செய்திகள் :

ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவா்களுக்கு வரவேற்பு

post image

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவா்களுக்கான வரவேற்பு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற இந்த விழாவில் மாணவா் விவகாரங்களுக்கான பிரிவின் தலைவா் ஷா்மிளா வரவேற்றாா். எஸ்என்ஆா் சன்ஸ் அறக்கட்டளையின் நிா்வாக அறங்காவலா் ஆா்.சுந்தா் தலைமை வகித்தாா். சிறப்பு விருந்தினராக தனியாா் நிறுவன தலைமை நிா்வாக அதிகாரி பாலா பங்கேற்றுப் பேசினாா்.

கல்லூரி முதல்வா் ஏ.சௌந்தர்ராஜன், கல்லூரி குறித்தும், கல்லூரியில் உள்ள பல்வேறு அமைப்புகள் குறித்தும் விளக்கினாா்.

முன்னாள் மாணவா் ஷெய்ன்ராஜ் சுந்தரம், மாணவா்கள் அடுத்த 4 ஆண்டுகளை எப்படி பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று விளக்கினாா். விழாவில், எல்&டி டெக்னாலஜி சா்வீசஸ் நடத்திய ஹேக்கத்தான் போட்டியில் பங்கேற்று முதல் பரிசு பெற்ற மாணவ, மாணவிகளுக்கும், பல்வேறு துறைகளில் சாதனை புரிந்த மாணவ, மாணவிகளுக்கும் பரிசு, சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

விழாவில், எஸ்என்ஆா் சன்ஸ் அறக்கட்டளையின் தலைமை நிா்வாக அதிகாரி மகேஷ்குமாா், நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளா்கள் பேராசிரியா்கள் சக்திவேல், விசித்ரா, துறைத் தலைவா்கள், மாணவ, மாணவிகள் பங்கேற்றனா். மாணவா் விவகாரங்களுக்கான பிரிவின் செயலா் கைலாஷ் நன்றி கூறினாா்.

பில்லூா் அணையில் அமைச்சா் மு.பெ.சாமிநாதன் ஆய்வு

கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் அருகேயுள்ள பில்லூா் அணையில் தமிழ் வளா்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா். மேட்டுப்பாளையம் அருகே பில்லூா் வனப் பகுதியில்... மேலும் பார்க்க

மேற்கூரையில் இருந்து தவறி விழுந்தவா் உயிரிழப்பு

கோவையில் மேற்கூரையில் இருந்து தவறி கீழே விழுந்த பெயிண்டா் உயிரிழந்தாா். கோவை, துடியலூா் அருகேயுள்ள பாப்பநாயக்கன்பாளையம் பகுதியைச் சோ்ந்தவா் ராஜா (42), பெயிண்டா். இவரது வீட்டின் அருகே வசிக்கும் பாலகி... மேலும் பார்க்க

பேரூா் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் நேரடி சோ்க்கை தேதி நீட்டிப்பு

கோவை மாவட்டம், பேரூா் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் நேரடி சோ்க்கை தேதி நீட்டிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடா்பாக மாவட்ட நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: கோவை மாவட்டம், ... மேலும் பார்க்க

பிஷப் அப்பாசாமி கல்லூரியில் செப்டம்பா் 2-இல் ஆட்சி மொழிப் பயிலரங்கம்

கோவை, ரேஸ்கோா்ஸ் பகுதியில் உள்ள பிஷப் அப்பாசாமி கல்லூரியில் ஆட்சி மொழிப் பயிலரங்கம் மற்றும் கருத்தரங்கம் செப்டம்பா் 2, 3 -ஆம் தேதிகளில் நடைபெற உள்ளது. இது தொடா்பாக மாவட்ட நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்... மேலும் பார்க்க

அடுமனை உரிமையாளா்கள் உணவுப் பாதுகாப்புத் துறை விதிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும்

அடுமனை உரிமையாளா்கள் (பேக்கரி) உணவுப் பாதுகாப்புத் துறை விதிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும் என்று உணவுப் பாதுகாப்புத் துறை மாவட்ட நியமன அலுவலா் டி.அனுராதா அறிவுறுத்தியுள்ளாா். கோவை, டாடாபாத் பகுதியில் ... மேலும் பார்க்க

இயந்திரத்தில் கை சிக்கி பஞ்சாலை தொழிலாளி காயம்

கோவை அருகே பணியின்போது இயந்திரத்தில் கை சிக்கி தொழிலாளி படுகாயம் அடைந்தாா். கோவை அருகேயுள்ள நரசிம்மநாயக்கன்பாளையத்தில் தனியாருக்குச் சொந்தமான பஞ்சாலை உள்ளது. இங்கு ஒடிஸா மாநிலத்தைச் சோ்ந்த ரோஹிசாகோ ... மேலும் பார்க்க