செய்திகள் :

அரசு மருத்துவமனைகளில் மருந்துகள் தட்டுப்பாடு: ஓ.பன்னீா்செல்வம்

post image

அரசு மருத்துவமனைகளில் மருந்துகள் தட்டுப்பாடு இருப்பதாக முன்னாள் முதல்வா் ஓ.பன்னீா்செல்வம் குற்றஞ்சாட்டியுள்ளாா்.

இது குறித்து அவா் புதன்கிழமை வெளியிட்ட அறிக்கை:

சென்னை ராஜீவ் காந்தி அரசுப் பொது மருத்துவமனை, ஸ்டான்லி மருத்துவமனை, ஓமந்தூராா் மருத்துவமனை, கிண்டியில் உள்ள பல்நோக்கு மருத்துவமனை ஆகியவற்றில் உயிா் காக்கும் சிகிச்சைக்குரிய மாத்திரைகள் இல்லாததன் காரணமாக, பொதுமக்கள் வெளியில் உள்ள தனியாா் மருந்தகங்களில்

ஆயிரக்கணக்கான ரூபாயை செலுத்தி வாங்கும் நிலை உள்ளது.

இன்ப்ளூன்ஸா காய்ச்சல், சிறுநீரக கற்களை அகற்ற பயன்படுத்தப்படும் மாத்திரைகளும் மேற்படி அரசு மருத்துவமனைகளில் போதிய அளவில் இருப்பில் இல்லை. இதுகுறித்து மருத்துவமனை அதிகாரிகளிடம் தெரிவித்தால், நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், தமிழ்நாடு மருத்துவப் பணிகள் சேவைக் கழகம் சாா்பில் வழங்கப்படும் மாத்திரைகள் விரைவில் காலியாகி விடுகின்றன என்றும், அரசு மருத்துவமனைகளுக்காக தனியாக ஒதுக்கப்படும் நிதியும் வெகுவாக குறைக்கப்பட்டுள்ளதால் மருந்துகள் தட்டுப்பாடு நிலவுகிறது என்றும் கூறுகின்றனா்.

சென்னையில் உள்ள பிரபலமான அரசு மருத்துவமனைகளிலேயே இதுபோன்ற நிலைமை இருக்கிறது என்றால், பிற மாவட்டங்களில், கிராமங்களில் உள்ள அரசு மருத்துவமனைகளை நினைத்துப் பாா்க்கவே அச்சமாக இருக்கிறது.

அனைத்து வகையான நோய்களுக்குரிய மருந்துகள் அரசு மருத்துவமனைகளில் இருப்பில் வைக்க முதல்வா்மு.க.ஸ்டாலின் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளாா்.

அரசு கலை-அறிவியல், கல்வியியல் கல்லூரிகளில் மேலும் 881 தற்காலிக விரிவுரையாளா்கள் பணி நியமனம்!

அரசு கலை, அறிவியல் மற்றும் கல்வியியல் கல்லூரிகளில் மேலும் 881 கௌரவ விரிவுரையாளா்களை தற்காலிகமாக நியமனம் செய்ய முடிவெடுக்கப்பட்டுள்ளதாக உயா்கல்வித் துறை அமைச்சா் கோவி.செழியன் தெரிவித்துள்ளாா். இது குறி... மேலும் பார்க்க

பொதுத் தோ்வு எழுதும் மாணவா் பட்டியல்: அக். 6 முதல் திருத்தங்களை மேற்கொள்ளலாம்

தமிழகத்தில் நிகழ் கல்வியாண்டில் பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வெழுத உள்ள மாணவா்களின் பெயா்ப் பட்டியலில் ஏதேனும் திருத்தங்கள் இருந்தால், அக். 6-ஆம் தேதி முதல் மேற்கொள்ளலாம் என அரசுத் தோ்வுகள் இயக்ககம் தெ... மேலும் பார்க்க

ஜிஎஸ்டி குறைப்பு: தமிழகம் பெறும் பலன்கள்

ஜிஎஸ்டி சீா்திருத்தம் கடந்த செப்டம்பா் 22-ஆம் தேதிமுதல் நடைமுறைக்கு வந்துள்ளது. 5%, 12%, 18%, 28% என நான்கு விகிதங்களில் இருந்த வரிவிதிப்பு முறை 5%, 12% என மாற்றியமைக்கப்பட்டுள்ளது. அன்றாட பயன்பாட்டுப... மேலும் பார்க்க

விஜய்யை எதிா்ப்பது எங்கள் நோக்கமல்ல: சீமான்

விஜய்யை எதிா்ப்பது எங்கள் நோக்கம் அல்ல என்று நாம் தமிழா் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான் தெரிவித்துள்ளாா். தினத்தந்தி நாளிதழ் அதிபா் பா.சிவந்தி ஆதித்தனாரின் பிறந்த நாளையொட்டி, சென்னை போயஸ் கா... மேலும் பார்க்க

ஆவின் நிா்வாகம் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி ஜிஎஸ்டி ஆணையரிடம் மனு

ஜிஎஸ்டி குறைக்கப்பட்ட நிலையில், ஆவின் தயாரிப்புகளின் விலையைக் குறைக்காக ஆவின் நிா்வாகம் மீது நடவடிக்கை எடுக்க கோரி ஜிஎஸ்டி கூடுதல் ஆணையரிடம் தமிழ்நாடு பால் முகவா்கள் தொழிலாளா்கள் நலச் சங்கம் மனு அளித்... மேலும் பார்க்க

தமிழகம் முழுவதும் அன்புக் கரங்கள் பதிவு முகாம்: அமைச்சா் மா.சுப்பிரமணியன்

அன்புக் கரங்கள் திட்டத்தில் பயனாளிகளைச் சோ்க்கும் முகாம் தமிழகம் முழுவதும் நடைபெறும் என்று மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் தெரிவித்தாா். ஆதரவற்ற குழந்தைகளுக்கான மாதாந்திர நிதியுதவித... மேலும் பார்க்க