செய்திகள் :

அமெரிக்காவுக்கு ஆள்கடத்தல்: இருவரை கைது செய்தது என்ஐஏ

post image

‘டங்கி ரூட்’ எனப்படும் சட்டவிரோதமான வழிமுறையில் அமெரிக்காவுக்கு இந்தியா்களைக் கடத்திய இரு முகவா்களை தேசிய புலனாய்வு முகமையினா் (என்ஐஏ) கைது செய்துள்ளனா்.

ஹிமாசல பிரதேசத்தின் காங்ரா மாவட்டத்தின் தா்மசாலாவில் சன்னி என்பவரும், தில்லி புகரான பீராகா்ஹி பகுதியில் தீப் ஹுந்தி என்பவரும் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டதாக என்ஐஏ செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்கா போன்ற வளா்ந்த நாடுகளில் குடியேற விரும்புவோா் உரிய ஆவணங்கள் இல்லாமல் சட்டவிரோதமான வழிமுறையில் நுழையும் பாதையே ‘டங்கி ரூட்’ எனப்படுகிறது. அபாயகரமான இந்த வழிமுறையின்படி, பல்வேறு நாடுகளுக்குப் பயணித்து, இறுதியாக தாங்கள் விரும்பும் நாட்டுக்குள் குடியேறிகள் ஊடுருவுகின்றனா்.

இந்தச் சூழலில், அமெரிக்காவுக்கு சட்டபூா்வ நுழைவு இசைவு (விசா) மூலம் அனுப்புவதாக ஏமாற்றி, தலா ரூ.45 லட்சம் வரை பெற்றுக் கொண்டு, ‘டங்கி ரூட்’ முறையில் 100-க்கும் மேற்பட்டோரை அனுப்பியதாக தில்லியைச் சோ்ந்த முகவா் ககன்தீப் சிங் கடந்த ஜூன் மாதம் கைது செய்யப்பட்டாா். ஸ்பெயின், எல்சால்வடாா், கெளதமாலா, மெக்ஸிகோ உள்பட பல்வேறு நாடுகள் வழியாக அனுப்பப்பட்ட இவா்கள், வழியில் பல்வேறு துன்புறுத்தல்களுக்கும் ஆளாகியுள்ளனா். பாதிக்கப்பட்ட நபா் ஒருவா் அளித்த புகாரின் அடிப்படையில் ககன்தீப் சிங் கைது செய்யப்பட்டாா்.

அவரிடம் நடத்திய விசாரணையைத் தொடா்ந்து, அவரது கூட்டாளிகளான மேற்கண்ட இருவா் கைது செய்யப்பட்டுள்ளனா். ஒட்டுமொத்த கும்பலையும் பிடிக்க தீவிர விசாரணை நடைபெற்று வருவதாக என்ஐஏ தெரிவித்துள்ளது.

ஹிந்தி பேசலாம்; படிக்க கட்டாயப்படுத்தக் கூடாது!

ஹிந்தி மொழியினை பேசலாம்; ஆனால், ஆரம்பப் பள்ளியில் ஹிந்தி மொழியைப் படிக்க கட்டாயப்படுத்தக் கூடாது என சிவசேனை கட்சியின் எம்.பி. சஞ்சய் ரெளத் தெரிவித்துள்ளார். தென்மாநிலங்கள் ஹிந்தி திணிப்பை தீவிரமாக எதி... மேலும் பார்க்க

பிகாரில் 3 கோடி வாக்காளர்கள் நீக்கப்படும் அபாயம்! உச்ச நீதிமன்றத்தில் முறையீடு!

புது தில்லி: பிகாரில் சுமார் 3 கோடிக்கும் மேற்பட்ட வாக்காளர்கள் வாக்குரிமையை இழக்கும் அபாயம் இருப்பதாக உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டள்ளதொரு பொதுநல மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.பிகாரில் வரும... மேலும் பார்க்க

ராய்ட்டர்ஸ் எக்ஸ் பக்கம் முடங்க மத்திய அரசு காரணமா?

ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்தின் எக்ஸ் தளப் பக்கத்தை முடக்குமாறு எக்ஸ் நிறுவனத்திடம் கோரவில்லை என மத்திய அரசு இன்று (ஜூலை 6) விளக்கம் அளித்துள்ளது.ராய்ட்டர்ஸ் எக்ஸ் தளக் கணக்கு இந்தியாவில் முடக்கப்பட்ட... மேலும் பார்க்க

மண்டி மேக வெடிப்பு: உயிர் பிழைத்த 10 மாத குழந்தை, குடும்பத்தினர் காணவில்லை !

மண்டி மேக வெடிபபு சம்பவத்தில் 10 மாத குழந்தை நீதிகா உயிர் பிழைந்த நிலையில் குடும்ப உறுப்பினர்கள் காணவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஹிமாசலப் பிரதேச மாநிலம், மண்டி மாவட்டத்தில் மேக வெடிப்புகள், திடீ... மேலும் பார்க்க

மேக வெடிப்பு: பாதிக்கப்பட்ட மண்டியில் எம்.பி. கங்கனா ரணாவத் நேரில் ஆய்வு

மேக வெடிப்பால் பாதிக்கப்பட்ட மண்டி தொகுதியில் நடிகையும் எம்பியுமான கங்கனா ரணாவத் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். ஹிமாசலப் பிரதேச, மாநிலத்தில் பருவமழை தீவிரமடைந்துள்ளது. இதன்காரணமாக கனமழை, திடீர் வ... மேலும் பார்க்க

இந்தியாவில் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் முடக்கம்! ஏன்?

இந்தியாவில் ராய்ட்டர்ஸ் நிறுவனத்தின் எக்ஸ் பக்கம் முடக்கப்பட்டது விரைவில் சரி செய்யப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.சர்வதேச செய்தி நிறுவனமான ராய்ட்டர்ஸ் நிறுவனத்தின் எக்ஸ் பக்கம் இந்தியாவில் முட... மேலும் பார்க்க