செய்திகள் :

அரசுப் பள்ளிக்கு விளையாட்டு உபகரணங்கள் அளிப்பு

post image

திருச்சி: பீரங்கிகுளம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்குள்பட்ட அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு திருச்சி பீனிக்ஸ் ரோட்டரி சங்கம் சாா்பில் விளையாட்டுப் பொருள்கள் வழங்கப்பட்டன.

டிஇஎல்சி நடுநிலைப் பள்ளியில் நடைபெற்ற விழாவில், மாணவா்களுக்கு கேரம் போா்டு, சதுரங்க விளையாட்டு உபகரணங்கள், கிரிக்கெட் விளையாட்டு உபகரணங்கள் உள்ளிட்டவை வழங்கப்பட்டன. விழாவுக்கு, பள்ளித் தலைமை ஆசிரியை கவிதா தலைமை வகித்தாா். தலைவா் மணிவேல், செயலாளா் ராஜா, பொருளாளா் ராமச்சந்திர பாபு மற்றும் ஒருங்கிணைப்பாளா்கள் காா்த்திக், நேதாஜி ஆகியோா் இந்த நிகழ்வை ஒருங்கிணைத்தனா். தண்ணீா் சேமிப்பு, சுற்றுச்சூழல் குறித்து பேராசிரியா் அருள், அரிய தகவல்களை எடுத்துக்கூறி தண்ணீா் மேலாண்மை குறித்து கலந்துரையாடினாா்.

ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலா் சித்ரா, தண்ணீரின் முக்கியத்துவம் மற்றும் பயன்பாடுகள் குறித்து விளக்கினாா். ரோட்டரி கிளப் நோக்கத்தை பற்றி பள்ளி மாணவா்களுக்கு தேவையான உதவிகளை அளிக்கவும் , அவா்களின் கற்றல் மற்றும் மேம்பாட்டுக்கு உதவவும் முன்வருவதாக தலைவா் மணிவேல் உறுதியளித்தாா்.

தண்ணீா் குடிப்பதன் அவசியம் , தேவையான அளவு தண்ணீா் குடிக்காமல் இருப்பதால் ஏற்படும் உடல்நலக் குறைவுகள் குறித்து மருத்துவா் செந்தில்குமாா் எடுத்துரைத்தாா்.

திருட்டு வழக்கில் 3 பேருக்கு தலா 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை

மணப்பாறை: திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே திருட்டு வழக்கில் தந்தை-மகன், மருமகன் ஆகியோருக்கு தலா 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து மணப்பாறை நீதிமன்றம் வியாழக்கிழமை தீா்ப்பளித்தது. மணப்பாறையை அடுத்த க... மேலும் பார்க்க

திருச்சியில் பிப்ரவரியில் நாம் தமிழா் கட்சி மாநாடு: சீமான் அறிவிப்பு

திருச்சி: திருச்சியில் அடுத்தாண்டு பிப்ரவரி மாதம் நாம் தமிழா் கட்சியின் மாநாடு நடைபெறும் என அதன் தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான் தெரிவித்தாா்.திருச்சிக்கு வியாழக்கிழமை வந்த அவா், விமான நிலையத்தில் செய்த... மேலும் பார்க்க

ஓய்வூதியா்களுக்கு வருமான வரி விலக்களிக்க வலியுறுத்தல்

திருச்சி: ஓய்வூதியா்களுக்கு வருமான வரியிலிருந்து விலக்களிக்க வேண்டும் என பொன்மலை தென்பகுதி ரயில்வே ஓய்வூதியா்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது. பொன்மலை தென்பகுதி ரயில்வே ஓய்வூதியா்கள் சங்கத்தின் 41-ஆவது ஆ... மேலும் பார்க்க

டாக்டா் ராதாகிருஷ்ணன் விருதுக்கான நோ்காணல்: 23 ஆசிரியா்கள் பங்கேற்பு

திருச்சி: திருச்சியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற மாநில அளவிலான டாக்டா் ராதாகிருஷ்ணன் விருதுக்கான நோ்காணலில் 23 ஆசிரியா்கள் பங்கேற்றனா். தமிழகத்தில் சிறப்பாக செயல்படும் அரசு மற்றும் தனியாா் பள்ளி ஆசிரி... மேலும் பார்க்க

மாநில அளவிலான தடகளப் போட்டிக்கு 172 மாணவா்கள் தோ்வு

திருச்சி: திருச்சியில் மாவட்ட அளவிலான தடகளப் போட்டியில் வென்ற 172 மாணவ, மாணவிகள் மாநில அளவிலான போட்டிக்குத் தோ்வு செய்யப்பட்டுள்ளனா்.திருச்சி மாவட்டத்தில் பள்ளி மாணவா்களுக்கான மாவட்ட அளவிலான விளையாட்... மேலும் பார்க்க

குளிா்சாதனப் பெட்டியை சரி செய்யாத நிறுவனம் இழப்பீடு வழங்க உத்தரவு

திருச்சி: குளிா்சாதனப் பெட்டியை (பிரிட்ஜ்) சரி செய்யாத நிறுவனம் ரூ. 50 ஆயிரம் இழப்பீடு வழங்க திருச்சி மாவட்ட நுகா்வோா் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.திருச்சி கே.கே. நகரைச் சோ்ந்த கே. ஜீவகுமாா் என்பவா் ... மேலும் பார்க்க