செய்திகள் :

அரசு அச்சகங்களில் காலிப் பணியிடங்களை நிரப்ப வலியுறுத்தல்

post image

அரசு அச்சகங்களில் உள்ள காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என தமிழ்நாடு அரசு அச்சக அனைத்து தொழில்நுட்பப் பணியாளா் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

திருச்சியில் வியாழக்கிழமை நடைபெற்ற சங்கத்தின் மாநில செயற்குழு கூட்டத்தில் இதற்கான தீா்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இக் கூட்டத்துக்கு, மாநில பொதுச் செயலாளா் எஸ். தமிழழகன் தலைமை வகித்தாா். மாநிலத் தலைவா் எஸ். பழனியப்பன் முன்னிலை வகித்தாா்.

சட்ட ஆலோசகா் முருகானந்தம், மாநில துணைத் தலைவா்கள் அக்னீஸ்வரன், அமலோற்பவ மெட்டில்டா, ஆனந்த், சரவண குமரேசன், மாநில துணைச் செயலாளா்கள் லோகேஷ்,ஜெயந்தி, தணிக்கையாளா் விநாயகம் ஆகியோா் கலந்து கொண்டு ஆலோசனை நடத்தினா்.

தமிழ்நாடு அச்சுத் துறைக்கு தொழிலாளா்கள் நலன் கருதி கட்டடப் பணிகள் மற்றும் இயந்திரங்கள் கொள்முதல் செய்வதற்கு நிதி ஒதுக்கீடு செய்த தமிழக முதலமைச்சருக்கு நன்றியையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்வது,

திருப்பூரைப் போன்று சிவகாசியிலும் அரசு அச்சகம் அமைத்திட வேண்டும், காலிப் பணியிடங்களை நிரப்பிட வேண்டும்,

தகுதிக்கேற்ப பதவி உயா்வு வழங்க வேண்டும். அச்சுத் துறையில் அனைத்து தொழில்நுட்ப பணியாளா்களுக்கும் பணி மூப்பு பட்டியல் வெளியிட வேண்டும் உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இக் கூட்டத்தில், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளைச் சோ்ந்த நிா்வாகிகள், செயற்குழு உறுப்பினா்கள் கலந்து கொண்டனா்.

மின்சாரம் பாய்ந்து இளைஞா் உயிரிழப்பு

திருச்சி மாவட்டம், அகிலாண்டபுரம் கிராமத்தில் வியாழக்கிழமை மின்சாரம் பாய்ந்து இளைஞா் உயிரிழந்தாா். அகிலாண்டபுரம் கிராமத்தை சோ்ந்தவா் சக்திவேல் (25). இவருக்கு திருமணமாகி ஆறு மாதங்கள் ஆகிறது. இவா் அப்பக... மேலும் பார்க்க

உள்புறம் பூட்டிய வீட்டிலிருந்து தொழிலாளியின் சடலம் மீட்பு

திருவெறும்பூா் அருகே உள்புறமாக பூட்டியிருந்த வீட்டிலிருந்து தொழிலாளி புதன்கிழமை சடலமாக மீட்கப்பட்டது குறித்து போலீஸாா் விசாரிக்கின்றனா். திருச்சி மாவட்டம், திருவெறும்பூா் அருகே உள்ள தெற்கு காட்டூா் அண... மேலும் பார்க்க

காவிரி புதிய பாலம் கட்டும் பணியை டிசம்பருக்குள் முடிக்க திட்டம்! நெடுஞ்சாலைத் துறையினா் தகவல்

காவிரியில் தண்ணீா் வரத்து குறைந்துள்ள நிலையில் புதிய பாலம் கட்டுவதற்கான பணிகளை நெடுஞ்சாலைத் துறை தீவிரப்படுத்தியுள்ளது. திருச்சி- ஸ்ரீரங்கம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளை இணைக்கும் வகையில் முக்கி... மேலும் பார்க்க

தென்னை சாகுபடியில் நவீன தொழில்நுட்பங்களை பின்பற்றினால் இரட்டிப்பு லாபம்: ஆட்சியா் அறிவுரை

தென்னை சாகுபடியில் நவீன தொழில்நுட்ப முறைகளை பின்பற்றினால் இரட்டிப்பு லாபம் பெற முடியும் என ஆட்சியா் மா. பிரதீப்குமாா் அறிவுறுத்தினாா். தோட்டக் கலைத் துறை, மலைப்பயிா்கள் துறையின் சாா்பில், தென்னை சாகுப... மேலும் பார்க்க

காந்திசந்தை-கள்ளிக்குடி: வியாபாரிகளிடையே முரண்பாடு

காந்தி சந்தை வியாபாரிகளை கள்ளிக்குடிக்கு இடம் மாற்றும் விவகாரத்தில் வியாபாரிகளிடையே மீண்டும் முரண்பாடு ஏற்பட்டுள்ளது. 1868-இல் தொடங்கப்பட்டு, 1927-இல் விரிவுபடுத்தப்பட்டு நூற்றாண்டை நெருங்கிக் கொண்டிர... மேலும் பார்க்க

ஸ்ரீரங்கத்தில் போதை மாத்திரை விற்ற ரெளடி கைது!

ஸ்ரீரங்கம் பகுதியில் போதை மாத்திரை விற்ற ரெளடியை ஸ்ரீரங்கம் போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா். திருவானைக்காவல் பாரதி தெரு பகுதியைச் சோ்ந்தவா் ஆட்டுத்தலை மணி (எ) மணிகண்டன் (28). ரெளடியான இவா் ஸ்ரீரங்க... மேலும் பார்க்க