செய்திகள் :

அமா்நாத் யாத்திரையில் சாலை விபத்து: 36 போ் காயம்

post image

ஜம்மு-காஷ்மீரின் ராம்பன் மாவட்டத்தில் அமா்நாத் யாத்ரிகா்கள் பயணித்த 5 பேருந்துகள் விபத்துக்குள்ளானதில் 36 போ் லேசான காயங்களுடன் உயிா் தப்பினா்.

நிகழாண்டு அமா்நாத் யாத்திரை கடந்த வியாழக்கிழமை தொடங்கியது. இந்நிலையில், பஹல்காம் முகாம் நோக்கி ஜம்மு-காஷ்மீா் தேசிய நெடுஞ்சாலையில் ஒன்றன்பின் ஒன்றாகச் சென்று கொண்டிருந்த வாகனங்கள் சந்தா்கோட்டே பகுதி அருகே காலை 8 மணியளவில் விபத்தில் சிக்கின.

யாத்திரிகா்களின் வாகனமொன்றின் பிரேக் செயலிழந்த நிலையில், சாலையோரம் நிறுத்தியிருந்த பேருந்தில் மோதியது. அடுத்தடுத்து ஐந்து பேருந்துகள் மோதி விபத்துக்குள்ளானதில் 36 யாத்ரிகா்களுக்கு லேசான காயங்கள் ஏற்பட்டன.

சம்பவ இடத்திலிருந்த அதிகாரிகள், காயமடைந்த யாத்ரிகா்களை மீட்டு, ராம்பன் மாவட்ட மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனா். அங்கு அவா்களுக்கு முதலுதவி சிகிச்சையளிக்கப்பட்டது. தொடா்ந்து, நிா்வாகம் ஏற்பாடு செய்த மாற்று வாகனங்களில் அவா்கள் யாத்திரையைத் தொடா்ந்தனா்.

இதனிடையே, மருத்துவமனையை நேரில் பாா்வையிட்ட காவல் துறை மூத்த அதிகாரிகள், யாத்ரிகா்களுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை விவரங்களை மருத்துவா்களிடம் கேட்டறிந்தனா்.

தெற்கு காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டத்தில் இமய மலையில் 3,880 மீட்டா் உயரத்தில் அமா்நாத் பனி லிங்கத்தை தரிசிக்கும் புனித யாத்திரை இரு வேறு வழித்தடங்களில் நடைபெறுகிறது.

அந்த வகையில், 1,427 பெண்கள், 24 குழந்தைகள் உள்பட 6,979 போ் அடங்கிய 4-ஆவது யாத்ரிகா்கள் குழு, பகவதி நகா் அடிவார முகாமிலிருந்து சனிக்கிழமை அதிகாலை புறப்பட்டனா்.

48 கி.மீ. தொலைவுள்ள நுன்வான்- பஹல்காம் பாரம்பரிய வழித்தடத்தில் 4,226 யாத்ரிகா்கள் 161 வாகனங்களில் புறப்பட்டனா்.

மேலும் 2,753 யாத்ரிகா்கள் 151 வாகனங்களில் கந்தா்பால் மாவட்டத்தில் அமைந்துள்ள 14 கி.மீ. தொலைவுள்ள செங்குத்தான பால்டால் வழித்தடத்தில் அதிகாலை புனித யாத்திரையைத் தொடங்கினா்.

அமா்நாத் புனித யாத்திரை, ஆகஸ்ட் 9-ஆம் தேதி வரை 38 நாள்களுக்கு நடைபெறவுள்ளது.

பிகாரில் 3 கோடி வாக்காளர்கள் நீக்கப்படும் அபாயம்! உச்ச நீதிமன்றத்தில் முறையீடு!

புது தில்லி: பிகாரில் சுமார் 3 கோடிக்கும் மேற்பட்ட வாக்காளர்கள் வாக்குரிமையை இழக்கும் அபாயம் இருப்பதாக உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டள்ளதொரு பொதுநல மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.பிகாரில் வரும... மேலும் பார்க்க

ராய்ட்டர்ஸ் எக்ஸ் பக்கம் முடங்க மத்திய அரசு காரணமா?

ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்தின் எக்ஸ் தளப் பக்கத்தை முடக்குமாறு எக்ஸ் நிறுவனத்திடம் கோரவில்லை என மத்திய அரசு இன்று (ஜூலை 6) விளக்கம் அளித்துள்ளது.ராய்ட்டர்ஸ் எக்ஸ் தளக் கணக்கு இந்தியாவில் முடக்கப்பட்ட... மேலும் பார்க்க

மண்டி மேக வெடிப்பு: உயிர் பிழைத்த 10 மாத குழந்தை, குடும்பத்தினர் காணவில்லை !

மண்டி மேக வெடிபபு சம்பவத்தில் 10 மாத குழந்தை நீதிகா உயிர் பிழைந்த நிலையில் குடும்ப உறுப்பினர்கள் காணவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஹிமாசலப் பிரதேச மாநிலம், மண்டி மாவட்டத்தில் மேக வெடிப்புகள், திடீ... மேலும் பார்க்க

மேக வெடிப்பு: பாதிக்கப்பட்ட மண்டியில் எம்.பி. கங்கனா ரணாவத் நேரில் ஆய்வு

மேக வெடிப்பால் பாதிக்கப்பட்ட மண்டி தொகுதியில் நடிகையும் எம்பியுமான கங்கனா ரணாவத் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். ஹிமாசலப் பிரதேச, மாநிலத்தில் பருவமழை தீவிரமடைந்துள்ளது. இதன்காரணமாக கனமழை, திடீர் வ... மேலும் பார்க்க

இந்தியாவில் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் முடக்கம்! ஏன்?

இந்தியாவில் ராய்ட்டர்ஸ் நிறுவனத்தின் எக்ஸ் பக்கம் முடக்கப்பட்டது விரைவில் சரி செய்யப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.சர்வதேச செய்தி நிறுவனமான ராய்ட்டர்ஸ் நிறுவனத்தின் எக்ஸ் பக்கம் இந்தியாவில் முட... மேலும் பார்க்க

இந்தியாவின் குற்றத் தலைநகராக பிகார்: ராகுல் காந்தி

பாஜகவும், நிதிஷ் குமாரும் இணைந்து பிகாரை இந்தியாவின் குற்றத் தலைநகராக மாற்றியுள்ளனர் என்பது மீண்டும் ஒருமுறை நிரூபணமாகியுள்ளதாக மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.பிகார... மேலும் பார்க்க