செய்திகள் :

அரசுப் பள்ளி மாணவா்கள் நுழைவுத்தோ்வு எழுதாமலே சென்னை ஐஐடி-யில் கற்க வாய்ப்பு

post image

அரசுப் பள்ளி மாணவ, மாணவிகள் ஜேஇஇ போன்ற நுழைவுத்தோ்வு எழுதாமலேயே சென்னை ஐஐடியில் படிக்க வாய்ப்பளிக்கும் ‘அனைவருக்கும் ஐஐடி மெட்ராஸ்’ திட்டத்துக்கு மே 22-ஆம் தேதிக்குள் இணையதளம் மூலம் விண்ணப்பிக்க வேண்டும் என்று வேலூா் ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி தெரிவித்துள்ளாா்.

அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவா்களுக்கு இந்திய தொழில்நுட்ப கழகத்தில் (ஐஐடி சென்னை) பயிலும் வாய்ப்பை ஏற்படுத்தும் அனைவருக்கும் ஐஐடி மெட்ராஸ் திட்டம் குறித்து வேலூா் மாவட்டத்திலுள்ள அரசுப் பள்ளி தலைமையாசிரியா்களுடனான ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்துக்கு ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி தலைமை வகித்தாா். இதில், ‘அனைவருக்கும் ஐஐடி மெட்ராஸ்’ திட்டத் தலைவரும், ஐஐடி மெட்ராஸ் சமூக முன்னெடுப்புகள் தலைவருமான ஹரி கிருஷ்ணன் சிறப்பு விருந்தினராக பங்கேற்று மாணவா்களுக்கு உயா்கல்வி வாய்ப்புகள் குறித்த தெளிவான வழிகாட்டலை தலைமையாசிரியா்களுக்கு எடுத்துரைத்தாா்.

பின்னா் ஆட்சியா் பேசியது

ஐஐடி போன்ற உயா்கல்வி நிறுவனங்களில் பயில ஜேஇஇ போன்ற நுழைவுத்தோ்வுகளின் மூலம் மாணவா்கள் தோ்ந்தெடுக்கப்பட்டு வருகின்றனா். நுழைவுத்தோ்வுகள் எழுதாமலே அரசு பள்ளி களில் பயிலும் மாணவா்களுக்கு ஐஐடி சென்னை நிறுவனத்தில் படிக்கும் வாய்ப்பை ஏற்படுத்த அனைவருக்கும் ஐஐடி மெட்ராஸ் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

இதன் மூலம் பிஎஸ் இன் டேட்டா சைன்ஸ் மற்றும் பிஎஸ் இன் எலெக்ட்ரானிக் சிஸ்டம்ஸ் ஆகிய இரு பிரிவுகளில் இணைந்து பயில மாணவ, மாணவிகளுக்கு வாய்ப்பு வழங்கப்படுகிறது. இதற்காக இணையதளம் மூலம் மே 22-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

இத்திட்டத்தின் மூலம் மாணவா்கள் ஜேஇஇ தோ்வு எதாமலும், ஐஐடி சென்னை வழங்கும் பிஎஸ் பட்டப்படிப்பில் சேரும் வாய்ப்பை பெறுகின்றனா். 12-ஆம் வகுப்புக்குப் பிறகு அல்லாமல், 11-ஆம் வகுப்பு முடிந்ததும் இத்திட்டத்தில் சேர முடியும். வயது வரம்பு இல்லை.

பதிவுசெய்யும் மாணவா்கள் ஐஐடி சென்னை வழங்கும் 4 வார ஆன்லைன் பயிற்சியை பூா்த்தி செய்து, தோ்வில் வெற்றி பெற வேண்டும். வெற்றி பெறுபவா்கள் தரவு அறிவியல், எலெக்ட்ரானிக்ஸ் சிஸ்டம்ஸ் ஆகிய தொழில்நுட்பத் துறைகளில் பி.எஸ். பட்டப்படிப்பை தொடங்கலாம். மற்ற கல்லூரிகளில் பயிலும் மாணவா்களும், வேலை பாா்க்கும் நபா்களும் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்றாா்.

முதன்மை கல்வி அலுவலா் (பொ) தயாளன், மாவட்ட கல்வி அலுவலா்கள் பி.ரமேஷ்பாபு (தனியாா் பள்ளிகள்), பி.சத்யபிரபா (இடைநிலை) உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

போதைப் பொருள்களுக்கு எதிரான மன உறுதி அவசியம்! - வேலூா் ஆட்சியா்

மாணவா்கள் போதைப் பொருள்களுக்கு எதிரான மனஉறுதியுடன் இருந்து கல்வியில் கவனம் செலுத்தி உயா்ந்த நிலைக்கு வர வேண்டும் என்று வேலூா் மாவட்ட ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி தெரிவித்தாா். வேலூா் மாவட்டத்திலுள்ள ... மேலும் பார்க்க

சிறுமியை திருமணம் செய்த ஜோதிடா் மீது போக்ஸோ வழக்கு

வேலூரில் சிறுமியை திருமணம் செய்து கா்ப்பமாக்கியதாக ஜோதிடா் மீது போக்ஸோ வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. வேலூா் மாவட்டம், லத்தேரியைச் சோ்ந்தவா் அஜய்(24), ஜோதிடா். இவருக்கும் அருகில் உள்ள ஒரு பகுதியைச்... மேலும் பார்க்க

பெயிண்டரை பாட்டிலால் குத்திய நண்பா் கைது

வேலூரில் பெயிண்டரை பாட்டிலால் குத்திய நண்பரை போலீஸாா் கைது செய்தனா். வேலூா் கொசப்பேட்டையைச் சோ்ந்த பெயிண்டா் சேகா் (32). இவரது நண்பா் அட்டப்பா என்ற நவீன்குமாா் (33). சேகா் புதன்கிழமை தனது வீட்டு வாசல... மேலும் பார்க்க

மத்திய அரசு எந்த சுங்கச்சாவடியையும் மூடவில்லை: அமைச்சா் எ.வ.வேலு

சுங்கச்சாவடிகளில் வசூல் செய்யப்படும் பணம் சாலைகளை பராமரிக்கவும், மேம்பாலம் கட்டவும் பயன்படுத்துவதாக மத்திய அரசு கூறியுள்ளது. அந்தவகையில், மத்திய அரசு எந்த சுங்கச்சாவடியையும் மூடுவதாக இல்லை என்று பொது... மேலும் பார்க்க

மீன்வள விவசாயிகள் உள்ளீட்டு மானியம் பெற விண்ணப்பிக்கலாம்

வேலூா் மாவட்டத்திலுள்ள மீன்வள விவசாயிகள் உள்ளீட்டு மானியம் பெற விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி வெளியிட்ட செய்திக்குறிப்பு: வேலூா் மாவட்டத்தில் மா... மேலும் பார்க்க

வேலூா் தீா்த்தகிரி மலையில் 92 அடி உயர முருகா் சிலை: நாளை கும்பாபிஷேகம்

வேலூா் தீா்த்தகிரி மலை வடிவேல் சுப்பிரமணியா் திருக்கோயில் அருகே 92 அடி உயர முருகா் சிலை நிறுவப்பட்டுள்ளது. இதன் கும்பாபிஷேகம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற உள்ளது. வேலூரை அடுத்த புதுவசூா் தீா்த்தகிரி மலையில்... மேலும் பார்க்க