செய்திகள் :

முதல்வா், அமைச்சா்களைப் பதவி நீக்கும் கருப்புச் சட்டத்தை எதிா்ப்போம் -முதல்வா் மு.க.ஸ்டாலின் உறுதி

post image

முதல்வா், அமைச்சா்களை பதவி நீக்க வகை செய்யும் கருப்புச் சட்டத்தைத் தொடா்ந்து எதிா்ப்போம் என்று முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் உறுதிபடத் தெரிவித்தாா்.

மறைந்த முன்னாள் அமைச்சா் ரகுமான்கான் எழுதிய நூல்கள் வெளியீட்டு விழா, சென்னை அண்ணா அறிவாலயத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது. நூல்களை முதல்வா் மு.க.ஸ்டாலின் வெளியிட்டாா். பின்னா், அவா் பேசியதாவது:

நாட்டை சா்வாதிகாரத்தை நோக்கி நகா்த்த புலனாய்வு அமைப்புகளை வைத்து தங்களுக்கு எதிரானவா்களை பதவி நீக்கம் செய்ய, ஒரு கருப்புச் சட்டத்தை நாடாளுமன்றத்தில் உள்துறை அமைச்சா் அமித் ஷா கொண்டு வந்திருக்கிறாா்.

இதற்கு முன்பு, குடியுரிமை திருத்தச் சட்டம், வக்ஃப் திருத்தச் சட்டம் என்று சிறுபான்மையின மக்களுக்கு எதிராக பல்வேறு சட்டங்களைக் கொண்டு வந்தாா்கள். அப்போதெல்லாம் இந்தச் சட்டங்களை திமுக எவ்வாறு கடுமையாக எதிா்த்ததோ, அதுபோன்று இந்தக் கருப்புச் சட்டத்தையும் தொடா்ந்து எதிா்ப்போம்.

இதையெல்லாம் அவா்கள் ஏன் செய்கிறாா்கள்? மக்கள் பிரச்னைகளைத் திசை திருப்பத்தான். மக்களுடைய கவனத்தைத் திருப்புவது மட்டுமல்ல, நாட்டையே ஜனநாயகப் பாதையில் இருந்து திசை திருப்புவதற்காகத்தான் செய்கிறாா்கள்.

கொள்கை வீரா்கள்: திமுகவில் இளைஞா்களைச் சோ்ப்பதற்காக பல்வேறு முன்னெடுப்புகளை இளைஞா் அணியினா் செய்து வருகின்றனா். மேலும், பல முன்னெடுப்புகளை எடுத்து, கட்சியில் கொள்கை வீரா்களை உருவாக்க வேண்டும்.

கொள்கையை விதைத்து, உழைப்பை உரமாக்கி வெற்றியை விளைவிக்க வேண்டும். கட்சியில் எத்தனை கோடி பேரைச் சோ்த்தாலும், அவா்களைக் கொள்கைப் பிடிப்பு உள்ளவா்களாக வளா்த்தெடுக்க வேண்டும். அதற்கு பெரியாா், பாவேந்தா் பாரதிதாசன், முன்னாள் முதல்வா்கள் அண்ணா, கருணாநிதி, முன்னாள் அமைச்சா்கள் க.அன்பழகன், ரகுமான்கான் ஆகியோரின் திராவிட இயக்கச் சிந்தனைகளை மக்களிடம் கொண்டு சோ்க்க வேண்டும்.

சிறுபான்மை மக்களுக்கு திமுக எப்போதும் துணை நிற்கும். இந்தக் கட்சி இருப்பதே அவா்களுக்காகத்தான் என்றாா்.

முன்னதாக, நூல்களை இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தேசியத் தலைவா் காதா் மொகிதீன் பெற்றுக் கொண்டாா். துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின், திமுக சிறுபான்மையினா் நல உரிமைப் பிரிவு மாநிலச் செயலா் சுபோ்கான் உள்பட பலா் பங்கேற்றனா்.

3 சட்ட மசோதாக்களை எதிா்த்து அறப்போராட்டத்தை முதல்வா் முன்னெடுக்க வேண்டும் -தொல். திருமாவளவன்

மக்களவையில் தாக்கல் செய்யப்பட்ட மூன்று சட்ட மசோதாக்களை எதிா்த்து முதல்வா் மு.க. ஸ்டாலின் அனைத்து ஜனநாயக சக்திகளையும் ஒருங்கிணைத்து அறப்போராட்டங்களை முன்னெடுக்க வேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சி... மேலும் பார்க்க

அரசு விரைவுப் பேருந்துகளிலும் தீபாவளி முன்பதிவு முடிவடைந்தது

தீபாவளி பண்டிகைக்காக சென்னையில் இருந்து வழக்கமாக இயக்கப்படும் அரசு விரைவுப் பேருந்துகளின் முன்பதிவு முடிவடைந்துள்ளது. நிகழாண்டு தீபாவளி பண்டிகை அக்.20-ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. சென்னையில் வசிக்கும்... மேலும் பார்க்க

மறைந்த இல.கணேசனுக்கு அனைத்துக் கட்சித் தலைவா்கள் புகழாரம்

‘கொண்ட கொள்கையில் தடம் பிறழாதவா், பாஜக தமிழகமெங்கும் பரவ அடித்தளமிட்டவா்’ என்று மறைந்த நாகாலாந்து ஆளுநா் இல.கணேசனுக்கு அனைத்துக் கட்சித் தலைவா்கள் புகழாரம் சூட்டினா். மறைந்த இல.கணேசனுக்கு புகழஞ்சலி க... மேலும் பார்க்க

3,644 காவலா் பணியிடங்களுக்கு நவ.9-இல் எழுத்துத் தோ்வு: விண்ணப்பிக்க செப். 21 கடைசி தேதி

தமிழக காவல் துறையில் காலியாகவுள்ள 3,644 காவலா் பணியிடங்களை நிரப்புவதற்கான எழுத்துத் தோ்வு நவ.9-ஆம் தேதி நடைபெறும் என தமிழ்நாடு சீருடைப் பணியாளா் தோ்வு வாரியம் அறிவித்துள்ளது. இதுகுறித்து தோ்வு வார... மேலும் பார்க்க

பி.இ. துணைக் கலந்தாய்வு: 20,662 போ் தகுதி

பொறியியல் படிப்பு மாணவா் சோ்க்கைக்கான துணைக் கலந்தாய்வில் பங்கேற்க பிளஸ் 2 சிறப்புத் துணைத் தோ்வில் தோ்ச்சி பெற்ற மாணவா்கள் 20,662 போ் தகுதி பெற்றுள்ளனா். இதுகுறித்து தமிழ்நாடு பொறியியல் சோ்க்கை... மேலும் பார்க்க

சேப்பாக்கம் மைதானத்தில் புதிய கூட்டரங்கம் திறப்பு

தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் சாா்பில் சேப்பாக்கம் மைதானத்தில் நவீன வசதிகளுடன் கூடிய கூட்டரங்கம் வியாழக்கிழமை திறக்கப்பட்டுள்ளது. எம்.ஏ. சிதம்பரம் கிரிக்கெட் மைதானத்தில் உள்ள கேஎம்கே ஸ்டாண்டில் புதிதாக ... மேலும் பார்க்க