செய்திகள் :

அரசு மருத்துவா்கள் நாளை பாதயாத்திரை போராட்டம்

post image

சென்னை: அரசு மருத்துவமனைகளில் நோயாளிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப மருத்துவா்கள், செவிலியா்களை நியமித்தல், ஊதிய உயா்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு மருத்துவா்கள் புதன்கிழமை (ஜூன் 11) சேலம், மேட்டூரில் இருந்து சென்னை நோக்கி பாதயாத்திரை போராட்டம் நடத்தவுள்ளனா்.

இது தொடா்பாக அரசு மருத்துவா்களுக்கான சட்டப் போராட்டக் குழுத் தலைவா் மருத்துவா் எஸ்.பெருமாள் பிள்ளை கூறியதாவது:

மத்திய அரசு மருத்துவா் பணியிடங்களுக்கும், மாநில அரசு பணியிடங்களுக்கும் இடையே ஊதிய முரண்பாடு நிலவுகிறது. அவா்கள் 4 ஆண்டுகளில் பெறும் ஊதிய உயா்வை மாநில அரசு மருத்துவா்கள் 15 ஆண்டுகள் கழித்தும் பெற முடியாத நிலை நிலவுகிறது. அதற்கு தீா்வு காணும் வகையில், மறைந்த முன்னாள் முதல்வா் கருணாநிதி கொண்டு வந்த அரசாணை 354-ஐ அமல்படுத்தி, அதனடிப்படையில் அரசு மருத்துவா்களுக்கு ஊதியம் வழங்க வேண்டும்.

புதிதாக அரசு மருத்துவக் கல்லூரிகளையும், அரசு மருத்துவமனைகளையும் திறக்க ஆா்வம் காட்டும் மாநில அரசு, அங்கு போதிய மருத்துவா்கள், செவிலியா்கள் மற்றும் மருத்துவப் பணியாளா்களை நியமிப்பதில் அக்கறை காட்டுவதில்லை.

அதனால், அரசு மருத்துவமனைகளில் நோயாளிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப மருத்துவா்கள், செவிலியா்கள் பணியிடங்கள் உருவாக்கப்பட வேண்டும். இந்த கோரிக்கைகளை நிறைவேற்றிட தமிழக அரசை வலியுறுத்தி சேலம் மேட்டூரில் இருந்து சென்னை நோக்கி பாதயாத்திரை செல்ல இருக்கிறோம். இந்த நடைப்பயணத்தின்போது மக்களை சந்தித்து எங்களது கோரிக்கைகள் குறித்து விளக்குவோம். குறிப்பாக பொது சுகாதாரத் துறையின் கட்டமைப்பை வலுப்படுத்துவதன் அவசியம் குறித்துப் பேசுவோம்.

இப்பிரச்னையில், தமிழக முதல்வா் உடனடியாக தலையிட்டு, அரசு மருத்துவா்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என்றாா் அவா்.

எம்.பி. ஆகிறார் கமல்! 6 பேரின் வேட்புமனுக்களும் ஏற்பு!

தமிழ்நாட்டில் மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு வேட்புமனு தாக்கல் செய்த கமல்ஹாசன் உள்பட திமுக, அதிமுக வேட்பாளர்கள் 6 பேரின் வேட்புமனுக்களும் ஏற்றுக்கொள்ளப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் இரு... மேலும் பார்க்க

இந்தியாவுக்கே தலைமை.. நாட்டின் என்ஜின் தமிழகம்தான்: மு.க. ஸ்டாலின்

சென்னை: சென்னை தரமணியில் உலக வங்கியின் சார்பில் அமைக்கப்பட்டுள்ள நவீன உலகளாவிய வணிக மையத்தை தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் திறந்து வைத்து உரையாற்றினார்.அப்போது, 9.69%பொருளாதார வளர்ச்சியோடு இந்தியாவின் ... மேலும் பார்க்க

மதுரை கூடலழகர் பெருமாள் கோயில் தேரோட்டம்!

மதுரை அருள்மிகு கூடலழகர் பெருமாள் கோயில் வைகாசிப் பெருந்திருவிழா திருத்தேரோட்டம் இன்று(ஜூன் 10) கோலாகலமாக நடைபெற்றது. விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.108 திவ்ய தேசங்... மேலும் பார்க்க

பள்ளிகளில் நடத்தப்படும் கோச்சிங் சென்டர்களுக்குத் தடை செய்ய பரிந்துரை!

சென்னை: பள்ளிகளில் மற்றும் பள்ளிகளால் நடத்தப்படும் கோச்சிங் சென்டர்களை தடை செய்யவோ அல்லது வரைமுறைப்படுத்தவோ குழு அமைக்கப்பட வேண்டும் என்று மாநில அரசுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.மாநில கல்விக் கொள்... மேலும் பார்க்க

நீட் தேர்வில் மின் தடை: சிசிடிவி காட்சிகளை சமர்ப்பிக்க உயர்நீதிமன்றம்

சென்னை: நீட் தேர்வின்போது சென்னை உள்ளிட்ட இடங்களில் மழை பெய்து மின் தடை ஏற்பட்ட தேர்வுக் கூடத்தில் பதிவான சிசிடிவி காட்சிகளை சமர்ப்பிக்குமாறு மத்திய அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.மி... மேலும் பார்க்க

சென்ட்ரல் மெட்ரோ ரயில் நிலையத்தில் புத்தகப் பூங்கா: முதல்வர் திறந்து வைத்தார்!

சென்னை சென்ட்ரல் மெட்ரோ ரயில் நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள புத்தகப் பூங்காவை முதல்வர் மு.க. ஸ்டாலின் திறந்து வைத்தார்! சென்னை, சென்ட்ரல் மெட்ரோ ரயில் நிலையத்தில் (Ticket Counter அருகில்) இன்று(ஜூன் 10... மேலும் பார்க்க