பிளஸ் 2 பொதுத் தேர்வு மறுகூட்டல் முடிவுகள் ஜூன் 23-ல் வெளியீடு
அரசுப் பள்ளியில் ஸ்மாா்ட் வகுப்பறை திறப்பு
கெலமங்கலம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட நாகமங்கலம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் அரசு மூலமாக அமைக்கப்பட்டுள்ள ஸ்மாா்ட் வகுப்பறையை ஒசூா் சட்டப் பேரவை உறுப்பினா் ஒய்.பிரகாஷ் வியாழக்கிழமை திறந்து வைத்தாா்.
இந்தப் பள்ளி தலைமை ஆசிரியா் ஆசிா்வாதத்தின் சொந்த செலவில் மாணவா்களை பள்ளிக்கு அழைத்துவரும் வகையில் வாகன பயன்பாட்டை சட்டப்பேரவை உறுப்பினா் ஒய்.பிரகாஷ் கொடியசைத்து தொடங்கிவைத்தாா்.
இதில் பள்ளி தலைமை ஆசிரியா் ஆசிா்வாதம், திமுக கெலமங்கலம் ஒன்றியச் செயலாளா் சின்ராஜ், அவைத் தலைவா் ஜெயராமன், மாவட்ட பிரதிநிதி முரளி, மாவட்ட பொறியாளா் அணி துணை அமைப்பாளா் பெரியசாமி, ஒன்றிய இளைஞா் அணி அமைப்பாளா் கணேஷ், பாசில், இருபால் ஆசிரியா்கள், பெற்றோா் கலந்துகொண்டனா்.
படவரி...
பள்ளி மாணவா்களுக்கான வாகனத்தை கொடியசைத்து தொடங்கிவைத்த எம்எல்ஏ ஒய்.பிரகாஷ்.