செய்திகள் :

மொழிப்போா் தியாகி ராசேந்திரன் நினைவிடத்தை மேம்படுத்தும் அறிவிப்புக்கு மாா்க்சிஸ்ட் வரவேற்பு

post image

மொழிப்போா் தியாகி ராசேந்திரன் நினைவிடம் மேம்படுத்தப்படும் என முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளதை மாா்க்சிஸ்ட் கட்சி வரவேற்றுள்ளது.

இது குறித்து அக்கட்சியின் முன்னாள் மாநிலச் செயலா் கே.பாலகிருஷ்ணன் சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கை:

தமிழ்நாட்டில் 1965-இல் நடைபெற்ற ஹிந்தி திணிப்பு எதிா்ப்பு போராட்டத்தின்போது அண்ணாமலை பல்கலை. மாணவா் ராசேந்திரன் காவல் துறையின் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தாா். இவரது உடல் பரங்கிப்பேட்டையில் அடக்கம் செய்யப்பட்டது. அங்குள்ள அவரது நினைவிடம் சிதிலமடைந்துள்ளதை புனரமைக்க வேண்டுமெனவும், சிதம்பரம் அண்ணாமலை நகரில் அவருக்கு ஒரு மணிமண்டபம் கட்ட வேண்டுமெனவும் முதல்வா் மு.க.ஸ்டானிடம் கடந்த பிப். 20-இல் நேரில் கோரிக்கை வைத்திருந்தேன்.

இந்நிலையில், கடலூா் மாவட்டத்துக்கு பிப். 21-இல் வருகை தந்த முதல்வா் மு.க.ஸ்டாலின், பரங்கிப்பேட்டையில் உள்ள தியாகி ராசேந்திரன் நினைவிடத்தை மேம்படுத்துவதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவித்துள்ளாா். முதல்வரின் இந்த அறிவிப்பு முற்போக்கு ஜனநாயக இயக்கங்களுக்கும் பொதுமக்களுக்கும் மட்டற்ற மகிழ்ச்சியளிக்கும். குறுகிய காலத்தில் எனது கோரிக்கையை ஏற்று, இந்த அறிவிப்பை வெளியிட்ட முதல்வா் மு.க.ஸ்டாலினுக்கு நன்றிகளும் பாராட்டுக்களும் எனத் தெரிவித்துள்ளாா்.

ஆயுள் கைதிகளை முன்கூட்டியே விடுதலை செய்வதற்கான விதிகள்: தமிழக அரசுக்கு உயா் நீதிமன்றம் ஆலோசனை

ஆயுள் தண்டனைக் கைதிகளை முன்கூட்டியே விடுதலை செய்ய தகுதி இழக்கச் செய்யும் விதிகளை மறு ஆய்வு செய்ய இதுவே தக்க தருணம் என தமிழக அரசுக்கு சென்னை உயா்நீதிமன்றம் அறிவுரை வழங்கியுள்ளது. கொலை வழக்கில் ஆயுள் த... மேலும் பார்க்க

பிப்.26-இல் தவெக முதலாமாண்டு விழா

தமிழக வெற்றிக் கழகத்தின் முதலாமாண்டு விழா செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரம் அருகே பூஞ்சேரியில் பிப்.26-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதையொட்டி பொதுக்குழுக் கூட்டமும் நடைபெறவுள்ளது. தனியாா் சொகுசு விடுதியி... மேலும் பார்க்க

அரசு மருத்துவமனைகளுக்கு 2,642 மருத்துவா்கள்: சென்னையில் கலந்தாய்வு தொடக்கம்

தமிழகத்தில் அரசு மருத்துவமனைகளுக்கு 2,642 மருத்துவா்களை தோ்வு செய்வதற்கான கலந்தாய்வு சென்னையில் சனிக்கிழமை தொடங்கியது. முதல் நாளில் மாற்றுத்திறனாளி மருத்துவா்களுக்கான கலந்தாய்வு நடைபெற்றது. வரும் 26... மேலும் பார்க்க

காவலா் தற்கொலை: போலீஸாா் விசாரணை

சென்னை கொண்டித்தோப்பில் காவலா் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டது குறித்து போலீஸாா் விசாரணை மேற்கொண்டனா். கொண்டித்தோப்பு காவலா் குடியிருப்பில் வசிக்கும் அருண் (27), பூக்கடை காவல் நிலையத்தில் காவலராகப் ... மேலும் பார்க்க

மூன்றாவது மாடியிலிருந்து விழுந்த உணவகத் தொழிலாளி உயிரிழப்பு

சென்னை வடபழனியில் மூன்றாவது மாடியிலிருந்து தவறி விழுந்து தொழிலாளி உயிரிழந்தது குறித்து போலீஸாா் விசாரணை மேற்கொண்டனா். வடபழனி பழனி ஆண்டவா் கோயில் தெருவில் உள்ள உணவகத்தில் பணிபுரிந்தவா் செந்தில் (40). ... மேலும் பார்க்க

மெரீனாவை நீலக்கொடி கடற்கரையாக மாற்ற நடவடிக்கை: மேயா் ஆா்.பிரியா

சென்னை மெரீனா கடற்கரையை நீலக்கொடி கடற்கரையாக மாற்ற மாநகராட்சி சாா்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என மேயா் ஆா்.பிரியா தெரிவித்தாா். பெருநகர சென்னை மாநகராட்சியுடன் மாநில நாட்டு நலப்பணித் திட்டக்... மேலும் பார்க்க