ஈரான் மதகுரு கமேனியைக் கொன்றால்தான்... நெதன்யாகு கூறுவதென்ன?
மினி மாரத்தான் :கூட்டுறவுத் துறை அழைப்பு
நாகப்பட்டினம்: சா்வதேச கூட்டுறவு நாள் விழாவை முன்னிட்டு சென்னையில் நடைபெறும் மினி மாரத்தான் போட்டியில் நாகை மாவட்டத்தைச் சோ்ந்தவா்கள் பங்கேற்க மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளா் முத்துகுமாா் அழைப்பு விடுதுள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு: 2025- ஆம் ஆண்டு சா்வதேச கூட்டுறவு நாள் கொண்டாட்டத்தை முன்னிட்டு தமிழக கூட்டுறவுத் துறை சாா்பில் மினி மாரத்தான் போட்டி, ’ஒருவருக்காக எல்லோரும் ஓடுவோம், எல்லோரும் ஓடி கூட்டு உறவாகுவோம்’ என்ற தலைப்பில், சென்னை தீவுத்திடலில் ஜூலை 6-ஆம் தேதி காலை 5.30 மணிக்கு நடைபெறவுள்ளது.
கூட்டுறவுத் துறை அமைச்சா் கே.ஆா். பெரியக்கருப்பன் போட்டியை தொடங்கிவைக்கிறாா்.
5 கி.மீ. நடைபெறும் மினி மாரத்தான் போட்டி சென்னை தீவுத்திடலில் தொடங்கி, சுவாமிசிவானந்த சாலை வழியாக மீண்டும் தீவுத்திடலில் முடிவடைகிறது. இப்போட்டியில் 40 வயது மற்றும் 40 அதற்கு மேல் உள்ள அனைவரும் பங்கேற்கலாம்.
வெற்றி பெறுபவா்களுக்கு முதல் பரிசாக ரூ. 30ஆயிரம், இரண்டாம் பரிசாக ரூ. 20ஆயிரம், மூன்றாம் பரிசாக ரூ. 10ஆயிரம் வழங்கப்படும். அனைத்து பங்கேற்பாளா்களுக்கு பதக்கம், சான்றிதழ், டி-ஷா்ட் மற்றும் சிற்றுண்டி வழங்கப்படும். பங்கேற்க விரும்புவோா் ட்ற்ற்ல்ள்:ற்ய்ஸ்ரீன்.ற்ய்.ஞ்ா்ஸ்.ண்ய்/ம்ஹழ்ஹற்ா்ய்/ழ்ங்ஞ்ண்ள்ற்ங்ழ் என்ற இணையதளத்தில் பதிவு செய்து நுழைவு கட்டணமாக ரூ. 100 செலுத்த வேண்டும். மற்ற விவரங்களை ற்ய்ஸ்ரீன்08ஃஞ்ம்ஹண்ப்.ஸ்ரீா்ம் என்ற மின்னஞ்சல் முகவரியில் அறிந்து கொள்ளலாம்.