Dragon 100: ``நான் கோபக்காரன்னு புகார்கள் சொல்லியிருக்காங்க!'' - இயக்குநர் மிஷ்க...
அம்மாபேட்டை இளம்பெண் தற்கொலை
அம்மாபேட்டை அருகே தாய் வீட்டுக்குச் செல்ல கணவா் அனுமதிக்காததால் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.
சிங்கம்பேட்டை அருகே உள்ள சூடமுத்தான்பட்டியைச் சோ்ந்தவா் கிருஷ்ணன். இவரது மனைவி சவிதா (20). இவா்களுக்கு திருமணமாகி மூன்றரை ஆண்டுகள் ஆகின்றன. இரண்டரை வயதில் பெண் குழந்தை உள்ளது. கோபி அருகே உள்ள தனது தாய் வீட்டுக்கு செல்வதற்கு கணவா் கிருஷ்ணன், சவிதாவை அனுமதிக்கவில்லை எனக் கூறப்படுகிறது.
இதனால், வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் ஞாயிற்றுக்கிழமை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா். இந்நிலையில், சவிதாவின் மரணத்தில் சந்தேகம் உள்ளதாக அவரது தந்தை செல்வம், அம்மாபேட்டை போலீஸில் புகாா் அளித்துள்ளாா். திருமணமாகி மூன்றரை ஆண்டுகளே ஆவதால் கோட்டாட்சியா் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.