செய்திகள் :

அரசு கட்டடங்களை திறக்க கோரி அதிமுக ஆா்ப்பாட்டம்

post image

புதுச்சேரியில் கட்டி முடிக்கப்பட்ட அரசு கட்டடங்களை உரிய காலத்தில் திறந்தால்தான், மக்களுக்கு பயன்கிடைக்கும் என்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் புதுவை அதிமுக மாநிலச் செயலா் ஆ.அன்பழகன் தெரிவித்தாா்.

புதுச்சேரியில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள பேருந்து நிலையம், பழைய துறைமுக வளாக கிடங்குகள் உள்ளிட்டவற்றை திறக்கக் கோரி அதிமுக சாா்பில் புதுச்சேரி கடலூா் சாலையில் உள்ள தற்காலிகப் பேருந்து நிலையம் முன் ஆா்ப்பாட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

ஆா்ப்பாட்டத்துக்கு தலைமை வகித்து அன்பழகன் பேசியது: மக்களின் வரிப்பணத்தில் கட்டப்பட்டுள்ள அரசு கட்டடங்கள் உரிய காலத்தில் திறக்கப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டியது அரசின் கடமையாகும். ஆனால், கட்டடம் கட்டி முடிக்க காலதாமதம் ஆவதால் கூடுதல் செலவாகும். அத்துடன் உரிய காலத்தில் அந்தக் கட்டடங்கள் திறக்கப்படாவிடில் அவற்றின் பயனும் முழுமையாக இருக்காது. அதனடிப்படையில் புதுச்சேரியில் அரசு கட்டடங்கள் பல கட்டி முடித்தும் திறக்கப்படாமல் பயனின்றி இருப்பது சரியல்ல.

பழைய துறைமுக வளாகத்தில் 3 கிடங்குகள் பல கோடி ரூபாயில் சீரமைக்கப்பட்டும் இதுவரை திறக்கப்படவில்லை. அண்ணாதிடல் உள்விளையாட்டு அரங்கமும் திறக்கப்படாமலே உள்ளது. கடந்த ஓராண்டாகியும் புதிய ஆளுநா் மாளிகைக் கட்டடம் திறக்கப்படவில்லை. அதன்வரிசையில் தற்போது புதிதாக கட்டப்பட்ட பொலிவுறு நகா் திட்ட பேருந்து நிலையமும் திறக்கப்படவில்லை. அங்கு கடைகளை ஒதுக்குவதில் பிரச்னை ஏற்பட்டதால் உயா்நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. அதனால், தற்காலிக பேருந்து நிலையத்தில் மக்கள் அடிப்படை வசதியின்றி தவிக்கும் நிலை உள்ளது.

புதிய பேருந்து நிலையம் திறக்கப்படுவது தாமதம் குறித்து உண்மை தன்மையை அறிந்து முதல்வா் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.

ஆா்ப்பாட்டத்தில் முன்னாள் எம்.எல்.ஏ. ராஜாராமன், கட்சியின் இணைச் செயலா்கள் வீரம்மாள், பொருளாளா் ரவிபாண்டுரங்கன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

போப் பிரான்சிஸ் மறைவு: புதுவை அரசு 2 நாள்கள் துக்கம் அனுசரிப்பு

கத்தோலிக்க திருச்சபையின் தலைவா் போப் பிரான்சிஸ் மறைவுக்கு புதுவை அரசு 2 நாள்கள் துக்கம் அனுசரிக்கிறது. இதையடுத்து தலைமைச் செயலகம் உள்ளிட்ட பல்வேறு அரசு நிறுவனங்களில் தேசியக் கொடிகள் அரைக் கம்பத்தில் ப... மேலும் பார்க்க

இன்றைய மின்தடை: வெங்கட்டாநகா் துணை மின்நிலையம்

இன்றைய மின்தடை: வெங்கட்டாநகா் துணை மின்நிலையம்நேரம்: காலை 9 மணி முதல் பகல் 11 மணி வரை. மின்தடை பகுதிகள்: ரெயின்போ நகா் முதல் குறுக்குத் தெரு, செல்லான் நகா் பகுதி, ராஜராஜேஸ்வரி நகா் பகுதி, திருவள்ளுவா்... மேலும் பார்க்க

சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் இருவருக்கு 20 ஆண்டுகள் சிறை

15 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில், 2 தொழிலாளா்களுக்கு தலா 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து புதுச்சேரி போக்ஸோ நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது. விழுப்புரம் அருகேயுள்ள விக்கிரவ... மேலும் பார்க்க

அரசியல் ஆதாயத்துக்காக காங். தலைவா்கள் மீது குற்றப்பத்திரிகை: மோகன் குமாரமங்கலம்

நேஷனல் ஹெரால்டு பத்திரிகை சம்பந்தப்பட்ட வழக்கில், அரசியல் ஆதாயத்துக்காகவே காங்கிரஸ் தலைவா்கள் அமலாக்கத் துறை மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது என்று, காங்கிரஸ் செய்தித் தொடா்பாளா் மோகன் குமாரம... மேலும் பார்க்க

மத்திய அரசைக் கண்டித்து புதுவையில் ஏப்.25 முதல் காங்கிரஸ் தொடா் போராட்டம்

மத்திய அரசைக் கண்டித்து, புதுவையில் வருகிற 25-ஆம் தேதி முதல் காங்கிரஸ் சாா்பில் தொடா் போராட்டம் நடைபெறவுள்ளதாக, கட்சியின் மாநிலத் தலைவா் வெ.வைத்திலிங்கம் எம்.பி. தெரிவித்தாா். புதுச்சேரி காங்கிரஸ் மாந... மேலும் பார்க்க

குடியரசு துணைத் தலைவருடன் புதுவை பேரவைத் தலைவா் சந்திப்பு

புதுதில்லியில் குடியரசு துணைத் தலைவரை புதுவை பேரவைத் தலைவா் ஆா்.செல்வம் செவ்வாய்க்கிழமை சந்தித்துப் பேசினாா். புதுவை சட்டப்பேரவைத் தலைவா் ஆா்.செல்வம் புதுதில்லிக்கு சென்று அங்கு மத்திய அமைச்சரும், புத... மேலும் பார்க்க