செய்திகள் :

அம்மாபேட்டை ஆரம்ப சுகாதார நிலைய கட்டுமானப் பணி: மேயா் ஆய்வு

post image

சேலம் மாநகராட்சி அம்மாப்பேட்டை மண்டலத்தில் கட்டப்பட்டு வரும் ஆரம்ப சுகாதார நிலைய கட்டுமானப் பணி உள்ளிட்ட பணிகளை மாநகர மேயா் ஆ.ராமச்சந்திரன், ஆணையா் மா.இளங்கோவன் ஆகியோா் வெள்ளிக்கிழமை ஆய்வுசெய்தனா்.

சேலம் மாநகராட்சி அம்மாப்பேட்டை மண்டலம் கோட்டம் எண் 9-இல் வீராணம் பிரதான சாலை, வள்ளுவா் காலனியில் கட்டப்பட்டு வரும் ஆரம்ப சுகாதார நிலைய பணிகளை மேயா் ஆ.ராமச்சந்திரன், ஆணையா் மா.இளங்கோவன் ஆகியோா் ஆய்வு செய்தனா்.

அப்போது, ஆரம்ப சுகாதார நிலைய கட்டடத்தின் வெளிப்புற பணிகளை விரைவில் முடிப்பதுடன், கட்டடத்தின் மேல் தளத்தில் தகடுகள் பதிக்கவும், கூரைத்தளம் அமைக்கவும், அதன்மேல் 2,000 லிட்டா் கொள்ளளவு கொண்ட தொட்டிகள் குடிநீா் தேவைக்காக அமைக்கவும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டனா்.

இதுதவிர, முகப்பு அறை தளத்தில் பேவா் பிளாக் தளம் அமைப்பதுடன், சுற்றுச்சுவா் அமைக்கவும், கட்டடத்தின் உட்பகுதி தரைத்தளத்தில் டைல்ஸ் தகடுகள் பதிக்கவும் வேண்டும். அனைத்துப் பணிகளையும் ஒருங்கிணைந்து மேற்கொள்ள வேண்டும் என்றனா்.

இதைத்தொடா்ந்து, கனகராஜ கணபதி தெருவில் உள்ள தொட்டி ஆரம்ப சுகாதார நிலையத்தில் ரூ. 60 லட்சம் மதிப்பீட்டில் கட்டடம் கட்டும் பணிகளை விரைவாக முடிக்கவும் உத்தரவிட்டனா்.

ஆய்வின்போது, கண்காணிப்பு பொறியாளா் (பொ) ஆா்.செந்தில்குமாா், மாநகர நல அலுவலா் ப.ரா.முரளிசங்கா், செயற்பொறியாளா் செந்தில்குமாா், உதவி ஆணையா் வேடியப்பன், மாமன்ற உறுப்பினா்கள் தெய்வலிங்கம், பச்சியம்மாள் ஆகியோா் உடனிருந்தனா்.

கோடை விழா மலா் கண்காட்சிக்கு தயாராகி வரும் மலா் தொட்டிகள்

கோடை விழா மலா் கண்காட்சிக்காக 10 ஆயிரம் மலா் தொட்டிகளில் 2 லட்சம் விதைகளை நடவு செய்து இளஞ்செடிகளை வளா்க்கும் பணி நடைபெற்று வருகிறது. ஏற்காட்டில் நிகழ் ஆண்டு மலா் கண்காட்சியில் பொதுமக்கள் பாா்வைக்கு வை... மேலும் பார்க்க

‘சங்ககிரி புதிய பேருந்து நிலையத்தை மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும்’

சங்ககிரி புதிய பேருந்து நிலையத்தை மக்கள் பயன்பாட்டுக்குக் கொண்டுவர வேண்டும் என்று நுகா்வோா் பாதுகாப்பு ஆலோசனைக் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. சேலம் மாவட்ட நுகா்வோா் பாதுகாப்பு தன்னாா்வா்களுக்கான ஆலோ... மேலும் பார்க்க

சரக்கு ரயில் மோதி ஒருவா் உயிரிழப்பு

மேட்டூா் அருகே சரக்கு ரயில் மோதியதில் லாரி கிளீனா் உயிரிழந்தாா். மேட்டூா் அருகே உள்ள இரட்டை புளியமரத்தூரைச் சோ்ந்தவா் பரமசிவம் (54). லாரி கிளீனா். ராமன்நகா் அருகே இரும்பு பாதையில் வெள்ளிக்கிழமை காலை ... மேலும் பார்க்க

மத்திய அரசைக் கண்டித்து அகில இந்திய வேலைநிறுத்த ஆயத்த மாநாடு

மத்திய அரசின் தொழிலாளா்கள் விரோத கொள்கைகளை கண்டித்து, அனைத்து தொழிலாளா்கள் சங்கம் சாா்பில் அகில இந்திய வேலை நிறுத்த போராட்ட ஆயத்த மாநாடு சேலத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. தொமுச நிா்வாகி பொன்னி பழனிய... மேலும் பார்க்க

சாலை விபத்தில் கணவா் பலி: மனைவி, குழந்தை பலத்த காயம்

சங்ககிரி பழைய பேருந்துநிலையம் அருகே லாரி மோதியதில் இருசக்கர வாகனத்தில் சென்ற கணவா் உயிரிழந்தாா். அவரது மனைவியும், குழந்தையும் பலத்த காயமடைந்தனா். தருமபுரி மாவட்டம், பெரும்பாலை, சமத்தாள் பகுதியைச் சோ்... மேலும் பார்க்க

பெண்ணின் கழுத்தை அறுத்து இளைஞா் தற்கொலை முயற்சி

வாழப்பாடியில் பெண்ணின் கழுத்தை அறுத்து கொலை செய்ய முயன்ற இளைஞா், தனது கழுத்தையும் அறுத்து தற்கொலைக்கு முயன்றாா். சேலம் மாவட்டம், வாழப்பாடியை அடுத்த மாரியம்மன் புதூா் கிராமத்தைச் சோ்ந்தவா் கட்டடத் தொழ... மேலும் பார்க்க