செய்திகள் :

அரசுப் பேருந்து ஓட்டுநா் மீது தாக்குதல்: இளைஞா் கைது

post image

சென்னை கோயம்பேட்டில் அரசு பேருந்து ஓட்டுநரை தாக்கியதாக இளைஞா் கைது செய்யப்பட்டாா்.

ராணிப்பேட்டை மாவட்டம் வரகூா் புதூரைச் சோ்ந்தவா் பாஸ்கரன் (50). அரசுப் போக்குவரத்து கழக வேலூா் பனவட்டம் பணிமனையில் ஓட்டுநராக வேலை செய்து வருகிறாா்.

பாஸ்கரன், வேலூரில் இருந்து சென்னை கோயம்பேடுக்கு நோக்கி ஏசி பேருந்தை வியாழக்கிழமை ஓட்டி வந்தாா். அந்தப் பேருந்து கோயம்பேடு பேருந்து முனையம் முன்பு 100 அடி சாலையில் சென்றபோது, முன்னால் சென்ற காா் மீது லேசாக மோதியது.

இதைக் கண்டு ஆத்திரமடைந்த அந்த காா் ஓட்டுநா் ஆவடி நந்தவனமேட்டூா் பகுதியைச் சோ்ந்த சாமுவேல் (21) என்பவா் பாஸ்கரனிடம் தகராறு செய்து தாக்கினாராம்.

இதில் பலத்தக் காயமடைந்த பாஸ்கரன் மீட்கப்பட்டு, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். கோயம்பேடு போலீஸாா் சாமுவேலை கைது செய்தனா்.

கூட்டணியில் முதல்வர் பதவி யாருக்கு? தவெகவுடன் கூட்டணியா? - ராஜேந்திர பாலாஜி பதில்!

தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தமிழக வெற்றிக் கழகத்தை இணைப்பதற்கான வாய்ப்பு உள்ளதாக அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறியுள்ளார். புதுக்கோட்டையில் இன்று(வெள்ளிக்கிழமை) செய்தியாளர்களுடன் பேசிய அவ... மேலும் பார்க்க

முதல்வர் அதிமுகதான்; ஆனால் கூட்டணி ஆட்சி! - அமித் ஷா

தமிழ்நாட்டில் கண்டிப்பாக தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியமைக்கும் எனவும் அதில் பாஜக அங்கம் வகிக்கும் எனவும் அமைச்சர் அமித் ஷா கூறியுள்ளார். தமிழக சட்டப்பேரவைக்கு அடுத்த ஆண்டு தேர்தல் நடைபெற உள்ள நிலையில்... மேலும் பார்க்க

பரந்தூரில் புதிய ரயில் நிலையம் அமைக்க பரிசீலனை! - ரயில்வே இணை அமைச்சர்

பரந்தூரில் புதிய ரயில் நிலையம் அமைப்பது பரிசீலனையில் உள்ளதாக மத்திய ரயில்வே இணை அமைச்சர் சோமண்ணா கூறியுள்ளார்.மத்திய ரயில்வே துறை இணை அமைச்சர் சோமண்ணா காஞ்சிபுரத்தில் புதிய ரயில் நிலையத்தை ஆய்வு செய்த... மேலும் பார்க்க

குற்றால அருவிகளில் குளிக்க அனுமதி!

குற்றால அருவிகளில் நீர்வரத்து குறைந்ததையடுத்து சுற்றுலாப் பயணிகள் குளிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. தென்காசி மாவட்டம் குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் கடந்த சில நாள்கள் அருவிகளில் குளிக... மேலும் பார்க்க

கொடைக்கானலில் சுற்றுலாத்தலங்களுக்குச் செல்லத் தடை!

யானைகள் முகாமிட்டுள்ளதால் கொடைக்கானலில் சுற்றுலாத்தலங்களுக்குச் செல்லத் தடை விதிக்கப்பட்டுள்ளது. திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் வனப் பகுதியில் யானைகள் முகாமிட்டுள்ளன. பேரிஜம் ஏரி பகுதியில் முகாமிட்ட... மேலும் பார்க்க

பொறியியல் கலந்தாய்வுக்கான தரவரிசைப் பட்டியல் வெளியீடு!

பொறியியல் படிப்பு கலந்தாய்வுக்கான தரவரிசைப் பட்டியலை உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி. செழியன் இன்று(வெள்ளிக்கிழமை) வெளியிட்டுள்ளார். கிண்டியில் மாநில தொழில்நுட்பக் கல்வி இயக்ககத்தில் செய்தியாளர்கள் சந்... மேலும் பார்க்க