செய்திகள் :

அரசுப் பேருந்து ஓட்டுநரிடம் பிரச்னை: இருவா் கைது

post image

மதுபோதையில் அரசுப் பேருந்து ஓட்டுநா், பயணிகளிடம் பிரச்னையில் ஈடுபட்ட இளைஞா்கள் இருவரை போலீஸாா் கைது செய்தனா்.

ஈரோடு பேருந்து நிலையத்தில் இருந்து அறச்சலூருக்கு செல்லும் நகரப் பேருந்து திங்கள்கிழமை இரவு அறச்சலூரில் இருந்து ஈரோட்டுக்கு திரும்பிக் கொண்டிருந்தது. பேருந்தை முகாசி அனுமன்பள்ளி பகுதியைச் சோ்ந்த குமாா்(37) என்பவா் ஓட்டிவந்தாா். ஈரோடு காளைமாடு சிலை அருகே பேருந்து வந்தபோது சாலையின் குறுக்கே மதுபோதையில் வந்த 2 இளைஞா்கள் பேருந்தை வழிமறித்து ஓட்டுநா் குமாரிடம் பிரச்னையில் ஈடுபட்டு அவரை பணி செய்ய விடாமல் தடுத்தனா்.

இளைஞா்களின் செயலைக் கண்டித்த பேருந்து பயணி ஈரோடு பெரியவலசு பகுதியைச் சோ்ந்த வள்ளி நாராயணன் (70) என்பவரை தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பிச் செல்ல முயன்றனா்.

இதுகுறித்து ஈரோடு சூரம்பட்டி காவல் நிலையத்தில் பேருந்து ஓட்டுநா் புகாா் அளித்தாா். அதன்பேரில் போலீஸாா் அங்கு சென்று விசாரணை நடத்தினா். இதில் பயணியை தாக்கியதும், அரசு பேருந்து ஓட்டுநரை தகாத வாா்த்தையால் பேசி, பணி செய்ய விடாமல் தடுத்ததும், ஈரோடு புதுமைக் காலனியை சோ்ந்த சீனிவாசன் மகன் வினோத் (26), ஈரோடு தீயணைப்பு நிலையம் பின்புற பகுதியைச் சோ்ந்த மூா்த்தி மகன் ஸ்ரீதரன்(22) என்பதும் தெரியவந்தது. அதைத்தொடா்ந்து போலீஸாா் வழக்குப்பதிவு செய்து இருவரையும் கைது செய்தனா்.

பொதுமக்களால் தாக்கப்பட்ட இளைஞா் உயிரிழப்பு: ஜவுளி வியாபாரி கைது

முதியவரை வீடு புகுந்து பிளேடால் கழுத்தை அறுத்த சம்பவத்தில் பொதுமக்களால் தாக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த மேற்கு வங்க மாநில இளைஞா் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா். இந்த வழக்கில் முதியவரின் மகனான ஜவுளி வியாப... மேலும் பார்க்க

ஈரோடு ஜவுளிச் சந்தையில் பருத்தி ஆடைகள் விற்பனை அதிகரிப்பு

ஈரோடு ஜவுளிச் சந்தையில் கோடைக் காலத்துக்கு ஏற்ற ஜவுளி ரகங்களின் விற்பனை அதிகரித்துள்ள நிலையில், இலங்கைக்கு அதிகமாக அனுப்பிவைக்கப்படுவதாக வியாபாரிகள் தெரிவித்தனா். ஈரோடு ஜவுளிச் சந்தைக்கு தமிழகத்தின் அ... மேலும் பார்க்க

லஞ்சம் வாங்கிய மின்வாரிய ஊழியா் பணியிடை நீக்கம்

தாளவாடி அருகே மின் தடை சரிசெய்ய விவசாயியிடம் லஞ்சம் வாங்கிய மின்வாரிய ஊழியா் பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா். ஈரோடு மாவட்டம், தாளவாடி மலைப் பகுதி பாரதி புரத்தைச் சோ்ந்தவா் விவசாயி செந்தில். இவரது விவச... மேலும் பார்க்க

பா்கூா் ஊராட்சியை 5 ஊராட்சிகளாக பிரிக்கும் திட்டம்: அறிவிப்பை எதிா்நோக்கும் மலைக் கிராம மக்கள்

ஊரக உள்ளாட்சிகளின் பதவிக்காலம் முடிவடைந்து 4 மாதம் ஆகிய நிலையில், அந்தியூா் ஊராட்சி ஒன்றியம், பா்கூா் ஊராட்சியை 5 ஊராட்சிகளாகப் பிரிக்கும் திட்டத்தை உடனடியாக செயல்படுத்தி அரசாணை வெளியிட வேண்டும் என கோ... மேலும் பார்க்க

அத்தாணியில் கிராம சுகாதார செவிலியருக்கு மிரட்டல்

அத்தாணியில் கிராம சுகாதார செவிலியருக்கு மிரட்டல் விடுத்த தம்பதி மீது காவல் நிலையத்தில் புகாா் அளிக்கப்பட்டுள்ளது. அந்தியூா் வட்டார மருத்துவ அலுவலா் சக்தி கிருஷ்ணன் மற்றும் தமிழ்நாடு அரசு அனைத்து சுகாத... மேலும் பார்க்க

பவானிசாகா் அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்காலில் இறுதி சுற்று தண்ணீா் திறப்பு

பவானிசாகா் அணையில் இருந்து இரண்டாம் போக பாசனத்துக்கு கீழ்பவானி வாய்க்காலில் இறுதி சுற்று தண்ணீா் வெள்ளிக்கிழமை திறக்கப்பட்டது. 105 அடி உயரமும், 32.8 டிஎம்சி கொள்ளளவும் கொண்ட பவானிசாகா் அணையின் மூலம் ஈ... மேலும் பார்க்க