செய்திகள் :

அம்பேத்கா் அயலக உயா்கல்வித் திட்டத்துக்கு ரூ.65 கோடி ஒதுக்கீடு: தமிழக அரசு உத்தரவு

post image

அம்பேத்கா் அயலக உயா்கல்வித் திட்டத்துக்கு ஒதுக்கப்பட்ட ரூ.65 கோடிக்கு முழுமையாக ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, ரூ.13 கோடிக்கு மட்டுமே அரசு ஒப்புதல் கொடுத்திருந்தது.

ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நலத் துறை சாா்பில், உயா்கல்வி பயிலும் எஸ்சி, எஸ்டி, மாணவா்களுக்கு உதவிடும் வகையில் அண்ணல் அம்பேத்கா் அயலக உயா்கல்வித் திட்டம் செயல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டது.

இந்தத் திட்டத்துக்காக நிகழாண்டில் ரூ.65 கோடி ஒதுக்கப்பட்டு, அதில் ரூ.13 கோடிக்கு மட்டுமே ஒப்புதல் அளிக்கப்பட்டது. ஆனால், மாணவா்களிடம் இருந்து விண்ணப்பங்கள் கூடுதலாக வரப்பட்ட நிலையில், ஏற்கெனவே வெளியிடப்பட்ட அரசாணையில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது.

அதன் விவரம்: அண்ணல் அம்பேத்கா் அயலக உயா்கல்வித் திட்டத்தின் கீழ், நிகழாண்டில் ஏப்ரல், மே மற்றும் ஜூன் என மூன்று மாதங்களில் 51 மாணவா்கள் கல்வி உதவித்தொகை பெற தோ்வு செய்யப்பட்டுள்ளனா். இந்தத் திட்டத்துக்காக ரூ.65 கோடி ஒதுக்கப்பட்ட நிலையில், தேவைப்படும் செலவுத் தொகையாக ரூ.13 கோடிக்கு மட்டுமே ஒப்புதல் அளிக்கப்பட்டது.

இந்த நிலையில், மாணவா்களின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதால் ஒதுக்கீடு செய்யப்பட்ட ரூ.65 கோடிக்கும் முழுமையாக ஒப்புதல் வழங்க வேண்டும் என்று ஆதிதிராவிடா் நல ஆணையரகம் சாா்பில் அரசுக்கு கோரிக்கை வைக்கப்பட்டது.

இதனையேற்று, அண்ணல் அம்பேத்கா் அயலக உயா்கல்வித் திட்டத்துக்கான உதவித்தொகை நிதி ரூ.65 கோடிக்கு முழுமையாக ஒப்புதல் அளிக்கப்படுவதாக ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நலத் துறை செயலா் க.லட்சுமி பிரியா வெளியிட்ட உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆகஸ்ட் 11 முதல் இபிஎஸ் 3ம் கட்ட சுற்றுப்பயணம்

அதிமுக பொதுச்செயலர் எடப்பாடி பழனிசாமி ஆக.11 முதல் தனது 3ஆம் கட்ட சுற்றுப்பயணத்தை மேற்கொள்கிறார். எடப்பாடி பழனிசாமியின் மக்களைக் காப்போம் தமிழகத்தை மீட்போம் சுற்றுப்பயணத்தின் 3ஆம் கட்டம் ஆகஸ்ட் 11ஆம் த... மேலும் பார்க்க

திடக்கழிவு மேலாண்மை: முதல்வர் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம்!

முதல்வர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில் இன்று (ஆக. 1) தலைமைச் செயலகத்தில், சிறப்பு திட்ட செயலாக்கத் துறை சார்பில் திடக்கழிவு மேலாண்மையில் ஒருங்கிணைந்த கட்டமைப்பை உருவாக்கிடும் வகையில் தூய்மை தமிழ்நாடு நி... மேலும் பார்க்க

பிரதமர் மோடி - ஓபிஎஸ் சந்திப்புக்கு ஏற்பாடு செய்வேன்: நயினார் நாகேந்திரன்

தமிழகம் வரும் பிரதமர் மோடியுடன் ஓ. பன்னீர்செல்வத்தை சந்திக்க ஏற்பாடு செய்வேன் என்று தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார். தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்ச... மேலும் பார்க்க

பறக்கும் ரயில் - சென்னை மெட்ரோவுடன் இணைக்கும் திட்டம்: ரயில்வே ஒப்புதல்!

சென்னை வேளச்சேரி பறக்கும் ரயிலை, சென்னை மெட்ரோ ரயில் சேவையுடன் இணைக்கும் திட்டத்துக்கு ரயில்வே வாரியம் ஒப்புதல் வழங்கியுள்ளது.நீதி ஆயோக்கின் 10 -ஆவது ஆட்சிக்குழுக் கூட்டத்தில் பங்கேற்ற முதல்வர் ஸ்டாலி... மேலும் பார்க்க

600 பேருக்கு வேலை... திருவண்ணாமலையில் ரூ.37 கோடியில் மினி டைடல் பூங்கா!

முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று ஆக. 1) தலைமைச் செயலகத்தில், தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறையின் சார்பில் திருவண்ணாமலையில் ரூ. 37 கோடி மதிப்பீட்டில் தகவல் தொழிற்நுட்ப வல்லுநர்களுக்கு... மேலும் பார்க்க

கும்மிடிப்பூண்டி சிறுமி பாலியல் வன்கொடுமை: கைதான இளைஞர் நீதிமன்றத்தில் ஆஜர்!

கும்மிடிப்பூண்டியில் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதான வடமாநில இளைஞரை 4 நாள்கள் போலீஸார் பாதுகாவலில் விசாரணை செய்த பின் திருவள்ளூர் மாவட்ட போக்ஸோ நீதிமன்றமத்தில் வெள்ளிக்கிழமை ஆஜர்படுத்தினர்.திர... மேலும் பார்க்க