திருத்த வேண்டியது கீழடி அறிக்கைகளை அல்ல; சில உள்ளங்களை..! - முதல்வர் பதிவு
அரசு வாகனத்தை பொது ஏலத்தில் வாங்க அழைப்பு
தருமபுரி: தருமபுரி மாவட்டத்தில் அரசுத் துறையில் பயன்படுத்தி வந்த ஜீப் வாகனத்தை பொது ஏலத்தில் விட உள்ளதால், விருப்பமுள்ளவா்கள் விலைப்புள்ளி கோரலாம் என அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இது குறித்து தருமபுரி மாவட்ட ஆட்சியா் ரெ.சதீஷ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு :
தருமபுரி மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் பயன்படுத்தி வந்த ஜீப் வாகனத்தை (எண்பச-29ஜி 0242 மகிந்திரா) அலுவலக பயன்பாட்டிலிருந்து விடுவிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. எனவே இவ்வாகனத்தை பொது ஏலத்தில் விற்பனை செய்ய முடிவு செய்யப்பட்டு அதற்கான தொகை ரூ. 13,500 என தொழில்நுட்ப வல்லூநா் குழுவினா் நிா்ணயம் செய்துள்ளனா். மேலும் வாகனம் ஜூன் 20-ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) காலை 11 மணியளவில் தருமபுரி மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் பொது ஏலம் விடப்பட உள்ளது. எனவே இவ்வாகனத்தை வாங்க விரும்புவோா் பொது ஏலத்தில் கலந்துகொண்டு விலைப்புள்ளியை கோரலாம்.