செய்திகள் :

அமெரிக்காவில் கடும் வெள்ளம்: 9 பேர் பலி

post image

அமெரிக்காவின் கென்டகியில் பெய்து வரும் கனமழைக்கு இதுவரை 9 பேர் பலியாகியுள்ளனர்.

அமெரிக்க மத்திய கிழக்கு மாகாணங்களில் கடந்த சில நாள்களாக தொடா் கனமழை பெய்து வந்தது. இதனால் கென்டகி, வா்ஜீனியா, மேற்கு வா்ஜீனியா, டென்னசி, ஆா்கன்சாஸ் ஆகிய மாகாணங்களில் கடும் வெள்ள பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மக்களின் குடியிருப்புகளில் வெள்ளம் சூழ்ந்ததோடு வாகனங்களும் நீரில் மூழ்கின.

மேலும் மண்சரிவுகளால் பல்வேறு சாலைகளில் போக்குவரத்தும் துண்டிக்கப்பட்டது.

கென்டகி மாகாணம் முழுவதும், மேற்கு வா்ஜீனியாவின் 10 பகுதிகளிலும் அவசரகால நிலை அறிவிக்கப்பட்டுள்ளது. கடும் வெள்ளத்தால் மிகவும் பாதிக்கப்பட்ட கென்டகி மாகாணத்தின் ஜாக்சன் நகா் போன்ற பகுதிகளில் பொதுமக்கள் நிவாரண முகாம்களில் பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டனா்.

அணைக்கரை புதிய பாலத்தில் போக்குவரத்து தொடக்கம்!

இந்த நிலையில் கென்டகியில் பெய்து வரும் கனமழைக்கு இதுவரை 9 பேர் பலியாகியுள்ளனர். அவர்களில் ஒரு குழந்தையாவது அடங்கும் என்று அம்மாகாண ஆளுநர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், இந்த எண்ணிக்கை அதிகரிக்கும் என்று நாங்கள் நம்புகிறோம்.

கென்டகி மக்கள் சாலைகளில் இருந்து விலகி இருக்குமாறு அவர் வலியுறுத்தினார். பல மரணங்களுக்கு பின்னால் இருசக்கர வாகன விபத்துக்கள் இருப்பதாக தெரிவித்தார்.

இதனிடையே ஜார்ஜியாவில் ஒருவர் பலியானதாக அதிகாரி கூறியதாக சிஎன்என் செய்தி வெளியிட்டுள்ளது.

சட்டவிரோதக் குடியேற்றம்: பள்ளி நண்பர்களின் கேலியால் சிறுமி தற்கொலை!

சட்டவிரோதக் குடியேற்ற நடவடிக்கைக்கு பயந்து அமெரிக்க பள்ளி மாணவி தற்கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.ஜோஸ்லின் ரோஜோ கரன்ஸா என்ற பதினொரு வயது சிறுமி, அமெரிக்காவில் டெக்ஸாஸ் நகரில் இடைநிற்றல்... மேலும் பார்க்க

எஃப்பிஐ இயக்குநரான காஷ் படேல்... ஹிந்தி பாடலைப் பகிர்ந்து டிரம்ப் உதவியாளர் வாழ்த்து!

அமெரிக்காவின் மத்திய புலனாய்வு அமைப்பான எஃப்பிஐ-யின் இயக்குநராக இந்திய வம்சாவளியைச் சோ்ந்த காஷ் படேல் தேர்ந்தெடுக்கபட்டதற்கு ஹிந்தி பாடலைப் பகிர்ந்து டிரம்ப் உதவியாளர் வாழ்த்துத் தெரிவித்துள்ளார். அம... மேலும் பார்க்க

போப் பிரான்சிஸ் இறுதிச் சடங்குக்கு ஒத்திகையா?

போப் பிரான்சிஸ் கடுமையான நிமோனியா தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பெற்று வரு நிலையில், அவரின் இறுதிச் சடங்குக்கு ஸ்வீஸ் காவலர்கள் ஒத்திகை பார்ப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.போ... மேலும் பார்க்க

ஆசியாவின் ஆழமான கிணற்றை 580 நாள்களில் தோண்டிய சீனா!

ஆசியாவின் மிக ஆழமான கிணற்றை வெறும் 580 நாள்களில் தோண்டு சீன அரசின் தேசிய பெட்ரோலியக் கழகம் சாதனை படைத்துள்ளது.மொத்தம் 10,910 மீட்டர் ஆழமுள்ள இந்த கிணற்றின் கடைசி 910 மீட்டரை தோண்டுவதற்கு கிட்டத்திட்ட ... மேலும் பார்க்க

எஃப்பிஐ இயக்குநரானார் இந்திய வம்சாவளி காஷ் படேல்: செனட் ஒப்புதல்!

அமெரிக்காவின் மத்திய புலனாய்வு அமைப்பான எஃப்பிஐ-யின் இயக்குநராக இந்திய வம்சாவளியைச் சோ்ந்த காஷ் படேலை நியமனம் செய்ய செனட் ஒப்புதல் அளித்துள்ளது.அமெரிக்க செனட் அவை கூட்டத்தில் காஷ் படேலின் நியமனத்துக்... மேலும் பார்க்க

சூரியசக்தி மின் உற்பத்தி நிலையங்கள்: இந்தியா-இலங்கை இடையே உடன்பாடு

இலங்கையின் திருகோணமலை மாவட்டத்தில் சூரியசக்தி மின் உற்பத்தி நிலையங்கள் அமைப்பது தொடா்பாக இந்தியாவுடன் புரிந்துணா்வு ஒப்பந்தத்தை இலங்கை மேற்கொண்டுள்ளது. இதுகுறித்து இலங்கை அரசின் செய்தித்தொடா்பாளரும் அ... மேலும் பார்க்க