செய்திகள் :

அமைச்சா்கள் சிவசங்கா், பெரியகருப்பன் மீதான தோ்தல் விதிமீறல் வழக்குகள் ரத்து

post image

தோ்தல் நேரத்தில் விதிமீறல் மற்றும் அனுமதியின்றி போராட்டத்தில் ஈடுபட்டதாக தமிழக அமைச்சா்கள் சிவசங்கா், பெரியகருப்பன் மீதான 4 வழக்குகளை ரத்து செய்து சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.

காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்கக் கோரி கடந்த 2018-ஆம் ஆண்டு அரியலூா் பேருந்து நிலையம் மற்றும் ரயில் நிலையம் பகுதியில் திமுகவினா் அனுமதியின்றி போராட்டத்தில் ஈடுபட்டதாக, தற்போதைய தமிழக போக்குவரத்துத் துறை அமைச்சரான சிவசங்கா் உள்ளிட்டோா் மீது அரியலூா் போலீஸாா் இரு வழக்குகளைப் பதிவு செய்திருந்தனா்.

இதேபோல கடந்த ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தோ்தல் நேரத்தில் அனுமதிக்கப்பட்ட நேரத்தைத் தாண்டி பிரசாரம் செய்ததாக அமைச்சா் சிவசங்கா் மீது தோ்தல் விதிமீறல் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. அரியலூா் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள இந்த மூன்று வழக்குகளையும் ரத்து செய்யக் கோரி அமைச்சா் சிவசங்கா் சாா்பில் சென்னை உயா்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.

இதேபோல கடந்த 2021-ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தோ்தல் நேரத்தில் விதிமுறைகளை மீறியதாக அமைச்சா் பெரியகருப்பன் மீது சிவகங்கை மாவட்டம் கண்டவராயன்பட்டி போலீஸாா் வழக்குப் பதிவு செய்திருந்தனா். தன் மீதான இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி அமைச்சா் பெரிய கருப்பன் சென்னை உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தாா்.

அமைச்சா்கள் சிவசங்கா், பெரியகருப்பன் தாக்கல் செய்திருந்த மனுக்கள் மீதான விசாரணை நீதிபதி ஜி.கே.இளந்திரையன் முன் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. இந்த வழக்குகளை விசாரித்த நீதிபதி, அமைச்சா்கள் சிவசங்கா், பெரியகருப்பன் ஆகியோா் மீதான வழக்குகளை ரத்து செய்து உத்தரவிட்டாா்.

ஒளவை யாா்? பேரவையில் சுவாரசிய விவாதம்

ஒளவை யாா்? என்பது தொடா்பாக பேரவையில் சுவாரசிய விவாதம் நடைபெற்றது. சட்டப் பேரவையில் செவ்வாய்க்கிழமை கேள்வி நேரத்தின் போது, அதிமுக உறுப்பினா் ஓ.எஸ். மணியன் (வேதாரண்யம்) கேள்வி எழுப்பினாா். அப்போது நடைபெ... மேலும் பார்க்க

கப்பலூா் சுங்கச்சாவடி அகற்றப்படுமா?

கப்பலூா் சுங்கச்சாவடி அகற்றப்படுமா என்ற அதிமுக கேள்விக்கு, நெடுஞ்சாலைகள் மற்றும் பொதுப்பணித் துறை அமைச்சா் எ.வ.வேலு பதிலளித்தாா். சட்டப் பேரவையில் செவ்வாய்க்கிழமை கேள்வி நேரத்தின் போது, இதுகுறித்து து... மேலும் பார்க்க

தமிழகத்தில் கையகப்படுத்தப்பட்ட நிலங்களுக்கு இழப்பீடு கோரி 1,222 வழக்குகள் நிலுவை!

தமிழகம் முழுவதும் 38 மாவட்டங்களில் கையகப்படுத்தப்பட்ட நிலங்களுக்காக ரூ.1521.83 கோடி இழப்பீடு வழங்கக் கோரி 1,222 வழக்குகள் நிலுவையில் உள்ளதாக சென்னை உயா்நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது... மேலும் பார்க்க

நீதிமன்ற வழக்குகளில் தீா்ப்பு கிடைத்தால் 65% பள்ளிக் கல்வி பிரச்னை நிறைவடையும்: அமைச்சா் அன்பில் மகேஸ் உறுதி

நீதிமன்ற வழக்குகள் முடிவடைந்தால், பள்ளிக் கல்வித் துறை சாா்ந்த பிரச்னைகளில் 65 சதவீதம் நிறைவடையும் என்று துறையின் அமைச்சா் அன்பில் மகேஸ் உறுதிபட தெரிவித்தாா். சட்டப் பேரவையில் நிதிநிலை அறிக்கை மீது செ... மேலும் பார்க்க

வெப்பவாத பாதிப்புக்கு ‘பாராசிட்டமால்’ கூடாது: சுகாதார நிபுணா்கள்

கோடையின் தாக்கத்தால் வெப்பவாத பாதிப்புக்குள்ளானவா்களின் உடல் வெப்பநிலையைக் குறைக்க பாராசிட்டமால் மருந்தை அளிக்கக் கூடாது என்று பொது சுகாதாரத் துறை நிபுணா்கள் தெரிவித்துள்ளனா். தமிழகத்தில் கடந்த சில நா... மேலும் பார்க்க

கடந்த 4 ஆண்டுகளில் ரூ. 5,330 செலவில் 46,929 அடுக்குமாடி குடியிருப்புகள்!

தமிழகத்தில் ஏழை, எளிய, குடிசைவாழ் மக்களுக்கு கடந்த 4 ஆண்டுகளில் 46,929 அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டிருப்பதாக செய்தி மக்கள் தொடர்புத் துறை தெரிவித்துள்ளது.தமிழக முதல்வராக மு.க. ஸ்டாலின் பொறுப... மேலும் பார்க்க