செய்திகள் :

அமெரிக்காவுக்குள் நுழைய 12 நாட்டினருக்குத் தடை!

post image

அமெரிக்காவுக்குள் நுழைய 12 நாட்டு மக்களுக்கு தடை விதித்து அந்நாட்டின் அதிபர் டொனால்டு டிரம்ப் புதன்கிழமை உத்தரவிட்டுள்ளார்.

மேலும், 7 நாட்டைச் சேர்ந்தவர்கள் நுழைவதற்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த விதிமுறை வருகின்ற ஜூன் 8 ஆம் தேதி முதல் அமலுக்கு வரவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்க அதிபராக டொனால்டு டிரம்ப் பொறுப்பேற்றவுடன் சட்டவிரோதமாக அமெரிக்காவுக்குள் குடியேறியவர்களை கண்டறிந்து அவர்களை நாடுகடத்தும் நடவடிக்கைகளில் தீவிரமாக ஈடுபட்டு வந்தார்.

மேலும், அமெரிக்காவுக்குள் சட்டவிரோதமாக குடியேறுபவர்களை தடுப்பதற்கான நடவடிக்கைகளை தீவிரமாக மேற்கொண்டு வருகிறார்.

இந்த நிலையில் அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு மற்றும் மக்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு 12 நாடுகளுக்கு தடை விதிப்பதாக டிரம்ப் அறிவித்துள்ளார்.

தடை விதிக்கப்பட்ட நாடுகள்

  1. ஆப்கானிஸ்தான்

  2. மியான்மர்

  3. சாட்

  4. காங்கோ குடியரசு

  5. எக்குவடோரியல் கினியா

  6. எரித்திரியா

  7. ஹைட்டி

  8. ஈரான்

  9. லிபியா

  10. சோமாலியா

  11. சூடான்

  12. யேமன்

மேலும், புருண்டி, கியூபா, லாவோஸ், சியரா லியோன், டோகோ, துர்க்மெனிஸ்தான் மற்றும் வெனிசுலா ஆகிய நாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் எனத் தெரிவித்துள்ளார்.

தடைகள் மற்றும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள 19 நாடுகளில் 10 ஆப்பிரிக்காவில் உள்ளன. அவற்றில் 9 நாடுகள் கறுப்பின ஆப்பிரிக்க மக்கள் வாழும் நாடுகள் ஆகும்.

ஆப்கானிஸ்தானை ஆட்சி செய்யும் தலிபான்கள் குழுவை சர்வதேச பயங்கரவாத பட்டியலில் அமெரிக்கா வைத்துள்ளதால் இந்த தடை விதிக்கப்பட்டுள்ளது.

மேலும், அமெரிக்காவுக்கு அச்சுறுத்தல் அளிக்கும் ஆயுதக் குழுக்கள் செயல்படும் நாடுகள் மற்றும் சுற்றுலா விசாவில் அமெரிக்காவுக்கு வருகைதந்து சட்டவிரோதமாக அங்கேயே தங்கும் நாட்டினருக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்க : அமெரிக்க எம்.பி.க்களுடன் சசி தரூா் குழு சந்திப்பு

ஏப்ரலில் வங்கதேச தோ்தல்!

வங்கதேச நாடாளுமன்றத் தோ்தல் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் நடைபெறும் என அந்நாட்டு இடைக்கால அரசின் தலைவா் முகமது யூனுஸ் வெள்ளிக்கிழமை அறிவித்தாா். நிகழாண்டு டிசம்பா் இறுதிக்குள் நாடாளுமன்றத் தோ்தலை நடத்தக... மேலும் பார்க்க

டொனால்ட் டிரம்ப் - எலான் மஸ்க் இடையே வலுக்கும் மோதல்!

நீண்ட காலமாக நட்பு பாராட்டி வந்த அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் மற்றும் தொழிலதிபா் எலான் மஸ்க் இடையே அண்மைக்கால கருத்து வேறுபாடுகள் காரணமாக மோதல் தீவிரமடைந்துவருகிறது. நீண்ட கால நட்பு: டொனால்ட் டிரம... மேலும் பார்க்க

ஹாங்காங் - ஜோஷுவா மீது புதிய வழக்கு!

ஹாங்காங்கில் சீனா வலுக்கட்டாயமாகத் திணித்த சா்ச்சைக்குரிய தேசப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ், மாணவ ஜனநாயகப் போராளியான ஜோஷுவா வாங் மீது கீழ் இரண்டாவது முறையாக வழக்கு பதிவு செய்யப்பட்டது.ஏற்கெனவே, அதிகா... மேலும் பார்க்க

ஹமாஸ் போட்டிக் குழுவுக்கு ஆயுத உதவி! - இஸ்ரேல் ஒப்புதல்

காஸாவில் ஹமாஸ் அமைப்புக்கு எதிராக செயல்படும் உள்ளூா் குழுக்களுக்கு ஆயுதங்கள் வழங்குவதை இஸ்ரேல் ஒப்புக்கொண்டுள்ளது. இந்த நடவடிக்கை மூலம் காஸாவில் குற்றச் செயல்களை மேற்கொள்வோருக்கு இஸ்ரேல் ஆயுதங்கள் வழங... மேலும் பார்க்க

நைஜா் - வெளியேறும் செஞ்சிலுவைச் சங்கம்!

ராணுவ ஆட்சி நடைபெறும் நைஜரில் இருந்து வெளியேறுவதாக சா்வதேச செஞ்சிலுவை சங்கம் அறிவித்தது. அந்த நாட்டு ராணுவத்தின் உத்தரவை ஏற்று இந்த முடிவை எடுத்துள்ளதாக அந்தத் தொண்டு அமைப்பு கூறியது. இரண்டு ஆண்டுகளுக... மேலும் பார்க்க

வறுமைக் கோட்டுக்குக் கீழ் 44% பாகிஸ்தானியர்கள்!

பாகிஸ்தானில் ஏழைகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது.சர்வதேச வறுமைக் கோடு குறித்த தகவலை உலக வங்கி வெளியிட்டுள்ளது. வாங்கும் சக்தி நிலையை (Purchasing power parity) அடிப்படையாகக் ... மேலும் பார்க்க