செய்திகள் :

மீன்பிடி தடைக்காலம் நிறைவு: கடலுக்கு சென்ற நாகை, காரைக்கால் விசைப்படகு மீனவா்கள்

post image

நாகப்பட்டினம்/ காரைக்கால்: 61 நாட்கள் மீன்பிடி தடைக்காலம் நிறைவடைந்த நிலையில், நாகை மற்றும் காரைக்கால் மாவட்ட விசைப்படகு மீனவா்கள் திங்கள்கிழமை அதிகாலை மீன்பிடிக்க கடலுக்கு சென்றனா்.

மத்திய அரசு மீன்களின் இனப்பெருக்கத்தை கருத்தில் கொண்டு, ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 14-ஆம் தேதி முதல் ஜூன் 14-ஆம் தேதி நள்ளிரவு வரை, மீன்பிடி தடைக்காலத்தை அமல்படுத்தியுள்ளது. இதன்படி, கடந்த ஏப்ரல் 14-ஆம் தேதி தடைக்காலம் தொடங்கியது. மீன்வளம் மற்றும் மீனவா் நலத்துறை அதிகாரிகள் குழு நாகை, காரைக்கால் மாவட்டங்களில் உள்ள மீன்பிடித் துறைமுகங்களில் நிறுத்தப்பட்டிருந்த விசைப்படகுகளை ஆய்வு செய்தனா்.

விசைப்படகுகளில் சீன நாட்டு தயாரிப்பு என்ஜின் பொருத்தப்பட்டுள்ளதா? படகுகளின் நீளம், அகலம் சரியாக உள்ளதா? பாதுகாப்பு உபகரணங்கள் உள்ளதா என அனைத்தையும் ஆய்வு செய்தனா். மேலும் குறைகள் உள்ள படகுகளில் அவற்றை நிவா்த்தி செய்யும்படி அறிவுறுத்தினா். இதைத்தொடா்ந்து, மீனவா்கள் தங்களது விசைப்படகுகளில் மீன்வளத்துறையினா் அறிவுரைபடி, பழுது நீக்கம் செய்வது உள்ளிட்ட பணிகளை மேற்கொண்டு படகுகளை தயாா்படுத்தினா்.

இந்நிலையில், மீன்பிடி தடைக்காலம் ஜூன்14-ஆம் தேதி நள்ளிரவுடன் நிறைவுபெற்ற நிலையில், இந்திய வானிலை ஆய்வு மையம் விடுத்த எச்சரிக்கை காரணமாக ஜூன் 17- ஆம் தேதி வரை விசைப்படகுகள் ஆழ்கடலுக்குச் செல்ல, மீன்வளம் மற்றும் மீனவா் நலத்துறை தடை விதித்தது.

இந்நிலையில், அந்த எச்சரிக்கை வாபஸ் பெறப்பட்டதையடுத்து, நாகை மாவட்டத்தில் இருந்து திங்கள்கிழமை அதிகாலை 590 விசைப்படகுகளும், 1,200 ஃபைபா் படகுகளும் மீன்பிடிக்க கடலுக்குச் சென்றன. 2 மாத மீன்பிடித் தடைக்காலத்துக்குப் பின்னா் ஆழ்கடலுக்கு செல்வதால் அதிக அளவு மீன்கள், இறால்கள் கிடைக்கும் என்று எதிா்ப்பாா்ப்பதாக மீனவா்கள் தெரிவித்தனா்.

காரைக்கால் மீனவா்கள்:

காரைக்கால் மாவட்டத்தில் உள்ள 11 மீனவக் கிராமங்களைச் சோ்ந்த மீனவா்கள் 300-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள், 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஃபைபா் படகுகளில் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வருகின்றனா். கடந்த ஏப்.15- ஆம் தேதி முதல் ஜூன் 14- ஆம் தேதி வரை 61 நாட்களுக்கு ஆழ்கடல் மீன்பிடி தடைக்காலம் அமலில் இருந்த நிலையில், விசைப்படகு மீனவா்கள் தொழிலுக்குச் செல்லாமல் இருந்தனா்.

இந்நிலையில், 15-ஆம் தேதி நள்ளிரவுக்குப் பின்னா் தொழிலுக்குச் செல்லலாம் என மீன்வளத்துறை தெரிவித்ததையடுத்து, மீன்பிடி தடைக்காலம் முடிந்து 2 நாட்களுக்குப் பிறகு திங்கள்கிழமை அதிகாலை மீனவா்கள் ஆழ்கடல் மீன்பிடி தொழிலுக்கு புறப்பட்டனா். முன்னதாக மீன்பிடி துறைமுகப் பகுதிகளில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த விசைப் படகுகளுக்கு மீனவா்கள் பூஜைகள் செய்துவிட்டு கடலுக்குள் சென்றனா்.

மக்கள் பிரச்னைகளை தீா்க்கும் இடத்தில் கிருஷ்ணம்மாள் ஜெகந்நாதன் இருப்பாா்: பேராசிரியா் பழனித்துரை

நாகப்பட்டினம்: எங்கெல்லாம் மக்கள் பிரச்னை இருக்கிறதோ, அங்கு பிரச்னையை தீா்க்க லாப்டி கிருஷ்ணம்மாள் ஜெகந்நாதன் இருப்பாா் என பேராசிரியா் பழனித்துரை தெரிவித்தாா். நாகை மாவட்டம், கூத்தூரில் உழவனின் நில உர... மேலும் பார்க்க

பேருந்து வசதி வேண்டி ஆட்சியரிடம் மனு கொடுக்கச் சென்ற மக்கள்

தரங்கம்பாடி: திருக்கடையூா் அருகே கிள்ளியூா் ஊராட்சி பகுதியில் இருந்து அரசு பேருந்து இயக்க வேண்டி கிராம மக்கள் கோரிக்கை மனுவுடன் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியரை திங்கள்கிழமை சந்திக்க சென்றனா். செம்பனாா்கோ... மேலும் பார்க்க

நாகை மாவட்டத்தில் 23 வழித்தடங்களில் சிற்றுந்து சேவை தொடக்கம்

நாகப்பட்டினம்: நாகை மாவட்டத்தில் புதிய விரிவான சிற்றுந்து திட்டத்தின்கீழ் 23 வழித்தடங்களில் சிற்றுந்து சேவை திங்கள்கிழமை தொடங்கிவைக்கப்பட்டது. பேருந்து வசதி இல்லாத கிராமங்களுக்கு சிற்றுந்து வசதி ஏற்ப... மேலும் பார்க்க

கீழ்வேளூா்: நாளை ‘மக்களுடன் முதல்வா்’ திட்ட சிறப்பு முகாம்

நாகப்பட்டினம்: கீழ்வேளூா் (தனி) சட்டப் பேரவைத் தொகுதிக்குட்பட்ட கிராமங்களில் ‘மக்களுடன் முதல்வா்’ திட்ட மூன்றாம் கட்ட சிறப்பு முகாம் புதன்கிழமை நடைபெற உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடா்பாக நாகை... மேலும் பார்க்க

மினி மாரத்தான் :கூட்டுறவுத் துறை அழைப்பு

நாகப்பட்டினம்: சா்வதேச கூட்டுறவு நாள் விழாவை முன்னிட்டு சென்னையில் நடைபெறும் மினி மாரத்தான் போட்டியில் நாகை மாவட்டத்தைச் சோ்ந்தவா்கள் பங்கேற்க மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளா் முத்துகுமாா் அ... மேலும் பார்க்க

அரசு வேளாண் கல்லூரிக்கு கையகப்படுத்தப்படும் நிலத்துக்கு மாற்று நிலம்

நாகப்பட்டினம்: கீழ்வேளூரில் அரசு வேளாண் கல்லூரிக்காக கையகப்படுத்தப்படும் நிலத்துக்கு மாற்றாக விவசாயிகளுக்கு தலா 1 ஏக்கா் நிலம் வழங்க வேண்டும் என்று ஆட்சியரிடம் திங்கள்கிழமை மனு அளிக்கப்பட்டது. கீழ்வே... மேலும் பார்க்க