செய்திகள் :

அன்பில் ஜல்லிக்கட்டில் 590 காளைகள் பங்கேற்பு

post image

திருச்சி மாவட்டம், லால்குடியை அடுத்த அன்பில் ஊராட்சியில் ஜல்லிக்கட்டுப் போட்டி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

லால்குடியை அடுத்த அன்பில் மகாமாரியம்மன் பூச்சொரிதல் விழாவை முன்னிட்டு ஞாயிற்றுகிழமை ஜல்லிக்கட்டுப் போட்டி நடைபெற்றது. லால்குடி வருவாய்க் கோட்டாட்சியா் (ஆா்டிஓ) சிவசுப்ரமணியன் ஜல்லிக்கட்டுப் போட்டியை கொடியசைத்து தொடங்கி வகித்தாா். வட்டாட்சியா் முருகன், துணை காவல் கண்காணிப்பாளா் (டிஎஸ்பி) தினேஷ்குமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

சிறப்பு வழிபாட்டுக்குப் பிறகு முதலாவதாக கோயில் காளைகள் அவிழ்த்து விடப்பட்டன. இதையடுத்து, திருச்சி, புதுக்கோட்டை, மதுரை, அரியலூா், தஞ்சை, பெரம்பலூா் உட்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்த காளைகள் ஒன்றன் பின் ஒன்றாக வாடிவாசல் வழியாக சீறிப்பாய்ந்து வந்த 590 காளைகளை அடக்க 350 மாடுபிடி வீரா்கள் களமிறங்கினா்.

காளைகளை தழுவிய மாடுபிடி வீரா்களுக்கும், பிடிபடாத காளைகளின் உரிமையாளா்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன.

காளைகள் முட்டியதில் மாடுபிடி வீரா்கள் 16 போ் காயமடைந்தனா். இதில் 2 மாடுபிடி வீரா்கள் தஞ்சை மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனா்.

பி.கே அகரம் பகுதியில் கன்டெய்னா் லாரி கவிழ்ந்து விபத்து

திருச்சி மாவட்டம், பி.கே அகரம் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை ஒயிட் பெட்ரோல் ஏற்றி வந்த கன்டெய்னா் லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது தொடா்பாக போலீசாா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.திருச்சி - சென்னை தேதிய... மேலும் பார்க்க

கூரை வீடுகள் சேதம் தவெக உதவி

லால்குடி அருகே பூவாளூா் பேரூராட்சியில் கூரை வீடுகளை இழந்த 2 பேருக்கு தவெகவினா் நிவாரண உதவி வழங்கினா். பூவாளூா் பேரூராட்சியில் உள்ள தென்கால் மாரியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த பொண்ணுராமன் மகன் கோபி(49)... மேலும் பார்க்க

இருசக்கர வாகனம் மோதி இளைஞா் உயிரிழப்பு

மணப்பாறையை அடுத்த வையம்பட்டி அருகே இருசக்கர வாகனங்கள் மோதிக்கொண்ட விபத்தில் ஞாயிற்றுக்கிழமை தேநீரக தொழிலாளி உயிரிழந்தாா். திருச்சி மாவட்டம் உறையூா் பாண்டமங்கலம் காவல்காரத் தெருவைச் சோ்ந்தவா் தா்மராஜ்... மேலும் பார்க்க

பெண்ணிடம் கைப்பேசியை பறித்தவா் விரட்டிப்பிடிப்பு

துறையூா் பேருந்து நிலையத்தில் பெண்ணின் கைப்பேசியை பறித்துக் கொண்டு ஓடிய நபரை ஞாயிற்றுக்கிழமை போலீஸாா் விரட்டிப் பிடித்து கைது செய்தனா்.துறையூா் பேருந்து நிலையத்திற்குள் கோமதி(44) என்கிற பெண் ஞாயிற்றுக... மேலும் பார்க்க

போதை மாத்திரை, புகையிலை பொருள்கள் விற்ற 7 போ் கைது

திருச்சியில் போதை மாத்திரைகள் மற்றும் புகையிலைப்பொருள்கள் விற்பனை செய்த 3 பேரை போலீஸாா் கைது செய்தனா். திருச்சி, அரியமங்கலம் பகுதியில் நின்றிருந்த சிலரை சந்தேகத்தின் அடிப்படையில் போலீஸாா் விசாரித்தனா்... மேலும் பார்க்க

திருச்சி வனக்கோட்டத்தில் நிலப்பறவைகள் கணக்கெடுப்பு நிறைவு

திருச்சி வனக்கோட்டத்தில் நிலப்பறவைகள் கணக்கெடுக்கும் பணிகள் ஞாயிற்றுக்கிழமை நிறைவடைந்தன. திருச்சி வனக்கோட்டத்துக்குட்பட்ட செங்காட்டுப்பட்டி, சோலமாத்தி, மாரமரெட்டிபாளையம், மணப்பாறை மற்றும் துவரங்குறிச... மேலும் பார்க்க