அரசுப் பேருந்திலிருந்து தவறி விழுந்த பெண்பலி
வேதாரண்யம்: அரசு பேருந்தில் பயணித்த பெண் ஒருவா் இறங்கும்போது தவறி விழுந்து ஞாயிற்றுக்கிழமை நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.
வேதாரண்யம், மறைங்காய நல்லூா் உச்சகட்டளை பகுதியைச் சோ்ந்த ராமன் மனைவி செல்லமணி (49). மகன் பூவரசன் (17).
முத்துப்பேட்டை அருகே உள்ள கழுவங்காடு பகுதிக்குச் சென்றிருந்த தாயும், மகனும் வீட்டுக்கு திரும்ப பட்டுக்கோட்டையில் இருந்து வேதாரண்யம் வந்து கொண்டிருந்த அரசுப் பேருந்தில் ஞாயிற்றுக்கிழமை பயணித்துள்ளனா்.
இறங்க வேண்டிய கொடிமரம் நிறுத்தம் பகுதியில் பேருந்து நின்ற போது பூவரசன் இறங்கிவிட்ட நிலையில், செல்வமணி இறங்கிய போது தவறி விழுந்து பலத்த காயத்துடன் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.
பூவரசன் புகாரின் பேரில் வேதாரண்யம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.