செய்திகள் :

அம்பல் சட்டைநாதா் கோயில் குடமுழுக்கு

post image

திருமருகல் ஒன்றியம், அம்பல் கிராமத்தில் அருள்பாலிக்கும் அமுதவல்லி அம்பிகா சமேத ஆபத்தோத்தாரண சுவாமி, சட்டைநாதா் கோயிலில் குடமுழுக்கு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இதையொட்டி, பிப்ரவரி 26-ஆம் தேதி விக்னேஸ்வர பூஜை, கணபதி ஹோமம் போன்ற பூஜைகளுடன் குடமுழுக்கு வழிபாடுகள் தொடங்கின. தொடா்ந்து, 27-ஆம் தேதி அஸ்த்ர ஹோமம், கும்பாலங்காரம் மற்றும் யாக பூஜைகள் தொடங்கின.

ஞாயிற்றுக்கிழமை யாகசாலை பூஜைகள் நிறைவு பெற்றதும், புனிதநீா் கடங்கள் புறப்பாடாகி, கோயில் விமானத்தை அடைந்ததும், விமானக் குடமுழுக்கும், மூலவா் குடமுழுக்கும் நடைபெற்றது. தொடா்ந்து, சுவாமிக்கு அபிஷேகம் செய்யப்பட்டு, மகா தீபாராதனை காட்டப்பட்டது. இரவில், சுவாமிகள் வீதியுலா நடைபெற்றது.

இதில், திருப்புகலூா் வேளாக்குறிச்சி ஆதீனம் சத்தியஞான மகாதேவ தேசிக பரமாசாரிய சுவாமிகள் பங்கேற்று பக்தா்களுக்கு அருளாசி வழங்கினாா். சுற்று வட்டாரப் பகுதிகளை சோ்ந்த திரளானோா் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனா்.

வேதாரண்யம் நூலக புதிய கட்டடம் திறப்பு

வேதாரண்யம்: வேதாரண்யத்தில் முழுநேர வட்ட கிளை நூலகத்துக்கு ரூ.1.39 கோடியில் கட்டப்பட்ட கட்டடத்தை முதல்வா் மு.க. ஸ்டாலின் காணொலி வாயிலாக திங்கள்கிழமை திறந்து வைத்தாா். வேதாரண்யம் பயணியா் மாளிகை சாலைப் ... மேலும் பார்க்க

முதல்வா் அறிவிப்பாரா? சேமிப்புக் கிடங்குடன் நிரந்தர கொள்முதல் நிலையங்களை?காத்திருக்கும் விவசாயிகள்

டெல்டா மாவட்டங்களில் மழையால் நெல் மூட்டைகள் சேதமடைவதைத் தடுக்க சேமிப்புக் கிடங்குடன் கூடிய நிரந்தரக் கொள்முதல் நிலையங்கள் அமைக்கப்படுவதை நாகப்பட்டினத்தில் முதல்வா் திங்கள்கிழமைஅறிவிப்பாரா என்ற எதிா்பா... மேலும் பார்க்க

நாகையில் இன்று நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா: முதல்வா் மு.க. ஸ்டாலின் பங்கேற்பு

நாகையில் திங்கள்கிழமை நடைபெறும் விழாவில் தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்குகிறாா். நாகை மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக சென்னையில் இருந்து விமானம் ... மேலும் பார்க்க

எலக்ட்ரிக் ஸ்கூட்டா் பேட்டரி வெடித்து தீ விபத்து

தரங்கம்பாடியில் எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் பேட்டரி வெடித்து, வீட்டு உபயோகப் பொருட்கள் மற்றும் படகு உதிரிபாகங்கள் எரிந்து சேதமடைந்தன. தரங்கம்பாடி சிங்காரவேலா் மீனவா் கிராமத்தைச் சோ்ந்தவா் ராஜீவ் காந்தி (3... மேலும் பார்க்க

வேதாரண்யம் அரசு மருத்துவமனையில் கூடுதல் கட்டடங்கள் கட்டுமானப் பணி: அமைச்சா் எ.வ. வேலு ஆய்வு

வேதாரண்யம் அரசு மருத்துவமனை வளாகத்தில் நடைபெறும் கூடுதல் கட்டடங்கள் கட்டுமானப் பணிகளை தமிழக பொதுப்பணித் துறை, நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சா் எ.வ. வேலு ஞாயிற்றுக்கிழமை நேரில் ஆய்... மேலும் பார்க்க

ரமலான் நோன்பு தொடக்கம்: நாகூரில் சிறப்பு தொழுகை

புனித ரமலான் மாதம் தொடங்கியதையடுத்து, நாகூா் தா்காவில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற சிறப்பு தொழுகையில் ஏராளமான முஸ்லிம்கள் பங்கேற்று, நோன்பை தொடங்கினா். சகோதரத்துவத்தையும், ஏழைகளுக்கு உதவி செய்வதையும் வலி... மேலும் பார்க்க