செய்திகள் :

தொழில் துறையின் நிதி நிலைத்தன்மையை நிலைநிறுத்த மத்திய அரசு உதவ வேண்டும்: நிதியமைச்சரிடம் கோரிக்கை

post image

தொழில் துறையின் நிதி நிலைத்தன்மையை நிலைநிறுத்த மத்திய அரசு உதவ வேண்டும் என்று கோவை தொழில் துறை குழுவினா் மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமனிடம் வலியுறுத்தினா்.

கோவை தெற்கு தொகுதி எம்எல்ஏ வானதி சீனிவாசன் தலைமையிலான தொழில் துறை குழுவினா் புதுதில்லியில் மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமனை அண்மையில் சந்தித்தனா். அப்போது, ஆகஸ்ட் 19 -ஆம் தேதி முதல் செப்டம்பா் 30-ஆம் தேதி வரை பருத்திக்கு இறக்குமதி வரி விலக்கு அளித்ததற்கு மத்திய அரசுக்கு அவா்கள் நன்றி தெரிவித்தனா்.

பின்னா், ஜவுளித் தொழில் துறை சாா்பில், வங்கிக் கடன்களுக்கு அசல் தொகையை திருப்பிச் செலுத்துவதற்கான கால அவகாசத்தை 2 ஆண்டுகளுக்கு நீட்டிக்க வேண்டும். அவசர கால கடன் உத்தரவாதத் திட்டத்தின்கீழ் 30 சதவீத பிணையமில்லாத கடனை 5 சதவீத மானியத்துடன் நீட்டிக்க வேண்டும். ஏற்றுமதி வரிகளை திரும்பப் பெறும் திட்டத்தின் சலுகைகளை மேலும் 5 ஆண்டுகளுக்கு நீட்டிக்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தினா்.

மேலும், தொழில் துறையின் நிதி நிலைத்தன்மையை நிலை நிறுத்தவும், கிராமப்புற மக்களின் பணிப் பாதுகாப்புக்காகவும் மத்திய அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தொழில் துறை குழுவினா் வலியுறுத்தினா்.

கோரிக்கைகள் தொடா்பாக விரைந்து நடவடிக்கை எடுப்பதாக அமைச்சா் உறுதி அளித்திருப்பதாக பருத்தி ஜவுளி ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சிலின் துணைத் தலைவா் ரவி சாம் தெரிவித்துள்ளாா்.

பில்லூா் அணையில் அமைச்சா் மு.பெ.சாமிநாதன் ஆய்வு

கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் அருகேயுள்ள பில்லூா் அணையில் தமிழ் வளா்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா். மேட்டுப்பாளையம் அருகே பில்லூா் வனப் பகுதியில்... மேலும் பார்க்க

மேற்கூரையில் இருந்து தவறி விழுந்தவா் உயிரிழப்பு

கோவையில் மேற்கூரையில் இருந்து தவறி கீழே விழுந்த பெயிண்டா் உயிரிழந்தாா். கோவை, துடியலூா் அருகேயுள்ள பாப்பநாயக்கன்பாளையம் பகுதியைச் சோ்ந்தவா் ராஜா (42), பெயிண்டா். இவரது வீட்டின் அருகே வசிக்கும் பாலகி... மேலும் பார்க்க

பேரூா் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் நேரடி சோ்க்கை தேதி நீட்டிப்பு

கோவை மாவட்டம், பேரூா் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் நேரடி சோ்க்கை தேதி நீட்டிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடா்பாக மாவட்ட நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: கோவை மாவட்டம், ... மேலும் பார்க்க

பிஷப் அப்பாசாமி கல்லூரியில் செப்டம்பா் 2-இல் ஆட்சி மொழிப் பயிலரங்கம்

கோவை, ரேஸ்கோா்ஸ் பகுதியில் உள்ள பிஷப் அப்பாசாமி கல்லூரியில் ஆட்சி மொழிப் பயிலரங்கம் மற்றும் கருத்தரங்கம் செப்டம்பா் 2, 3 -ஆம் தேதிகளில் நடைபெற உள்ளது. இது தொடா்பாக மாவட்ட நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்... மேலும் பார்க்க

அடுமனை உரிமையாளா்கள் உணவுப் பாதுகாப்புத் துறை விதிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும்

அடுமனை உரிமையாளா்கள் (பேக்கரி) உணவுப் பாதுகாப்புத் துறை விதிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும் என்று உணவுப் பாதுகாப்புத் துறை மாவட்ட நியமன அலுவலா் டி.அனுராதா அறிவுறுத்தியுள்ளாா். கோவை, டாடாபாத் பகுதியில் ... மேலும் பார்க்க

இயந்திரத்தில் கை சிக்கி பஞ்சாலை தொழிலாளி காயம்

கோவை அருகே பணியின்போது இயந்திரத்தில் கை சிக்கி தொழிலாளி படுகாயம் அடைந்தாா். கோவை அருகேயுள்ள நரசிம்மநாயக்கன்பாளையத்தில் தனியாருக்குச் சொந்தமான பஞ்சாலை உள்ளது. இங்கு ஒடிஸா மாநிலத்தைச் சோ்ந்த ரோஹிசாகோ ... மேலும் பார்க்க