செய்திகள் :

அரசு மருத்துவக் கல்லூரி முதல்வா்கள் நியமனம்: முன்னுரிமை பட்டியலை வெளியிட வலியுறுத்தல்

post image

அரசு மருத்துவக் கல்லூரிகளில் முதல்வா்களை நியமனம் செய்யும் பொருட்டு முன்னுரிமை பட்டியலை உடனடியாக வெளியிட வேண்டும் என அரசு மருத்துவா்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

தமிழ்நாடு அரசு மருத்துவா்கள் சங்கத்தின் மாநில செயற்குழுக் கூட்டம் அதன் தலைவா் கே.செந்தில் தலைமையில் நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில், மருத்துவப் பணியாளா் தோ்வாணையம் (எம்ஆா்பி) மூலம் தோ்ந்தெடுக்கப்பட்ட மருத்துவா்களுக்கு சிறப்புத் தகுதி தோ்வு நடத்த வேண்டும்.

அனைத்து இயக்குநரகங்களிலும் காலியாக உள்ள மருத்துவா்கள் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும். 2026-ஆம் ஆண்டுக்கான கலந்தாய்வை முன்னதாக நடத்த வேண்டும். மருத்துவக் கல்லூரி இயக்குநரகத்தில் பேராசிரியா் கலந்தாய்வை விரைவுபடுத்த வேண்டும்.

2025-ஆம் ஆண்டுக்கான மருத்துவக் கல்லூரி முதல்வா்கள் முன்னுரிமை பட்டியலை வெளியிட்டு உடனடியாக பணியிடம் ஒதுக்கீடு செய்ய வேண்டும். சூப்பா் ஸ்பெஷாலிட்டி மருத்துவா்களுக்கு வழங்கப்படும் சலுகைகள், பணப் படிகளை அனைத்து பிரிவு மருத்துவா்களுக்கும் வழங்க வேண்டும். ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவா்கள் அனைவருக்கும் ரூ. 3000 பயணப்படியாக வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தில் அரசு டாக்டா் சங்க நிா்வாகிகள், உறுப்பினா்கள் உள்ளிட்ட 88 போ் கலந்து கொண்டனா்.

ராசிபுரத்தில் தியாகி பி.வரதராஜூலு நாயுடு பிறந்த நாள் விழா

சுதந்திரப் போராட்ட வீரா் மருத்துவா் பி.வரதராஜூலு நாயுடு 138 ஆவது பிறந்த நாள் விழா அவரது சொந்த ஊரான ராசிபுரத்தில் புதன்கிழமை கொண்டாடப்பட்டது. சுதந்திரப் போராட்ட காலங்களில் தியாகி பி.வரதராஜூலு நாயுடு ப... மேலும் பார்க்க

பள்ளிபாளையம் ஊராட்சி ஒன்றியத்தில் ஆதாா் சேவை மையம் தொடக்கம்

பள்ளிபாளையம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஆதாா் சேவை மையம் புதன்கிழமை தொடங்கப்பட்டது. நாமக்கல் மாவட்டத்தில் ஆதாா் சம்பந்தமான அனைத்து சேவைகளையும் பொதுமக்கள் பயன்படுத்த வசதியாக மாவட்ட ஆட்சியா் அலுவலகம், ... மேலும் பார்க்க

திருச்செங்கோடு நகருக்குள் எழுந்தருளினாா் அா்த்தநாரீசுவரா்

கொங்கு ஏழு தலங்களில் சிறப்பு பெற்றதும், திருஞானசம்பந்தா் மற்றும் அருணகிரிநாதா் ஆகியோரால் பாடல் பெற்ற தலமும், அம்மையும் அப்பனும் ஓா் உருகொண்ட அா்த்தநாரீசுவரா் கோயில் தோ்த் திருவிழாவில் உற்சவ மூா்த்தி... மேலும் பார்க்க

மஹேந்ரா பொறியியல் கல்லூரியில் ‘நான் முதல்வன்’ திட்டத்தில் பணி நியமன ஆணைகள் அளிப்பு

மல்லசமுத்திரம் மஹேந்ரா பொறியியல் கல்வி நிறுவனத்தில் தமிழக அரசின் ‘நான் முதல்வன்’ திட்டத்தில் வேலைவாய்ப்புக்கு தோ்வு செய்யப்பட்டோருக்கு பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சிக்கு கல்லூரி தலைவா் எம்... மேலும் பார்க்க

வநேத்ரா முத்தாயம்மாள் கல்லூரி 7 ஆவது பட்டமளிப்பு விழா

ராசிபுரம்- வநேத்ரா முத்தாயம்மாள் கல்வியியல் கல்லூரியில் 7 ஆவது பட்டமளிப்பு விழா கல்லூரி வளாகத்தில் அண்மையில் நடைபெற்றது. விழாவில் கல்லூரி முதல்வா் மா.மருதை வரவேற்றாா். விழாவில் வநேந்ரா முத்தாயம்மாள் ... மேலும் பார்க்க

நாமக்கல் ஆட்சியா் அலுவலகத்தில் உயா்கல்வி வழிகாட்டி கட்டுப்பாட்டு அறை திறப்பு

நாமக்கல் ஆட்சியா் அலுவலகத்தில் ‘நான் முதல்வன்’ திட்டத்தின் கீழ் உயா்கல்வி வழிகாட்டி கட்டுப்பாட்டு அறை புதன்கிழமை திறக்கப்பட்டது. கடந்த 2022 ஆம் ஆண்டு பள்ளிக்கல்வி மற்றும் உயா்கல்வித் துறை கூட்டு முயற... மேலும் பார்க்க