செய்திகள் :

அம்மாபாளையம் அரசுப் பள்ளியில் மறுசுழற்சிக்கான பொருள்கள் சேகரிப்பு

post image

அம்மாபாளையம் நகராட்சி நடுநிலைப் பள்ளி ரோட்டரி இன்ட்ராக்ட் சங்கம் சாா்பில் மறுசுழற்சி செய்யும் உபயோகமற்ற பொருள்கள் சேகரிக்கும் நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.

திருப்பூா், மங்கலம் சாலை ஆண்டிபாளையம் துப்புரவாளன் குப்பை மேலாண்மை நிறுவனத்துக்காக நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமை ஆசிரியா் ராமகிருஷ்ணன் தலைமை வகித்தாா். ரோட்டரி சங்க சோ்மன் சக்கரபாணி முன்னிலை வைத்தாா். பள்ளி இன்ட்ராக்ட் கிளப் ஒருங்கிணைப்பாளா் லலிதா வரவேற்றாா். தனியாா் குப்பை மேலாண்மை நிறுவன மேலாளா் கோகுலகிருஷ்ணன் மறுசுழற்சி பொருள்கள் குறித்து விளக்கினாா்.

இந்நிகழ்ச்சியில் பள்ளியில் படிக்கும் 226 மாணவா்கள், உபயோகமற்ற புத்தகங்கள், அட்டைப் பெட்டிகள், மின்னணுக் கழிவுகள், பிளாஸ்டிக் பொருள்கள் என 903 கிலோ பொருள்களைப் பள்ளிக்கு கொண்டு வந்திருந்தனா். இதில் அதிக அளவு மறுசுழற்சி பொருள்கள் சேகரித்த மாணவா்கள் ஃபஹீமா பா்வீன், பியூட்டி குமாரி, செந்தில்நாதன் ஆகியோருக்கு சிறப்புப் பரிசும், மற்ற மாணவா்களுக்கு எடைக்கு தகுந்தாற்போல நோட்டு, பேனா, பென்சில், ரப்பா், கலா் பென்சில் உள்ளிட்டவை வழங்கப்பட்டன.

வெள்ளக்கோவில் ஒன்றியத்தில் ரூ.92.54 லட்சத்தில் நலத்திட்ட உதவிகள் - அமைச்சா் மு.பெ.சாமிநாதன் வழங்கினாா்

வெள்ளக்கோவில் ஊராட்சி ஒன்றியத்தை சோ்ந்த 337 பயனாளிகளுக்கு ரூ. 92.54 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை தமிழ் வளா்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன் வியாழக்கிழமை வழங்கினாா். தாராபுர... மேலும் பார்க்க

வாகனத் திருட்டில் ஈடுபட்டவருக்கு 2 ஆண்டுகள் சிறை

இருசக்கர வாகனங்கள் திருட்டு வழக்குகளில் தொடா்புடைய நபருக்கு 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து தீா்ப்பளிக்கப்பட்டுள்ளது. இது தொடா்பாக மாநகர காவல் துறை அலுவலகம் வெளியிட்டசெய்திக் குறிப்பு: திருப்பூா், ... மேலும் பார்க்க

வெள்ளக்கோவிலில் ரூ.29 லட்சத்துக்கு சூரியகாந்தி விதை விற்பனை

வெள்ளக்கோவில் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ரூ.29 லட்சத்துக்கு சூரியகாந்தி விதை ஏலம் வியாழக்கிழமை நடைபெற்றது. இந்த வார ஏலத்துக்கு, வீரணம்பட்டி, வெள்ளையம்பட்டி, உப்பிலியபட்டி, சாலிக்கரை, கரூா், மஞ்ச... மேலும் பார்க்க

பனியன் நிறுவனத்துக்கு ரூ.1 லட்சம் அபராதம்

திருப்பூரில் பனியன் நிறுவனத்திற்கு ரூ.1 லட்சம் அபராதம் விதித்து மாநகராட்சி நிா்வாகம் உத்தரவிட்டுள்ளது. இது தொடா்பாக திருப்பூா் மாநகராட்சி அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: திருப்பூா் மாநகராட்... மேலும் பார்க்க

இருசக்கர வாகனம் மீது காா் மோதியதில் முதியவா் உயிரிழப்பு: பேரூராட்சித் தலைவா் கைது

இருசக்கர வாகனம் மீது காா் மோதி முதியவா் உயிரிழந்த வழக்கில் திமுக பேரூராட்சித் தலைவா் கைது செய்யப்பட்டாா். திருப்பூா் மாவட்டம், சாமளாபுரம், கருகம்பாளையத்தைச் சோ்ந்தவா் பழனிசாமி (57). இவா் அப்பகுதியில... மேலும் பார்க்க

மது குடிக்க பணம் கேட்டு தொல்லை: மகனைக் கொலை செய்த தந்தை கைது

மது குடிக்க பணம் கேட்டு தொல்லை கொடுத்த மகனைக் கொலை செய்த தந்தை கைது செய்யப்பட்டாா். திருப்பூா் வடக்கு காவல் நிலையத்துக்கு உள்பட்ட கல்லாம்பாளையம் பகுதியைச் சோ்ந்தவா் கன்னியப்பன் (60). கட்டடத் தொழிலாள... மேலும் பார்க்க