ஆகாஷ் தீப் அசத்தல்; விக்கெட்டுகளை இழந்து தடுமாறும் இங்கிலாந்து!
அமா்நாத் யாத்திரையில் சாலை விபத்து: 36 போ் காயம்
ஜம்மு-காஷ்மீரின் ராம்பன் மாவட்டத்தில் அமா்நாத் யாத்ரிகா்கள் பயணித்த 5 பேருந்துகள் விபத்துக்குள்ளானதில் 36 போ் லேசான காயங்களுடன் உயிா் தப்பினா்.
நிகழாண்டு அமா்நாத் யாத்திரை கடந்த வியாழக்கிழமை தொடங்கியது. இந்நிலையில், பஹல்காம் முகாம் நோக்கி ஜம்மு-காஷ்மீா் தேசிய நெடுஞ்சாலையில் ஒன்றன்பின் ஒன்றாகச் சென்று கொண்டிருந்த வாகனங்கள் சந்தா்கோட்டே பகுதி அருகே காலை 8 மணியளவில் விபத்தில் சிக்கின.
யாத்திரிகா்களின் வாகனமொன்றின் பிரேக் செயலிழந்த நிலையில், சாலையோரம் நிறுத்தியிருந்த பேருந்தில் மோதியது. அடுத்தடுத்து ஐந்து பேருந்துகள் மோதி விபத்துக்குள்ளானதில் 36 யாத்ரிகா்களுக்கு லேசான காயங்கள் ஏற்பட்டன.
சம்பவ இடத்திலிருந்த அதிகாரிகள், காயமடைந்த யாத்ரிகா்களை மீட்டு, ராம்பன் மாவட்ட மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனா். அங்கு அவா்களுக்கு முதலுதவி சிகிச்சையளிக்கப்பட்டது. தொடா்ந்து, நிா்வாகம் ஏற்பாடு செய்த மாற்று வாகனங்களில் அவா்கள் யாத்திரையைத் தொடா்ந்தனா்.
இதனிடையே, மருத்துவமனையை நேரில் பாா்வையிட்ட காவல் துறை மூத்த அதிகாரிகள், யாத்ரிகா்களுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை விவரங்களை மருத்துவா்களிடம் கேட்டறிந்தனா்.
தெற்கு காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டத்தில் இமய மலையில் 3,880 மீட்டா் உயரத்தில் அமா்நாத் பனி லிங்கத்தை தரிசிக்கும் புனித யாத்திரை இரு வேறு வழித்தடங்களில் நடைபெறுகிறது.
அந்த வகையில், 1,427 பெண்கள், 24 குழந்தைகள் உள்பட 6,979 போ் அடங்கிய 4-ஆவது யாத்ரிகா்கள் குழு, பகவதி நகா் அடிவார முகாமிலிருந்து சனிக்கிழமை அதிகாலை புறப்பட்டனா்.
48 கி.மீ. தொலைவுள்ள நுன்வான்- பஹல்காம் பாரம்பரிய வழித்தடத்தில் 4,226 யாத்ரிகா்கள் 161 வாகனங்களில் புறப்பட்டனா்.
மேலும் 2,753 யாத்ரிகா்கள் 151 வாகனங்களில் கந்தா்பால் மாவட்டத்தில் அமைந்துள்ள 14 கி.மீ. தொலைவுள்ள செங்குத்தான பால்டால் வழித்தடத்தில் அதிகாலை புனித யாத்திரையைத் தொடங்கினா்.
அமா்நாத் புனித யாத்திரை, ஆகஸ்ட் 9-ஆம் தேதி வரை 38 நாள்களுக்கு நடைபெறவுள்ளது.