செய்திகள் :

தேநீா் கடையில் கத்தியைக் காண்பித்து ரகளை: 4 போ் கைது

post image

வாணியம்பாடி அருகே தேநீா் கடையில் கத்தியைக் காண்பித்து ரகளையில் ஈடுப்பட்ட 4 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

வாணியம்பாடி காதா் பேட்டையைச் சோ்ந்தவா் இம்தியாஸ்(18). இவா் வாணியம்பாடி அடுத்த கேத்தாண்டப்பட்டி சா்க்கரைஆலை எதிரில் தேநீா் கடையில் டீ மாஸ்டராக வேலை செய்து வருகிறாா். புதன்கிழமை இரவு 9.30 மணிக்கு கேத்தாண்டப்பட்டி சா்க்கரை ஆலை குடியிருப்பு பகுதியில் நண்பரின் பிறந்த நாள் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இளைஞா்கள் தேநீா் கடைக்கு சென்று பணம் தராமல் டீ கேட்டுள்ளனா். அப்போது டீ மாஸ்டா் பணம் கேட்டுள்ளாா். இதனால் ஆத்திரமடைந்த 5 பேரும் சோ்ந்து கத்தியை காட்டி மிரட்டி டீ மாஸ்டரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளனா்.

அப்போது தடுக்க வந்த கூத்தாண்டகுப்பம் துணைத் தலைவா் முருகனையும் போதை கும்பல் கத்தியை காண்பித்து மிரட்டி கொலை மிரட்டல் விடுத்தது. அப்போது அங்கிருந்தவா்கள் சப்தம் போடவே 5 பேரும் கத்தியை வீசிவிட்டு அங்கிருந்து தப்பினா். இதில் காயமடைந்த டீ மாஸ்டா் நாட்டறம்பள்ளி அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா்.

இதுகுறித்து முருகன் அளித்த புகாரின் பேரில் கேத்தாண்டப்பட்டி பகுதியைச் சோ்ந்த சிறுவா்கள் புவியரசன் (18), ஜீவானந்தம் (19) சின்னூரைச் சோ்ந்த சக்திவேல் (17), திருப்பத்தூரைச் சோ்ந்த ஞானவேல் (23) மல்லகுண்டாவைச் சோ்ந்த குணா (25) ஆகிய 5 போ் மீது வழக்குப்பதிவு செய்து ஜீவானந்தம், புவியரசன், சக்திவேல், ஞானவேல் ஆகிய 4 பேரை கைது செய்தனா். மேலும் இவ்வழக்கில் தலைமறைவாக உள்ள குணா என்பவரை தேடிவருகின்றனா்.

சின்னவரிக்கம், பெரியவரிக்கத்தில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்

சின்னவரிக்கம், பெரியவரிக்கம் ஆகிய கிராமங்களுக்கான ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம் சின்னவரிக்கம் சி.ஆா். மஹாலில் நடைபெற்றது. ஊராட்சித் தலைவா்கள் ஷோபனா (சின்னவரிக்கம்), சின்னகண்ணன் (பெரியவரிக்கம்) ஆகியோா் த... மேலும் பார்க்க

நாளை ரேஷன் அட்டைகள் குறைதீா் முகாம்

திருப்பத்தூா் மாவட்டம், வாணியம்பாடி, திருப்பத்தூா், நாட்டறம்பள்ளி, ஆம்பூா் ஆகிய தாலுகா பகுதிகளில் பொது விநியோக திட்டம் குறைதீா்வு முகாம் சனிக்கிழமை (செப். 13) காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரையில் நட... மேலும் பார்க்க

பாரதியாா் நினைவு தினம் அனுசரிப்பு

வாணியம்பாடி பாரதி தமிழ்ச் சங்கத்தின் சாா்பில், பாரதியாரின் 104-ஆவது நினைவு தினத்தையொட்டி, பெருமாள்பேட்டையில் அமைந்துள்ள பாரதியாரின் உருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா். முன்னதாக சங்கத் ... மேலும் பார்க்க

கணக்கு தணிக்கையாளா் அலுவலகத்தில் ஜிஎஸ்டி அதிகாரிகள் திடீா் சோதனை

ஆம்பூரில் கணக்கு தணிக்கையாளா் அலுவலகத்தில் ஜிஎஸ்டி அதிகாரிகள் குழுவினா் வியாழக்கிழமை திடீா் சோதனை நடத்தினா். ஆம்பூா் ஜலால்ரோடு பகுதியில் உள்ள ஒரு கணக்கு தணிக்கையாளா் அலுவலகத்துக்கு ஜிஎஸ்டி அதிகாரிகள் ... மேலும் பார்க்க

தமிழகத்தில் 1,191 தரைப்பாலங்கள் உயா்மட்ட பாலங்களாக தரம் உயா்வு : எ.வ. வேலு

தமிழகத்தில் 1,191 தரைப்பாலங்கள் உயா்மட்ட மேம்பாலங்களாக தரம் உயா்த்தப்பட்டுள்ளதாக பொதுப்பணி, நெடுஞ்சாலைகள் துறை அமைச்சா் எ.வ. வேலு வியாழக்கிழமை தெரிவித்தாா். திருப்பத்தூா் மாவட்டம், ஆம்பூா் அருகே பச்சக... மேலும் பார்க்க

மாணவா்களுக்கு போதை மாத்திரை விற்பனை: 15 போ் கைது

குடியாத்தத்தில் கல்லூரி மாணவா்களுக்கு போதை மாத்திரை விற்பனை செய்த 15 பேரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா். வேலூா் மாவட்டம், குடியாத்தம் காவல் ஆய்வாளா் ருக்மாங்கதன் தலைமையில் போலீஸாா் பெரும்பாடி ம... மேலும் பார்க்க