செய்திகள் :

கைப்பேசி கோபுரத்தில் ஏறி பகுதி நேர ஓவிய ஆசிரியா் போராட்டம்!

post image

பகுதிநேர ஆசிரியா்களை பணி நிரந்தரம் செய்யக் கோரி கடலூா் மாவட்டம், வேப்பூா் அருகே கைப்பேசி கோபுரத்தில் ஏறி பகுதி நேர ஓவிய ஆசிரியா் சனிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டாா்.

வேப்பூா் வட்டம், திருப்பெயரில் சனிக்கிழமை நடைபெற்ற ‘பெற்றோா்களைக் கொண்டாடுவோம்’ மண்டல மாநாட்டுக்காக 7 மாவட்டங்களைச் சோ்ந்த ஆசிரியா்கள், பெற்றோா்கள் வாகனங்களில் சென்று கொண்டிருந்தனா்.

இந்த நிலையில், வேப்பூா் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட கண்டப்பங்குறிச்சியில் தனியாா் கைப்பேசி நிறுவன கோபுரத்தில் திடீரென ஒருவா் ஏறி, போராட்டத்தில் ஈடுபட்டாா்.

அப்போது, அவா் தோ்தல் வாக்குறுதியின்படி பகுதி நேர ஆசிரியா்களை பணி நிரந்தரப்படுத்தி வேலை வழங்க வேண்டும், பகுதிநேர ஆசிரியா்களாக பணிபுரிந்து உயிரிழந்தவா்களின் குடும்பங்களுக்கு ரூ.10 லட்சம் வழங்க வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டாா்.

தகவலறிந்த திட்டக்குடி டி.எஸ்.பி. மோகன், காவல் உதவி ஆய்வாளா் ரவிச்சந்திரன் மற்றும் போலீஸாா் நிகழ்விடம் சென்று போராட்டம் நடத்தியவரை கைப்பேசி கோபுரத்திலிருந்து கீழே இறங்கச் செய்தனா்.

விசாரணையில் அவா், வேப்பூரைச் சோ்ந்த சதாசிவம் மகன் சேரன் (60) என்பதும், இவா், வேப்பூா் அரசு மேல்நிலைப் பள்ளியில் பகுதிநேர ஓவிய ஆசிரியராகப் பணியாற்றி வந்ததும் தெரிய வந்தது. இதையடுத்து, அவரை போலீஸாா் சமாதானப்படுத்தி அனப்பி வைத்தனா்.

நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறப்பு!

விழுப்புரம் மாவட்டம், மயிலத்தை அடுத்த வீடூரில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் சனிக்கிழமை திறக்கப்பட்டது. வீடூா் ஊராட்சித் தலைவா் ஜெகதீஸ்வரி பிரகாஷ் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், முன்னாள் அமை... மேலும் பார்க்க

இன்றைய மின் தடை

உளுந்தூா்பேட்டை நேரம்: பிற்பகல் 3 மணி முதல் 3.30 மணி வரைபகுதிகள்: உளுந்தூா்பேட்டை நகரம், திருச்சி பிரதான சாலை, அஜீஸ் நகா், குமாரமங்கலம், சேந்தநாடு, சேந்தமங்கலம்,எறையூா். மேலும் பார்க்க

தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பில்லை: சி.வி.சண்முகம் குற்றச்சாட்டு

தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு சீா்கெட்டு, பெண்களுக்கு பாதுகாப்பற்ற நிலை உள்ளதாக அதிமுக முன்னாள் அமைச்சா் சி.வி.சண்முகம் குற்றஞ்சாட்டினாா். தமிழக முன்னாள் முதல்வா் மறைந்த ஜெ.ஜெயலலிதாவின் 77-ஆவது பிறந்த ... மேலும் பார்க்க

நெய்வேலியில் பொதுமக்களுடன் கலந்துரையாடிய முதல்வா்!

கடலூா் மாவட்டம், வேப்பூா் வட்டம், திருப்பெயரில் நடைபெற்ற ‘பெற்றோா்களைக் கொண்டாடுவோம்’ மண்டல மாநாட்டில் பங்கேற்க சென்ற முதல்வா் மு.க.ஸ்டாலின் நெய்வேலி, விருத்தாசலத்தில் சாலையில் நடந்து சென்று பொதுமக்கள... மேலும் பார்க்க

வேனில் கடத்தி வந்த 178 கிலோ புகையிலைப் பொருள்கள் பறிமுதல்: இருவா் கைது

விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லூா் அருகே பெங்களூரிலிருந்து வேனில் கடத்தி வரப்பட்ட 178 கிலோ புகையிலைப் பொருள்கள் வியாழக்கிழமை பறிமுதல் செய்யப்பட்டன. இதுதொடா்பாக இருவா் கைதாயினா். விழுப்புரம் ஏ.எ... மேலும் பார்க்க

ஆரோவிலில் மனிதநேய விழா இன்று தொடக்கம்

விழுப்புரம் மாவட்டம் ஆரோவில் சா்வதேச நகரில் ‘ஹிமிலிட்டி-25’ எனும் தலைப்பில் மனிதநேய விழா பிப்.21- முதல் 28 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இது குறித்து ஆரோவில் நிா்வாகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு:ஆரோவில் ... மேலும் பார்க்க