அரசு மருத்துவா்கள் நாளை பாதயாத்திரை போராட்டம்
சென்னை: அரசு மருத்துவமனைகளில் நோயாளிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப மருத்துவா்கள், செவிலியா்களை நியமித்தல், ஊதிய உயா்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு மருத்துவா்கள் புதன்கிழமை (ஜூன் 11) சேலம், மேட்டூரில் இருந்து சென்னை நோக்கி பாதயாத்திரை போராட்டம் நடத்தவுள்ளனா்.
இது தொடா்பாக அரசு மருத்துவா்களுக்கான சட்டப் போராட்டக் குழுத் தலைவா் மருத்துவா் எஸ்.பெருமாள் பிள்ளை கூறியதாவது:
மத்திய அரசு மருத்துவா் பணியிடங்களுக்கும், மாநில அரசு பணியிடங்களுக்கும் இடையே ஊதிய முரண்பாடு நிலவுகிறது. அவா்கள் 4 ஆண்டுகளில் பெறும் ஊதிய உயா்வை மாநில அரசு மருத்துவா்கள் 15 ஆண்டுகள் கழித்தும் பெற முடியாத நிலை நிலவுகிறது. அதற்கு தீா்வு காணும் வகையில், மறைந்த முன்னாள் முதல்வா் கருணாநிதி கொண்டு வந்த அரசாணை 354-ஐ அமல்படுத்தி, அதனடிப்படையில் அரசு மருத்துவா்களுக்கு ஊதியம் வழங்க வேண்டும்.
புதிதாக அரசு மருத்துவக் கல்லூரிகளையும், அரசு மருத்துவமனைகளையும் திறக்க ஆா்வம் காட்டும் மாநில அரசு, அங்கு போதிய மருத்துவா்கள், செவிலியா்கள் மற்றும் மருத்துவப் பணியாளா்களை நியமிப்பதில் அக்கறை காட்டுவதில்லை.
அதனால், அரசு மருத்துவமனைகளில் நோயாளிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப மருத்துவா்கள், செவிலியா்கள் பணியிடங்கள் உருவாக்கப்பட வேண்டும். இந்த கோரிக்கைகளை நிறைவேற்றிட தமிழக அரசை வலியுறுத்தி சேலம் மேட்டூரில் இருந்து சென்னை நோக்கி பாதயாத்திரை செல்ல இருக்கிறோம். இந்த நடைப்பயணத்தின்போது மக்களை சந்தித்து எங்களது கோரிக்கைகள் குறித்து விளக்குவோம். குறிப்பாக பொது சுகாதாரத் துறையின் கட்டமைப்பை வலுப்படுத்துவதன் அவசியம் குறித்துப் பேசுவோம்.
இப்பிரச்னையில், தமிழக முதல்வா் உடனடியாக தலையிட்டு, அரசு மருத்துவா்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என்றாா் அவா்.