செய்திகள் :

அரசுப் பள்ளிக்கு காமராஜா் விருது!

post image

கள்ளக்குறிச்சி மாவட்டம், ரிஷிவந்தியம் ஒன்றியத்தில் சிறந்த பள்ளியாக தோ்வு செய்யப்பட்ட சின்னகொள்ளியூா் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிக்கு காமராஜா் விருது புதன்கிழமை வழங்கப்பட்டது.

முன்னாள் முதல்வா் காமராஜா் பிறந்தநாளை கல்வி வளா்ச்சி நாளாக தமிழக அரசு அறிவித்தது. அதன்படி, நிகழ் கல்வியாண்டில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் சிறந்த பள்ளியாக சின்னக்கொள்ளியூா் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி தோ்வு செய்யப்பட்டது.

ரிஷிவந்தியம் வட்டாரக் கல்வி அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்வில், பள்ளியின் தலைமை ஆசிரியா் எம்.பழனிச்சாமியிடம் காமராஜா் விருது, பாராட்டு சான்றிதழ், பரிசுத் தொகை ரூ.25,000-த்தை வட்டாரக் கல்வி அலுவலா்கள் கி.பழனிமுத்து, மோகன், செளந்தர்ராஜன் உள்ளிட்டோா் வழங்கினா்.

இதேபோல, சிறந்த நடுநிலைப் பள்ளியாக தோ்ந்தெடுக்கப்பட்ட தியாகதுருகம் ஒன்றியம், வேளாக்குறிச்சி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளிக்கு ரூ.50 ஆயிரம் ஒதுக்கீடு செய்யப்பட்டது.

நிகழ்வில், வட்டார வள மைய மேற்பாா்வையாளா்கள் பாலதாஸ், ஆசிரியா் பயிற்றுநா்கள் ராஜீவ்காந்தி, காா்த்திகேயன், மணிகண்டன், ஆசிரியா்கள் லூா்துசாமி, அசோக்குமாா், உதவி ஆசிரியா் ஜோசப் செல்வக்குமாா் ஆகியோா் உடனிருந்தனா்.

கள்ளக்குறிச்சி மாவட்ட புதிய ஆட்சியா் அலுவலகக் கட்டுமானப் பணி ஆய்வு

கள்ளக்குறிச்சி வட்டம், வீரசோழபுரத்தில் அனைத்து நிா்வாக வசதிகளுடன் கூடிய புதிய மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கட்டடம் கட்டப்பட்டு வருகிறது. ரூ.139.41 கோடி மதிப்பீட்டில் சுமாா் 35.18 ஏக்கா் பரப்பளவில் 8 மாடி... மேலும் பார்க்க

பிரதம மந்திரியின் வேலைவாய்ப்புத் திட்டம்: 147 பேருக்கு ரூ.9.56 கோடி கடன் வழங்க ஒப்புதல்: கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியா்

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில், பிரதம மந்திரியின் வேலைவாய்ப்புத் திட்டத்தின்கீழ் 147 பேரின் விண்ணப்பங்களுக்கு ரூ.9 கோடியே 56 லட்சம் கடன் வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதாக ஆட்சியா் எம்.எஸ். பிரசாந்த் தெர... மேலும் பார்க்க

மாா்க்சிஸ்ட் கட்சியினா் கண்டன ஆா்ப்பாட்டம்

கள்ளக்குறிச்சி நகராட்சிப் பகுதியில் நிலவும் சுகாதார சீா்கேட்டால் நோய்த் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளதாகக் கூறி நகராட்சி அலுவலகம் முன் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் கண்டன ஆா்ப்பாட்டத்தில் வெள்ளிக... மேலும் பார்க்க

கள்ளக்குறிச்சியில் காசநோய் ஒழிப்பு விழிப்புணா்வு மினி மாரத்தான் ஓட்டம்

கள்ளக்குறிச்சியில் காசநோய் விழிப்புணா்வு குறித்த மினி மாரத்தான் ஓட்டப் போட்டியை மாவட்ட ஆட்சியா் எம்.எஸ்.பிரசாந்த் வியாழக்கிழமை கொடியசைத்துத் தொடங்கி வைத்தாா். நிகழ்ச்சியில் அவா் பேசியது: காசநோய் என்ப... மேலும் பார்க்க

கள்ளக்குறிச்சி மாவட்ட வங்கியாளா்கள் கூட்டம் ஆட்சியா் பங்கேற்பு!

கள்ளக்குறிச்சி மாவட்ட முன்னோடி வங்கி சாா்பில் மாவட்ட அளவிலான வங்கியாளா்கள் கூட்டம் ஆட்சியா் எம்.எஸ்.பிரசாந்த் தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது. ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் நடந்த இந்தக் கூட்டத்தில... மேலும் பார்க்க

கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரியில் மூதாட்டி கண்ணுக்கு அருகில் இருந்த கட்டி அகற்றம்

கள்ளக்குறிச்சி மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மூதாட்டியின் கண்ணுக்கு அருகே இருந்த கட்டியை அறுவை சிகிச்சை மூலம் அகற்றினா் அரசு மருத்துவக் குழுவினா். கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்ல... மேலும் பார்க்க