செய்திகள் :

தென் ஆப்பிரிக்காவில் மாயமான சிறிய ரக விமானம்! பயணிகள் 3 பேரும் பலியானதாக அறிவிப்பு!

post image

தென் ஆப்பிரிக்கா நாட்டில் மாயமான, சிறிய ரக விமானத்தில் பயணித்த 3 பேரும் பலியாகியதாக அந்நாட்டு அரசு அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர்.

தென் ஆப்பிரிக்காவின் குவாசுலு-நடால் மாகாணத்தின் மீது பறந்த சிறிய ரக விமானம், கடந்த ஜூன் 8 ஆம் தேதி மாலை 3 மணியளவில் மாயமானது. இதனைத் தொடர்ந்து, அந்நாட்டின் விமான மீட்பு ஒருங்கிணைப்பு நிலையம் சார்பில் மாயமான விமானத்தைத் தேடும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன.

இதுகுறித்து, குவாசுலு-நடால் மாகாண அதிகாரிகள் நேற்று (ஜூன் 9) வெளியிட்ட அறிக்கையில், விர்ஜீனியா விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட சிறிய ரக விமானம் அதன் இலக்கை அடையவில்லை எனவும் லேடிசிமித் பகுதிக்கு அருகில் அதன் தொடர்பு முழுவதுமாகத் துண்டிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், தென் ஆப்பிரிக்க விமான மீட்பு ஒருங்கிணைப்பு நிலையம், அந்தச் சிறிய ரக விமானத்தில் பயணித்த 3 பேரும் பலியாகியதை உறுதி செய்துள்ளதாக அம்மாகாண அதிகாரிகள் இன்று (ஜூன் 10) அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.

முன்னதாக, தென் ஆப்பிரிக்க வானிலை நிலையம், குவாசுலு-நடால் மாகாணத்தில் ஜூன் 7 முதல் 11 ஆம் தேதி வரை இடி மின்னலுடன் கூடிய மழை மற்றும் பனிப்பொழிவு ஏற்பட்டக் கூடும் என எச்சரித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க: ஈரானில் 8 புதிய அணு உலைகளை உருவாக்கும் ரஷியா!

லாஸ் ஏஞ்சலீஸ்: ஆப்பிள் ஸ்டோரை சூறையாடிய முகமுடி கொள்ளையர்கள்!

லாஸ் ஏஞ்சலீஸ் வன்முறையைப் பயன்படுத்தி முகமூடியுடன் ஆப்பிள் மொபைல் கடையை சூறையாடிய கொள்ளையர்களால் அங்கு பரபரப்பான சூழல் ஏற்பட்டுள்ளது. அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் கடுமையான குடியேற்ற கொள்கைகளுக... மேலும் பார்க்க

இந்திய வீரர் சுபான்ஷு சுக்லாவின் விண்வெளிப் பயணம் மீண்டும் ஒத்திவைப்பு!

‘ஆக்ஸிம்-4’ மிஷனில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக இந்திய வீரர் சுபான்ஷு சுக்லாவின் விண்வெளிப் பயணம் ஒத்திவைக்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவில் செயல்படும் மனித விண்வெளிப் பயண சேவ... மேலும் பார்க்க

யேமனில் இஸ்ரேல் கடற்படை முதல்முறையாகத் தாக்குதல்

துபை: யேமனின் ஹூதி கிளர்ச்சியாளர்கள் கட்டுப்பாட்டிலுள்ள துறைமுக நகரான ஹூதைதாவில் இஸ்ரேல் கடற்படை முதல்முறையாக செவ்வாய்க்கிழமை தாக்குதல் நடத்தியது.தங்களின் அல்-மசீரா தொலைக்காட்சி மூலம் ஹூதி கிளர்ச்சியா... மேலும் பார்க்க

உக்ரைனில் ரஷியா மீண்டும் தீவிர தாக்குதல்

கீவ்: உக்ரைன் தலைநகர் கீவ் மற்றும் தெற்கு துறைமுக நகரமான ஒடெஸா மீது ரஷியா செவ்வாய்க்கிழமை அதிகாலை ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகளைக் கொண்டு தீவிர தாக்குதல் நடத்தியது. இதில் மூவர் உயிரிழந்தனர்; 13 பேர் காயம... மேலும் பார்க்க

ஆஸ்திரியா பள்ளியில் துப்பாக்கிச்சூடு: 9 பேர் உயிரிழப்பு

கிராஸ் (ஆஸ்திரியா): ஆஸ்திரியாவின் இரண்டாவது பெரிய நகரமான கிராஸில் உள்ள ஓர் உயர்நிலைப் பள்ளியில் முன்னாள் மாணவர் செவ்வாய்க்கிழமை நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 9 பேர் உயிரிழந்தனர். தாக்குதல் நடத்தியவர் ப... மேலும் பார்க்க

இஸ்ரேலில் இருந்து கிரெட்டா தன்பர்க் வெளியேற்றம்

ஜெருசலேம்: காஸாவை நோக்கிச் சென்று கொண்டிருந்த நிவாரணக் கப்பலில் கைது செய்யப்பட்ட சுற்றுச்சூழல் ஆர்வலர் கிரெட்டா தன்பர்க் தங்கள் நாட்டில் இருந்து வெளியேற்றப்பட்டதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது.இது குறித்து... மேலும் பார்க்க