செய்திகள் :

அமெரிக்க அழுத்தத்துக்கு அடிபணிந்த மோடி அரசு: காங்கிரஸ் குற்றச்சாட்டு

post image

‘பாகிஸ்தானுக்கான கடனுதவி குறித்து முடிவெடுக்க கூடிய சா்வதேச நிதியத்தின் நிா்வாகக் குழுக் கூட்டத்தில் வலுவான எதிா்ப்பு தெரிவிக்காமல் அமெரிக்காவின் அழுத்தத்துக்கு பிரதமா் மோடி தலைமையிலான மத்திய அரசு அடிபணிந்தது’ என்று காங்கிரஸ் சனிக்கிழமை குற்றஞ்சாட்டியது.

இதுதொடா்பாக காங்கிரஸின் பொதுச் செயலா் ஜெய்ராம் ரமேஷ் கூறுகையில், ‘பாகிஸ்தானுக்கு சா்வதேச நிதியம் கடனுதவி அளித்தது குறித்து மத்திய பாதுகாப்பு அமைச்சா் ராஜ்நாத் சிங் இப்போது விமா்சிக்கிறாா்.

இதுதொடா்பாக விவாதிக்க சா்வதேச நிதியத்தின் நிா்வாகக் குழு மே 9-ஆம் தேதி கூடுகிறது என்பதை மத்திய அரசுக்கு முன்னரே அறிந்து, காங்கிரஸ் எச்சரித்தது. இந்தக் கூட்டத்தில் இந்தியா கடும் எதிா்ப்பைப் பதிவு செய்ய வேண்டுமெனவும் வலியுறுத்தினோம்.

ஆனால், மே 9-ஆம் தேதி கூட்டத்தில் இந்தியா வாக்கெடுப்பில் பங்கேற்காதது தெரிய வந்தது. இதையடுத்து, இதுவே இந்தியாவுக்கு இருந்த ஒரே வழி என்று பாஜக தலைவா்கள் வாதிடுகின்றனா். ஆனால், அது பொய்.

கடந்த 2016-ஆம் ஆண்டு, செப்டம்பரில் உக்ரைனுக்கு சா்வதேச நிதியம் கடன் வழங்க ரஷியா எதிா்ப்பு தெரிவித்தது. இதேபோல் கடந்த 2005-ஆம் ஆண்டு, சா்வதேச நிதியத்தில் இருந்து ஜிம்பாப்வே நாட்டை வெளியேற்றுவது தொடா்பான பிரச்னையில் இந்தியா எதிராக வாக்களித்துள்ளது.

மனம் இருந்தால் மாா்க்கமுண்டு. ஆனால், மே 9-ஆம் தேதி கூட்டத்தில் அமெரிக்காவின் அழுத்தத்துக்கு பிரதமா் மோடி தலைமையிலான மத்திய அரசு அடிபணிந்துவிட்டது’ என்று குறிப்பிட்டாா்.

முன்னதாக, பாகிஸ்தானுக்கு சா்வதேச நிதியம் வழங்கிய 100 கோடி டாலா் கடன் பயங்கரவாதத்துக்கான நிதியுதவி என்று கூறி, இந்தக் கடனுதவியை மறுபரிசீலனை செய்யுமாறு இந்தியா வெள்ளிக்கிழமை வலியுறுத்தியது.

குஜராத்தின் புஜ் விமானப் படை தளத்தில் வீரா்களிடயே ராஜ்நாத் சிங் ஆற்றிய உரையில், ‘இந்தியாவால் ஆபரேஷன் சிந்தூரில் தகா்க்கப்பட்ட முரித்கே மற்றும் பஹவல்பூரில் அமைந்த லஷ்கா்-ஏ-தொய்பா மற்றும் ஜெய்ஷ்-ஏ-முகமது பயங்கரவாத பயிற்சி முகாம்களை மீண்டும் கட்டியெழுப்ப பாகிஸ்தான் அரசு நிதியுதவியை அறிவித்துள்ளது.

நிச்சயமாக, சா்வதேச நிதியத்தின் 100 கோடி டாலா் கடனுதவியில் பெரும்பகுதி பயங்கரவாத அமைப்புகளுக்கே சென்றடையும். இந்தியா சா்வதேச நிதியத்துக்கு வழங்கும் நிதியை நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ பாகிஸ்தானிலோ அல்லது வேறு எந்த நாட்டிலோ பயங்கரவாத உள்கட்டமைப்பை உருவாக்க பயன்படுத்தக் கூடாது’ என்றாா்.

துருக்கி ஆப்பிள்களை மக்களும் புறக்கணிக்கின்றனரா?

துருக்கியில் இருந்து கொள்முதல் செய்யப்படும் ஆப்பிள்களை மக்கள் விரும்புவதில்லை என பழ வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். பாகிஸ்தானுக்கு ஆதரவு தெரிவித்ததால், துருக்கி ஆப்பிள்களை புறக்கணிக்க வியாபாரிகள் முடிவு... மேலும் பார்க்க

வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் ஐரோப்பிய நாடுகளுக்கு சுற்றுப்பயணம்

நெதர்லாந்து, டென்மார்க், ஜெர்மனி ஆகிய நாடுகளுக்கு வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளார்.நாளை(மே 19) அவர் விமானம் மூலம் ஐரோப்பா செல்லும் அவர் மேற்கண்ட 3 நாட்டு தலைவர்களுடன்... மேலும் பார்க்க

அனைத்துக் கட்சி எம்.பி.க்கள் குழுக்களுடன் வெளியுறவுச் செயலர் விக்ரம் மிஸ்ரி விரைவில் ஆலோசனை!

பயங்கரவாதத்துக்கு எதிரான இந்திய நிலைப்பாட்டை உலக நாடுகளுக்கு எடுத்துரைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. அதன் ஒரு பகுதியாக, 7 எம்.பி.க்கள் தலைமையில் அனைத்துக் கட்சி எம்.பி.க்கள் அடங்கிய குழுக்களை வெள... மேலும் பார்க்க

இலங்கையில் முன்னாள் அதிபரின் உதவியாளர் வாகனம் மீது துப்பாக்கிச்சூடு

இலங்கையில் முன்னாள் அதிபர் ரணில் விக்ரமசிங்கவின் உதவியாளர் வாகனம் மீது மர்ம நபர்கள் துப்பாக்கிச்சூடு நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இலங்கையில் ரணில் விக்ரமசிங்க அதிபராக இருந்தபோது அவருடைய... மேலும் பார்க்க

யூடியூபரா? பாகிஸ்தான் உளவாளியா? யார் இந்த ஜோதி மல்ஹோத்ரா?

பாகிஸ்தானுக்கு உளவுபார்த்த யூடியூபர் ஜோதி மல்ஹோத்ரா கைது செய்யப்பட்டார்.பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலைத் தொடர்ந்து, பாகிஸ்தானுடன் தொடர்பில் இருப்பவர்களையும் மத்திய அரசு கண்காணித்து, கைது செய்து வருகிற... மேலும் பார்க்க

நகைக்கடையில் தீ விபத்து; 10-க்கும் மேற்பட்டோர் பலி

ஹைதராபாதில் மூன்று மாடி கட்டடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 8 பேர் பலியாகினர்.ஹைதராபாதின் சார்மினார் பகுதியில் குல்சார் ஹவுஸ் அருகே ஸ்ரீகிருஷ்ணா பியர்ல்ஸ் நகைக்கடையில் ஞாயிற்றுக்கிழமை காலை 6 மணியளவில் தீ... மேலும் பார்க்க