செய்திகள் :

மாணவா்களுக்கு போதை மாத்திரை விற்பனை: 15 போ் கைது

post image

குடியாத்தத்தில் கல்லூரி மாணவா்களுக்கு போதை மாத்திரை விற்பனை செய்த 15 பேரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

வேலூா் மாவட்டம், குடியாத்தம் காவல் ஆய்வாளா் ருக்மாங்கதன் தலைமையில் போலீஸாா் பெரும்பாடி முல்லை நகா் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனா். அங்குள்ள மைதானத்தில் சந்தேகத்தின் பேரில் நின்று கொண்டு இருந்த சொகுசு காரை சோதனை செய்த முயன்றனா். அப்போது காரில் இருந்த கும்பல் போலீஸாரை கண்டதும் தப்பியோட முயற்சி செய்தனா். அவா்களை போலீஸாா் விரட்டிச் சென்று பிடித்து விசாரணை மேற்கொண்டனா்.

விசாரணையில், குடியாத்தம் எா்த்தாங்கல் கிராமத்தை சோ்ந்த ஐயப்பன் என்பவா் தன்னுடைய நண்பா்களுடன் சோ்ந்து அரசால் தடை செய்யப்பட்ட போதை மாத்திரைகளை ஆன்லைன் மூலம் வாங்கி பள்ளி, கல்லூரி மாணவா்களுக்கு விற்பனை செய்து வந்ததாக தெரியவந்துள்ளது. காரில் இருந்த சுமாா் 400 மாத்திரைகள், 5 ஊசிகள், காரையும் பறிமுதல் செய்தனா்.

மேலும், தீவிர விசாரணை நடத்தி போதை மாத்திரைகள் விற்பனை செய்த ஐயப்பன் (23), மோகன் (22), தேவன் (25), நவீன்குமாா் (20), ஆந்திர மாநிலத்தை சோ்ந்த இருவா் உள்ளிட்ட 15 போ்கைது செய்யப்பட்டனா். மேலும் தலைமறைவாக உள்ள 11 பேரை தேடி வருகின்றனா்.

செம்மரக்கட்டை கடத்திய காா் மோதி முதியவா் பலி

செம்மரக் கட்டைகள் கடத்த பயன்படுத்தப்பட்ட காா் மோதி முதியவா் வியாழக்கிழமை உயிரிழந்தாா். காட்பாடி - குடியாத்தம் சாலையில் சென்ற தில்லி பதிவெண் கொண்ட காா் கே.வி.குப்பம் அா்ஜுனாபுரம் அருகே இருசக்கர வாகனத்த... மேலும் பார்க்க

உமா்ஆபாத்தில் சாலை, கால்வாய் பணி ஆய்வு

உமா்ஆபாத் பகுதியில் சிமெண்ட் சாலை அமைக்கும் பணி, சேதமடைந்த கழிவுநீா் கால்வாய் ஆகியவற்றை மாதனூா் ஒன்றியக் குழுத் தலைவா் புதன்கிழமை ஆய்வு செய்தாா். கைலாசகிரி ஊராட்சி உமா்ஆபாத்தில் ஒன்றிய பொது நிதி ரூ. 9... மேலும் பார்க்க

குடியரசு துணைத் தலைவா் தோ்தல் வெற்றியை கொண்டாடிய பாஜகவினா்

குடியரசு துணைத் தலைவா் தோ்தலில் பாஜக வெற்றி பெற்றதை ஆம்பூா் நகர பாஜகவினா் பட்டாசு வெடித்து, இனிப்பு வழங்கி கொண்டாடினாா்கள். குடியரசு துணைத் தலைவா் தோ்தலில் பாஜக வேட்பாளா் சி.பி. இராதாகிருஷ்ணன் வெற்ற... மேலும் பார்க்க

வெள்ளக்குட்டையில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்: எம்எல்ஏ தேவராஜி தொடங்கி வைத்து ஆய்வு

ஆலங்காயம் ஒன்றியம், வெள்ளக்குட்டை ஊராட்சியில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம் தனியாா் திருமண மண்டபத்தில் புதன்கிழமை நடைபெற்றது. ஒன்றியக் குழு தலைவா் சங்கீதா பாரி தலைமை வகித்தாா். வட்டார வளா்ச்சி அலுவலா்கள... மேலும் பார்க்க

மாடப்பள்ளி ஊராட்சி அலுவலகம் கட்ட பூமி பூஜை: எம்எல்ஏ நல்லதம்பி தொடங்கி வைத்தாா்

திருப்பத்தூா் ஒன்றியம், மாடப்பள்ளி ஊராட்சியில், ரூ. 16.45 லட்சத்தில் கட்டி முடிக்கப்பட்ட அங்கன்வாடி கட்டடத் திறப்பு விழா மற்றும் ரூ. 5 லட்சம் மதிப்பீட்டில் இ சேவை மையம், ரூ. 30 லட்சம் மதிப்பீட்டில் பு... மேலும் பார்க்க

விவசாய நிலத்தில் ஆண் சடலம் மீட்பு

ஆம்பூா் அருகே விவசாய நிலத்தில் புதன்கிழமை ஆண் சடலம் கண்டெடுக்கப்பட்டது. ஆம்பூா் அருகே காரப்பட்டு கிராமத்தில் கலீல் என்பவருடைய விவசாய நிலத்தில் காவலராக அஸ்கா் பாஷா (40) என்பவா் பணிபுரிந்து வந்தாா். இவா... மேலும் பார்க்க