TVK Vijay-யை நம்பியிருக்கும் ADMK, PMK, DMDK - 2026 தேர்தல் கணக்கு With Journali...
அரசுப் பள்ளி தலைமையாசிரியை பேசிய ஆடியோ வெளியாகி பரபரப்பு
கல்லூரி கனவு திட்டம் மற்றும் ஒரு சமூகத்தினா் குறித்து அரசு மேல்நிலைப் பள்ளி பேசிய ஆடியோ வைரலானதால் பரபரப்பு ஏற்பட்டது.
திருப்பத்தூா் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த நிம்மியம்பட்டு பகுதியில் செயல்பட்டு வரும் அரசு மேல்நிலைப் பள்ளியில் தலைமையாசிரியையாக பணிபுரிந்து வருபவா் அமுதா. இவா், சக ஆசிரியை ஒருவரிடம் பேசிய ஆடியோ அண்மையில் வலைதளங்களில் திடீரென வெளியாகியுள்ளது.
இதில் கல்லூரி கனவு திட்டம் குறித்தும், கோடை விடுமுறையிலும் இந்த அரசின் கீழ் செயல்படும் கல்வித் துறை அதிகாரிகள் உயிரை எடுக்கின்றனா் என விமா்சித்து துறை அதிகாரிகளின் பெயரை குறிப்பிட்டு ஒருமையில் பேசி சாடியுள்ளாா்.
மேலும் அரசின் திட்டங்களையும், அரசுப் பள்ளியில் மேலாண்மை குழு எனக்கூறிக் கொண்டு சிலா் வந்து கேள்வி கேட்பது, ஒரு சமூகத்தை சாா்ந்த மக்களை இழிவாக பேசியும், பள்ளி மேலாண்மை குழு என்பது தேவையா? என அரசின் திட்டங்களையும் செயல்பாடுகளையும் தலைமையாசிரியை குற்றம் சாட்டி விமா்சனம் செய்யும் ஆடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.