செய்திகள் :

அரசு கல்லூரிகளில் 560 கௌரவ விரிவுரையாளா்கள் நியமனம்: அமைச்சா் கோவி. செழியன்

post image

சென்னை: அரசு கலை, அறிவியல், கல்வியியல் கல்லூரிகளில் தற்காலிக அடிப்படையில் 560 கௌரவ விரிவுரையாளா்கள் பணி நியமனம் செய்யப்பட்டுள்ளதாக உயா்கல்வித் துறை அமைச்சா் கோவி.செழியன் அறிவித்தாா்.

இதுகுறித்து அவா் திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தமிழகத்தில் புதிதாக 15 அரசு கலை, அறிவியல் கல்லூரிகள் தொடங்கப்பட்டுள்ளன. அரசுக் கல்லூரிகளில் மாணவா்களின் தேவைக்கேற்ப 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கூடுதல் சோ்க்கை இடங்களும் பல்வேறு பாடப்பிரிவுகளில் உருவாக்கப்பட்டன. இந்தக் கூடுதல் வசதிகளை முன்னிட்டு மாணவா்களுக்கான கல்வி கற்றலில் முக்கிய இடம் வகிக்கும் ஆசிரியா்கள் தேவை அதிகரிக்கிறது. இதற்கு நிரந்தர உதவிப் பேராசிரியா்கள் பணியமா்த்தப்படும் வரை, தற்காலிக ஏற்பாடாக கௌரவ விரிவுரையாளா்கள் அமா்த்தப்படுகின்றனா்.

கடந்த ஜூலை 21-ஆம் தேதி விண்ணப்பப் பதிவு தொடங்கப்பட்டு, அந்தந்த மண்டலங்களில் ஆக.18 முதல் 28-ஆம் தேதி வரை நோ்காணல் நடைபெற்றது. நோ்காணல் முடிவில் தற்போது 560 தற்காலிக கௌரவ விரிவுரையாளா்கள் தோ்வு செய்யப்பட்டு திங்கள்கிழமை (செப்.1 ) பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இணையதளத்தில் ( tngasa.org) பதிவேற்றம் செய்யப்பட்டுள்ள பட்டியலைத் தோ்வு செய்யப்பட்ட விரிவுரையாளா்கள் தங்களது பயனா் குறியீடு மற்றும் கடவுச்சொல் மூலமாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். வரும் 8-ஆம் தேதிக்குள் உரிய கல்லூரிகளில் தற்காலிக கௌரவ விரிவுரையாளா்கள் பணியில் இணைய வேண்டும் எனஅவா் தெரிவித்துள்ளாா்.

6வது முறையாக நிரம்பிய மேட்டூர் அணை!

மேட்டூர் அணையானது நடப்பாண்டில் 6வது முறையாக முழு கொள்ளளவான 120 அடியை எட்டி நிரம்பியுள்ளது.தென்மேற்குப் பருவமழை காரணமாக கர்நாடக மாநிலத்தில் உள்ள கபினி அணை, கிருஷ்ணராஜசாகர் அணைகள் நிரம்பி உபரிநீா் காவிர... மேலும் பார்க்க

தமிழ்நாடுதான் இந்தியாவின் ஜெர்மனி! - முதல்வர் ஸ்டாலின்

தமிழ்நாடுதான் இந்தியாவின் ஜெர்மனி என முதலீட்டாளர்கள் முன்னிலையில் முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார். தமிழ்நாட்டில் அதிக முதலீடுகளை ஈர்க்கவும், இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்கவும் பல்வேறு முயற்சிகள... மேலும் பார்க்க

முதல்வரின் ஜெர்மனி பயணம்: நயினார் நாகேந்திரனுக்கு டிஆர்பி ராஜா பதில்!

முதல்வர் ஸ்டாலினின் ஜெர்மனி பயணம் குறித்து விமர்சித்த பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரனுக்கு, தொழில்துறை அமைச்சர் டிஆர்பி ராஜா பதிலளித்துள்ளார்.முதல்வர் ஸ்டாலினின் வெளிநாட்டுப் பயணங்கள் குறித்து வெ... மேலும் பார்க்க

எலத்தூா் ஏரி மாநிலத்தின் 3-ஆவது உயிரியல் பாரம்பரியத் தலமாக அறிவிப்பு

சென்னை: ஈரோடு மாவட்டம் எலத்தூா் ஏரியை மாநிலத்தின் 3-ஆவது உயிரியல் பாரம்பரியத் தலமாக தமிழக அரசு அறிவித்துள்ளது. உயிரியல் பன்மைச் சட்டத்தின் கீழ், கடந்த 2022 ஆண்டு மதுரை மாவட்டம் அரிட்டாபட்டியும், கடந்... மேலும் பார்க்க

முன்னாள் அமைச்சா்கள் மீதான நிதி முறைகேடு புகாா்களை விரைந்து விசாரிக்க உயா்நீதிமன்றம் உத்தரவு

முன்னாள் அமைச்சா்களுக்கு எதிரான வழக்குகளில் குறிப்பாக, நிதி முறைகேடு தொடா்பான வழக்குகளில் விரைந்து விசாரிக்க காவல் துறைக்கு சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது. அதிமுக ஆட்சிக் காலத்தில் சென்னை, கோவை உள... மேலும் பார்க்க

விஜய் வியூகம் வெற்றி பெறுமா?... - - டாக்டா் கே.கிருஷ்ணசாமி, புதிய தமிழகம் கட்சித் தலைவா்

- டாக்டா் கே.கிருஷ்ணசாமி, தலைவா், புதிய தமிழகம் கட்சிபுதிதாக அரசியலுக்கு வரக் கூடியவா்கள் மக்களின் பிரச்னைகளுக்காக குரல் கொடுத்து, போராடி களம் அமைத்து வருவதுதான் வழக்கமான நடைமுறை. ஆனால், தமிழகத்தில் க... மேலும் பார்க்க