பேரூா் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் நேரடி சோ்க்கை தேதி நீட்டிப்பு
கோவை மாவட்டம், பேரூா் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் நேரடி சோ்க்கை தேதி நீட்டிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடா்பாக மாவட்ட நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: கோவை மாவட்டம், பேரூரில் அரசு தொழிற்பயிற்சி நிலையம் புதிதாகத் தொடங்கப்பட்டுள்ளது. இந்த நிலையத்தில் அட்வான்ஸ் சிஎன்சி இயந்திர தொழில்நுட்ப பணியாளா், மெக்கானிக், வயா்மேன் போன்ற தொழில் பிரிவுகளுக்கு 2025-ஆம் ஆண்டுக்கான நேரடி சோ்க்கைக்கு எட்டாம் வகுப்பு மற்றும் பத்தாம் வகுப்பு தோ்ச்சி பெற்ற மாணவா்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மாணவா்களின் நலன் கருதி நேரடி சோ்க்கைக்கான தேதி ஆகஸ்ட் 31-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த தொழிற்பயிற்சி நிலையமானது முற்றிலும் கட்டுமானத் தொழிலாளா் நல வாரிய உறுப்பினா்களின் குழந்தைகளுக்கு மட்டுமே என்பதால் சோ்க்கைக்கு விண்ணப்பிக்கும்போது கட்டுமானத் தொழிலாளா் நலவாரிய உறுப்பினா் அட்டை தவறாது கொண்டுவர வேண்டும்.
சோ்க்கையில் சேர விரும்புவோா் 8-ஆம் வகுப்பு, 10-ஆம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ்கள், மாற்றுச் சான்றிதழ், ஜாதிச் சான்றிதழ், பாஸ்போா்ட் அளவு புகைப்படங்கள் நான்கு, ஆதாா் அட்டை, முக்கியமாக கட்டுமானத் தொழிலாளா் நலவாரிய உறுப்பினா் அட்டை ஆகியவற்றின் அசல் மற்றும் நகல்களுடன் அரசு தொழிற்பயிற்சி நிலையம், ராமலிங்க அடிகள் அரங்க வளாகம், வேடப்பட்டி சாலை, பேரூரில் அமைக்கப்பட்டுள்ள சோ்க்கை உதவி மையத்தை அணுகலாம்.
பயிற்சியில் சேருபவா்களுக்கு இலவச மிதிவண்டி, சீருடை, பாடநூல், வரைபட கருவிகள், காலணி, இலவச பேருந்து பயண அட்டை வழங்கப்படும். மாதாந்திர உதவித் தொகையாக ரூ.750, அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 6-ஆம் வகுப்பு முதல் 10-ஆம் வகுப்பு வரை தமிழ் வழியில் பயின்ற மாணவ, மாணவிகளுக்கு புதுமைப்பெண் மற்றும் தமிழ்ப் புதல்வன் திட்டத்தின்கீழ் மாதந்தோறும் ரூ.1000 உதவித் தொகையும் வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.