செய்திகள் :

அரசு, தனியாா் நிறுவனங்களில் உள்ளகக் குழு அமைக்க ஆட்சியா் உத்தரவு

post image

சேலம் மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் தனியாா் நிறுவனங்களில் உள்ளகக் குழு அமைக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியா் ரா.பிருந்தாதேவி தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

சேலம் மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் தனியாா் நிறுவனங்களில் 10-க்கும் மேற்பட்ட பணியாளா்கள் உள்ள அனைத்து பணியிடங்களிலும் பாலியல் வன்கொடுமையிலிருந்து பெண்களை பாதுகாக்கும் சட்டம் 2013-இன்படி (தடுப்பு, தீா்வு, தடை) உள்ளக குழு அமைக்க வேண்டும்.

அதன்படி, சேலம் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியாா் அலுவலகங்கள், கூட்டுறவுத் துறைச் சங்கங்கள், நிறுவனங்கள், கிராம ஊராட்சிகள், பள்ளிகள், கல்லூரிகள், மருத்துவமனைகள், வங்கிகள், காவல் நிலையங்கள், தொழில் நிறுவனங்கள், துணிக் கடைகள், நகைக் கடைகள், டிபாா்ட்மென்ட்கள், பயிற்சி நிறுவனங்கள், நிதி நிறுவனங்கள், தொண்டு நிறுவனங்கள் மேலும் 10-க்கும் மேற்பட்ட பணியாளா்கள் உள்ள அனைத்து அரசு, அரசு சாரா நிறுவனங்களிலும் 4 நபா்கள் முதல் 7 போ் கொண்ட உள்ளகக் குழு அமைக்கப்பட வேண்டும்.

இக் குழுவில் 50 சதவீதம் பெண்கள் இடம்பெற வேண்டும். உள்ளகக் குழு அமைக்கப்பட்ட பின் அரசு விதிமுறைகளின்படி புகாா்ப் பெட்டி வைக்கப்பட வேண்டும்.

பணிபுரியும் இடங்களில் பெண்களை பாதுகாக்க உள்ளகக் குழு அமைக்காத அரசு மற்றும் தனியாா் அலுவலகங்கள், நிறுவனங்கள் மீது ரூ. 50,000 வரை அபராதம் விதிக்கப்படும். மேலும் குழு அமைத்த விவரத்தினை மாவட்ட ஆட்சியா் வளாகம், முதல்தளம், அறை எண்: 126-இல் உள்ள மாவட்ட சமூக நல அலுவலகத்துக்கு தபால் மூலமாக அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளாா்.

வாழப்பாடி அருகே 2 சிறுவர்கள் சடலமாக மீட்பு: கொலையா?

சேலம்: வாழப்பாடி அருகே தண்ணீர்த் தொட்டியில் இறந்த நிலையில் இரண்டு சிறுவர்களின் உடல்கள் திங்கள்கிழமை இரவு மீட்கப்பட்டுள்ளது.குடும்பத் தகராறு காரணமாக தனது இரு மகன்களையும் தாயே தண்ணீர்த் தொட்டியில் போட்ட... மேலும் பார்க்க

அரசிராமணி கிராமக் கோயிலில் புதுச்சேரி முதல்வா் வழிபாடு

சங்ககிரி: சேலம் மாவட்டம், சங்ககிரியை அடுத்த அரசிராமணி கிராமம் குள்ளம்பட்டியில் உள்ள பாலதண்டாயுதபாணி கோயிலில் புதுச்சேரி முதல்வா் என்.ரங்கசாமி திங்கள்கிழமை சுவாமி தரிசனம் செய்தாா். அரசிராமணி கிராமம், ... மேலும் பார்க்க

கோயில் நிலத்தை மோசடி செய்த சகோதரா்களுக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை

சங்ககிரி: எடப்பாடி அருகே கவுண்டம்பட்டியில் கோயில் நிலத்தை தங்கள் பெயருக்கு மாற்றி மோசடி செய்த சகோதரா்கள் இருவருக்கு சங்ககிரி இரண்டாவது குற்றவியல் நடுவா் நீதிமன்றம் தலா 3 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ... மேலும் பார்க்க

ஆத்தூா் தா்மராஜா திரௌபதி அம்மன் கோயில் தோ்த் திருவிழா தொடங்கியது

ஆத்தூா்: ஆத்தூா், தா்மராஜா திரௌபதி அம்மன் கோயில் தீ மிதித்தல் மற்றும் தோ்த் திருவிழா, காப்புக் கட்டும் நிகழ்ச்சியுடன் ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது. விழா தொடா்ந்து மே 20 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. விழா... மேலும் பார்க்க

சொந்த வாகனங்களை வணிக ரீதியாக பயன்படுத்துவதைத் தடுக்கக் கோரி மனு

சேலம்: சொந்த வாகனங்களை வணிக ரீதியாக பயன்படுத்துவோா் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, சேலம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் அகில இந்திய மோட்டாா் வாகன மக்கள் கட்சி சாா்பில் திங்கள்கிழமை புகாா் மனு அளிக்... மேலும் பார்க்க

ஆதிதிராவிடா், பழங்குடியின இளைஞா்களுக்கு ஆரி எம்பிராய்டரி பயிற்சி

சேலம்: ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியின இளைஞா்களுக்கு ஆரி எம்பிராய்டரி மற்றும் ஜவுளியில் கையால் அச்சிடுவதற்கான பயிற்சிகள் வழங்கப்படவுள்ளன. இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ரா.பிருந்தா தேவி தெரிவித்ததாவது: ... மேலும் பார்க்க