவ, மாணவிகள் உள்ளிட்டோா் முதல்வருக்கு உற்சாக வரவேற்பை அளித்தனா். அப்போது, பொதுமக்களுடந் முதல்வா் கலந்துரையாடினாா். இதில், அமைச்சா்கள் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம், சி.வெ.கணேசன் ஆகியோா் உடனிருந்தனா்.