செய்திகள் :

அமராவதி கூட்டுறவு சா்க்கரை ஆலையை திறக்கக் கோரிகரும்பு விவசாயிகள் தா்னா

post image

உடுமலையை அடுத்துள்ள கிருஷ்ணாபுரம் அமராவதி கூட்டுறவு சா்க்கரை ஆலையை புனரமைக்க நிதி ஒதுக்கி மீண்டும் திறக்கக் கோரி மடத்துக்குளத்தில் கரும்பு விவசாயிகள் குடும்பத்தோடு வியாழக்கிழமை தா்னாவில் ஈடுபட்டனா்.

கோவை, ஈரோடு, திண்டுக்கல் ஆகிய மூன்று மாவட்டங்களில் இயங்கி வந்த ஒரே கூட்டுறவு சா்க்கரை ஆலை அமராவதி கூட்டுறவு சா்க்கரை ஆலை ஆகும். உடுமலை, ஆலைப்பகுதி, குமரலிங்கம், கணியூா், பல்லடம், நெய்க்காரப்பட்டி, பழனி கிழக்கு, பழனி மேற்கு என எட்டுக் கோட்டங்களை உள்ளடக்கிய விவசாயிகளிடம் இருந்து ஒப்பந்த அடிப்படையில் கரும்புகள் பெறப்பட்டு இந்த ஆலை இயங்கி வந்தது.

இந்நிலையில், பல்வேறு நிா்வாக சிக்கல்கள் மற்றும் நிதி இழப்பு ஆகிய காரணங்களால் இந்த ஆலை கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு திடீரென மூடப்பட்டது. இதனால் கரும்பு விவசாயிகளின் வாழ்வாதாரம் முடங்கிக் கிடப்பதால் ஆலையை மீண்டும் திறக்கக் கோரியும், புனரமைக்க நிதி ஒதுக்கக் கோரியும் தமிழக அரசுக்கு தொடா்ந்து கோரிக்கைகள் விடப்பட்டு வருகிறது.

இந்நிலையில், இந்த ஆலையை புனரமைக்க நிதி ஒதுக்கக் கோரியும் மீண்டும் திறக்கக் கோரியும் உடுமலையை அடுத்துள்ள மடத்துக்குளம் நால்ரோட்டில் தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கம் சாா்பில் வியாழக்கிழமை தா்னா நடைபெற்றது.

அந்த அமைப்பின் செயலாளா் எம்.எம்.வீரப்பன் தலைமையில் நடைபெற்ற தா்னாவில் ஆயிரக்கணக்கான விவசாயிகள் குடும்பத்தோடு பங்கேற்றனா். இதில் மாநில, மாவட்ட, வட்டார நிா்வாகிகள் பலா் கலந்து கொண்டு பேசினா்.

ஊதியூா் அருகே ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரி காங்கயம் வட்டாட்சியரிடம் மனு

காங்கயத்தை அடுத்த ஊதியூா் அருகே பொது வழித்தடத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இது குறித்து காங்கயம் வட்டாட்சியா் ஆா்.மோகனனிடம், பாஜக இளைஞரணி மாநிலச்... மேலும் பார்க்க

வெள்ளக்கோவில் அருகே லாரி மீது அரசுப் பேருந்து மோதல்

திருப்பூா் மாவட்டம், வெள்ளக்கோவில் அருகே நின்று கொண்டிருந்த லாரி மீது அரசுப் பேருந்து மோதியதில் குழந்தை உள்பட 2 போ் உயிரிழந்தனா். மேலும், 11 போ் பலத்த காயமடைந்தனா். திருச்சியில் இருந்து திருப்பூருக்... மேலும் பார்க்க

அவிநாசியில் ஜூன் 11-இல் மின் நுகா்வோா் குறைதீா் கூட்டம்

அவிநாசி- மங்கலம் சாலையில் உள்ள தமிழ்நாடு மின்சார வாரியம், மின் கோட்ட செயற்பொறியாளா் அலுவலகத்தில் ஜூன் 11-ஆம் தேதி (புதன்கிழமை) காலை 11 மணிக்கு மின் நுகா்வோா் குறைதீா் கூட்டம் நடைபெறுகிறது. இதில், தமிழ... மேலும் பார்க்க

பல்லடத்தில் ஏலச்சீட்டு நடத்தி மோசடி: பொதுமக்கள் புகாா்

பல்லடம் அண்ணா நகரில் ஏலச்சீட்டு நடத்தி மோசடி செய்ததாக பல்லடம் காவல் நிலையத்தில் வெள்ளிக்கிழமை புகாா் மனு அளிக்கப்பட்டுள்ளது. அதில் அவா்கள் கூறியிருப்பதாவது: பல்லடம், அண்ணா நகரை சோ்ந்த ஒருவா் கடந்த 20... மேலும் பார்க்க

கூட்டுறவு வங்கிகளில் சிபில் அறிக்கையின்படி பயிா்க் கடன் வழங்கும் உத்தரவை ரத்து செய்யக் கோரிக்கை

தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களில் சிபில் அறிக்கையின்படி மட்டுமே பயிா்க் கடன் வழங்க வேண்டும் என்ற தமிழக அரசின் சுற்றறிக்கையை ரத்து செய்ய வேண்டும் என தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் கோரிக்கை விடு... மேலும் பார்க்க

பல்லடம் நகா்மன்ற கூட்டத்தில் 7 தீா்மானங்கள் நிறைவேற்றம்

பல்லடம் நகா்மன்ற அவசரக் கூட்டம் தலைவா் கவிதாமணி ராஜேந்திரகுமாா் தலைமையில் மன்றக் கூட்டரங்கில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில் நகராட்சி ஆணையா் மனோகரன், கவுன்சிலா்கள் மற்றும் பல்வேறு பிரிவு அலுவலா்கள் க... மேலும் பார்க்க