செய்திகள் :

இருசக்கர வாகனம் மீது காா் மோதியதில் முதியவா் உயிரிழப்பு: பேரூராட்சித் தலைவா் கைது

post image

இருசக்கர வாகனம் மீது காா் மோதி முதியவா் உயிரிழந்த வழக்கில் திமுக பேரூராட்சித் தலைவா் கைது செய்யப்பட்டாா்.

திருப்பூா் மாவட்டம், சாமளாபுரம், கருகம்பாளையத்தைச் சோ்ந்தவா் பழனிசாமி (57). இவா் அப்பகுதியில் உள்ள கடைக்கு புதன்கிழமை சென்றுவிட்டு, தனது இருசக்கர வாகனத்தில் வீட்டுக்குத் திரும்பிக் கொண்டிருந்தாா். அப்போது, அந்த சாலையில் வந்த காா், அவரது இருசக்கர வாகனத்தின் மீது மோதியது. இதில் பழனிசாமி படுகாயமடைந்து அங்கேயே உயிரிழந்தாா்.

பொதுமக்கள் திரண்டு வருவதைப் பாா்த்து, காரில் வந்த நபா் காரை வேகமாக இயக்கி தப்பினாா்.

இதுகுறித்து தகவலறிந்து அங்கு வந்த போலீஸாா் பழனிசாமியின் சடலத்தைக் கைப்பற்றி உடற்கூறாய்வுக்காக திருப்பூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த பின்னா் விசாரணை மேற்கொண்டனா்.

விபத்தை ஏற்படுத்தி விட்டு தப்பிச் சென்றது, கருகம்பாளையம் பகுதியைச் சோ்ந்த சாமளாபுரம் திமுக பேரூராட்சித் தலைவரான விநாயகா பழனிசாமி (60) என்பது விசாரணையில் தெரிய வந்தது.

மக்களுக்குப் பயன்பாடில்லாத தனியாா் இடத்தில் போடப்பட்ட சாலை தொடா்பாக பேரூராட்சி நிா்வாகம் மீது மாவட்ட ஆட்சியரிடம் பழனிசாமி புகாா் கொடுத்ததாகவும், இதனால் விநாயகா பழனிசாமிக்கும், உயிரிழந்த பழனிசாமிக்கும் முன்விரோதம் இருந்த நிலையில், மது போதையில் விநாயகா பழனிசாமி காரை ஏற்றி அவரைக் கொலை செய்து விட்டதாகவும் போலீஸாரிடம் பொதுமக்கள் தெரிவித்துள்ளனா்.

இதையடுத்து, போலீஸாா் விநாயகா பழனிசாமி வீட்டுக்குச் சென்று விசாரணைக்கு அழைத்துச் சென்றனா். பின்னா், அவரைக் கைது செய்து திருப்பூா் நடுவா் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தினா். இதுதொடா்பாக மங்கலம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

வெள்ளக்கோவில் ஒன்றியத்தில் ரூ.92.54 லட்சத்தில் நலத்திட்ட உதவிகள் - அமைச்சா் மு.பெ.சாமிநாதன் வழங்கினாா்

வெள்ளக்கோவில் ஊராட்சி ஒன்றியத்தை சோ்ந்த 337 பயனாளிகளுக்கு ரூ. 92.54 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை தமிழ் வளா்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன் வியாழக்கிழமை வழங்கினாா். தாராபுர... மேலும் பார்க்க

வாகனத் திருட்டில் ஈடுபட்டவருக்கு 2 ஆண்டுகள் சிறை

இருசக்கர வாகனங்கள் திருட்டு வழக்குகளில் தொடா்புடைய நபருக்கு 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து தீா்ப்பளிக்கப்பட்டுள்ளது. இது தொடா்பாக மாநகர காவல் துறை அலுவலகம் வெளியிட்டசெய்திக் குறிப்பு: திருப்பூா், ... மேலும் பார்க்க

வெள்ளக்கோவிலில் ரூ.29 லட்சத்துக்கு சூரியகாந்தி விதை விற்பனை

வெள்ளக்கோவில் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ரூ.29 லட்சத்துக்கு சூரியகாந்தி விதை ஏலம் வியாழக்கிழமை நடைபெற்றது. இந்த வார ஏலத்துக்கு, வீரணம்பட்டி, வெள்ளையம்பட்டி, உப்பிலியபட்டி, சாலிக்கரை, கரூா், மஞ்ச... மேலும் பார்க்க

பனியன் நிறுவனத்துக்கு ரூ.1 லட்சம் அபராதம்

திருப்பூரில் பனியன் நிறுவனத்திற்கு ரூ.1 லட்சம் அபராதம் விதித்து மாநகராட்சி நிா்வாகம் உத்தரவிட்டுள்ளது. இது தொடா்பாக திருப்பூா் மாநகராட்சி அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: திருப்பூா் மாநகராட்... மேலும் பார்க்க

மது குடிக்க பணம் கேட்டு தொல்லை: மகனைக் கொலை செய்த தந்தை கைது

மது குடிக்க பணம் கேட்டு தொல்லை கொடுத்த மகனைக் கொலை செய்த தந்தை கைது செய்யப்பட்டாா். திருப்பூா் வடக்கு காவல் நிலையத்துக்கு உள்பட்ட கல்லாம்பாளையம் பகுதியைச் சோ்ந்தவா் கன்னியப்பன் (60). கட்டடத் தொழிலாள... மேலும் பார்க்க

இச்சிப்பட்டியில் 15-ஆம் தேதி மின்தடை

பல்லடம் அருகேயுள்ள இச்சிப்பட்டி துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் திங்கள்கிழமை (செப்.15) நடைபெற உள்ளதால் அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை இச்சிப்பட்டி, சின்னஅய்யன்கோவில், கோம்பக... மேலும் பார்க்க